Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

மக்கள் வாழ்வில் மரங்கள்

மனிதன் இன்றி மரங்கள் இருக்கும் மரங்கள் இன்றி மனிதன் இல்லை. மரங்களைப் பாருங்கள். நமக்காகவே தம்மை அர்ப்பணித்துப் பிறருக்கு முழுவதும் பயன்படும் வாழ்க்கை உடையனவனாக விளங்குகின்றன. மரங்கள் சுற்றுப்புறச் சூழலில் நல்ல தட்ப வெப்பநிலையைப் பேணுவதுடன் காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்இழுத்து காற்று நஞ்சாகாமல் தடுத்துவிடுகின்றன. நன்றாக வளர்ந்த மரம் ஒன்று (வேம்பு, புங்கை) பத்து குளிர்சாதனங்களால் ஏற்படும் வெப்பத் தணிப்பைக் காட்டிலும் கூடியவெப்பத்தைத் தணித்துவிடும். வேளாண்மைத் தொழில் உருவாகுவதற்கு முன்பே மனித இனத்தை மரங்களே […]

Posted in கட்டுரைகள், No Comments »
எல்லாப் பழங்களும் தேவையே

எல்லாப் பழங்களிலும் மனிதனுக்குத் தேவையான கனியுப்புக்கள், விற்றமின்கள், தாதுப்பொருள்கள், நார்ப்பொருள்கள், மாப்பொருள்கள் சில அளவு வித்தியாசத்துடன் காணப்படுகின்றன. குடல் சுத்தமாக இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. இதனை வாழைப்பழம் செய்கின்றது. அத்துடன் குடற்புண்களையும் மாற்றவல்லது. தினமும் ஒரு பழமாவது குறைந்தது சாப்பிடுவதன்மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். இதனால் கொழுப்புச்சத்துக் கிடையாது. இருதய நோயாளிகள் சாப்பிடலாம். மாதுளம்பழம் சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் ஆறுமாதம் வரை பழுதடையாமல் வைத்திருக்கலாம். விற்றமின் C அதிக அளவில் உள்ள பழம் நெல்லிக்கனி (பெருநெல்லி) அதற்கு அடுத்த […]

Posted in கட்டுரைகள், No Comments »
கைகளைக் கழுவுவது எப்படி?

நீங்கள் தினமும் எத்தனை சந்தர்ப்பங்களில் உங்கள் கைகளைக் கழுவுகின்றீர்கள்?  இதோசில பயன்தரும் குறிப்புக்கள். கைகழுவுவதால் தடிமன், இன்புளுவென்சா, ஈரழற்சி A, கிருமிகளால் உண்டாகும் வயிற்றோட்டம், புறொன்கியோலைற்றிஸ் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம். கைகழுவ வேண்டிய சில சந்தர்ப்பங்கள் : உணவைத் தயாரிக்க முன்பு: இறைச்சி, கோழி போன்றவற்றைச் சுத்தம் செய்தபின்பு, சாப்பிட முன்பும் பின்பும் கழிப்பறையைப்பாவித்த பின்பு, சுகாதாரத் துவாய்களை மாற்றிய பின்பு காயங்களுக்கு மருந்திட முன்பும் பின்பும் நோயாளிகளைக் கவனிக்க முன்பும் பின்பும். வைத்தியசாலைக்குச் சென்று வந்த […]

Posted in கட்டுரைகள், No Comments »
நீர் மூலம் பரவும் நோய்கள்

உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு இன்றியமையாததாக உள்ள நீர்மூலம் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. நீரானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிருகங்களினதும், மனிதனதும் மலங்களிற் காணப்படுகின்ற நோயைத் தோற்றுவிக்கின்ற கிருமிகளால் மாசடைகிறது. இந்த அசுத்தமான நீரை அருந்தும்போது அதிலுள்ள நோய் கிருமிகள் மனிதனது இரைப்பை, குடல் என்பவற்றிற்குள் சென்று பெருகிப் பல நோய்களைத் தோற்றுவிக் கின்றன. வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல், கொலரா, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளைவாதம் போன்றவை பொதுவாக நீர்மூலம் பரவும் நோய்களாகும். மழைக்காலத்திலும், கோடைப்பருவத்திலும் நீர் […]

Posted in கட்டுரைகள், No Comments »
முட்டை ஒர் உன்னதமான உணவு

முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகின்றது. குருதி அமுக்கம், இருதயநோய், நீரிழிவுநோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள்வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம் பெறவேண்டும். சுகதேகியாக இருப்பவர்களும், சிறுவர்களும் அதிகவு முட்டைகளை உணவிலே […]

Posted in கட்டுரைகள், Comments Off on முட்டை ஒர் உன்னதமான உணவு
ஆரோக்கியமானவர்கள் கல்சியக் குளிசைகளைப் பாவிப்பது பாதுகாப்பானது அல்ல

மேலைத்தேச நாடுகளிலே கல்சியக் குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிகைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன. மேலைத்தேசங்களிலே வசிக்கும் எமது உறவினர்கள் நல்ல நோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிகைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்தக் குளிகைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்திலே எமது குடி தண்ணீரில் பெருமளவு […]

Posted in கட்டுரைகள், Comments Off on ஆரோக்கியமானவர்கள் கல்சியக் குளிசைகளைப் பாவிப்பது பாதுகாப்பானது அல்ல
ஒரு கணம் சிந்தித்தால் என்ன?

யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக் கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இத்தனை தற்கொலைகள்?யாரில் என்ன தவறுள்ளது? நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் […]

Posted in கட்டுரைகள், Comments Off on ஒரு கணம் சிந்தித்தால் என்ன?
பெறுமதி மிக்க உங்கள் பாதங்களை பாதுகாப்பது உங்கள் கைகளிலேயே

பின்வரும் மூன்று பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்களுடன் கூடியதாகக் காணப்படுகின்றது. ஒருவருடைய வாழ்நாளில் அவரைப் பல ஆயிரம் கிலோமீற்றர் வரை காவிச் செல்வது அவரது பாதங்களாகும். இவ்வாறு பாதங்கள் எமது உடலைக் காவிச் செல்லும் போது காலில் பல்வேறு சேதங்கள் (உரசல் காயங்கள், கிழிவுகள், வெடிப்புக்கள்) ஏற்படுகின்றன. ஒரு வாகனத்தினுடைய அதிர்வு உறிஞ்சிகள் போல் செயற்படுவதும் எமது பாதங்களே. இவ்வாறு மகத்தான சேவை புரிகின்ற எமது பாதங்களுக்கு ஒழுங்கான கவனிப்பும் பராமரிப்பும் இன்றியமையாதவை. ஒரு வாகனத்தைப் பல மைல்களுக்குச் […]

Posted in கட்டுரைகள், Comments Off on பெறுமதி மிக்க உங்கள் பாதங்களை பாதுகாப்பது உங்கள் கைகளிலேயே
கிரமமான மருந்துப்பாவனை (Drug Compliance)

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும் கூட, சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களான, மருந்துகளை ஒழுங்மகாகப் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாகும். உதாரணமாக: சலரோகத்துக்குப் பாவிக்க வேண்டிய மருந்து […]

Posted in home, கட்டுரைகள், Comments Off on கிரமமான மருந்துப்பாவனை (Drug Compliance)
சலரோக நோயால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கக் கையாள வேண்டியவை

கால்களைக் கழுவுதல் தினந்தோறும் பாதங்களைக் காரத்தன்மை குறைந்த சவர்க்காரத்தைப் பயன்படுத்தி நன்றாக கழுவவும். பின்னர் மென்மையான துவாயினால் துடைக்கவும். துடைக்கும் போது விசேடமாகப் பெருவிரல் பகுதி, விரல் இடைவெளிகளில் கவனம் செலுத்தவும். பாதங்களை உலர்வான நிலையில் பேணவும். ஆயினும் அதிகம் உலர்வான நிலை காணப்படுமாயின் வெடிப்புக்கள் ஏற்பட்டு பற்றீரியாக்கள் பரவலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிக உலர்த்தலைத் தடுக்க Lanolin or Vaseline பாவிக்கவும். களிம்புகள் படுக்கை விரிப்பில் படுவதை தடுப்பதற்காகப் பழைய காலுறையை அணிந்து கொள்ளவும். இயல்பாகவே […]

Posted in கட்டுரைகள், Comments Off on சலரோக நோயால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கக் கையாள வேண்டியவை
« Older Entries
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com