You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

நீரிழிவு நோயின் போது குருதியில் சீனியின் அளவு அதிகரித்துக் காணப்படும். இது இன்சுலின் என்னும் ஓமோன் பற்றாக்குறையினாலோ அல்லது இன்சுலின் ஓமோனை உடற்கலங்கள் எதிர்ப்பதனாலோ உண்டாகும். இந் நோயைப் பின்வரும் முறைகளினால் கட்டுப்படுத்தலாம். இம் மூன்று முறையினாலும் நீரிழிவு நோயைத் திறமையான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் போதிய அளவில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் அளவாக உண்ண வேண்டிய உணவுகள் பொதுவாகப் பாவிக்கக்கூடிய மரக்கறிகள் பழங்கள் ஒரு நாளிற்கு […]

கர்ப்பகால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 24ஆம் மற்றும் 28ஆம் கிழமைகளிலே ஏற்படுகின்றது. எனவே கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான பரிசோதனை 24ஆம் மற்றும் 28ஆம் கிழமைகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பத்தின் போது (சூழ்வித்தகத்தினால்) (Placenta) சுரக்கப்படும் சில ஹோமோன்கள் தாயின் இன்சுலினை சரியாக தொழிற்படவிடாமல் தடுக்கின்றன. இதனால் இன்சுலினுக்கான தடை (Insulin Resistence) அதிகரிக்கப்படுகின்றது. இதனால் ஒரு கர்ப்பிணித் தாயிற்கு சாதாரண நிலையிலும் பார்க்க இரண்டு அல்லது […]

இது நீரிழிவு நோயாளிகளில் எவ்வாறு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்? இனி இதை எவ்வாறு இனங்காண்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்? இவ்வாறு இனங்கண்டபின் உடனடியான அடுத்த கட்ட நடவடிக்கையாக நீரிழிவு நோயாளி ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்? குறிப்பு: ‘வருமுன் காப்போம்’ என்பதற்கிணங்க எவ்வாறு கைப்போகிளைசிமிக் (Hypoglycemic) தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாப்பது என்பது பற்றி நீரிழிவு நோயாளி ஒருவர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. ச.ஞானக்குமரன்

எம்மை பொறுத்தவரையில் மக்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. வாழ்க்கை முறை இயந்திரமயமானதாக இருப்பதால் தற்கால மனிதன் போதியளவு உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இன்றி வாழ்வதுடன் உடற்தேவைக்கு அதிகமானளவு உணவுகளையும் உட்கொள்கின்றான். இதனால் உயர்குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றான். ஓவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் அன்றாட உடற்தொழிற்பாடுகளும் முறையான உடற்பயிற்சியும் எமக்கு புத்துணர்வை ஏற்படுத்துவதுடன் உடலின் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கின்றது. மேலும் இவை உடற்தசைக் கலங்களின் தொழிற்பாடுகளையும் அதிகரிக்கின்றது. தசைக்கலங்களின் தொழிற்பாடு அதிகரிப்பதனால் […]

உலகில் நீரிழிவு நோய்நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந் நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களை பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030 ம் ஆண்டளவில் மொத்த […]

நீரிழிவு என்னும் நிலை ஏற்ப்படுவதற்கு காரணமாக அமைவது உடலில் காணப்படும் இன்சுலின் எனும் ஹோர்மோனின் உற்ப்பத்தி குறைவடைதல் அல்லது அதன் செயற்ப்பாட்டில் ஏற்படும் குறைபாட்டின் காரணத்திலாகும். குருதியில் காணப்படும் குளுக்கோஸானது உடற்கலங்களுக்குள் ஊடுறுவுவதற்கு இன்சுலின் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இன்சுலின் இன்றி உங்குளுக்குத் தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. உடலில் இன்சுலின் அளவு குறையும்போது உடற்கலங்களுக்குள் குளுக்கோஸ் உட்புக முடியாத நிலையில் குருதியில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய் நிலை ஏற்படுகிறது. […]

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய பரிதாபநிலை யையும் ஏற்படுத்துகின்றன. நீரிழிவு நோயாளர்களுக்கு ஏன் காலில் புண்கள் ஏற்படுகின்றன? நீரிழிவு பாதிப்பினால் தசைகளில் ஏற்படும் வலிமை இழப்புக் காரணமாக, பாதங்களில் சாதாரணமாகக் காணப்படும் வளைவுத் தன்மைகள் சீரற்றுப் போகின்றன. […]

நீரிழிவு நோயானது,சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படம் போது குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால் ஏற்படுகின்றது. அதிகர்க்கும் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகின்றது.முக்கியமாக கண்,நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாகப் பாதிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களாக உலகலாவிய ரீதியில் நீரிழிவு நோயானது பெரமளவில் அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலரையும் நீரிழிவு சரி சமனாகவே பாதிக்கின்றது. நீரிழிவு ஏற்படும் […]

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியவசியமானது போசனையான உணவு. இயற்கையின் மூல வளங்களைப் பயன்படுத்தி அதனோடு இணைந்து செய்யும் தொழில் தான் விவசாயம். எமக்கு சிறந்த போசனையை தருவது இந்த விவசாய உற்ப்பத்தி பொருட்களே. எங்கள் வீட்டு தோட்டங்களாலும் சேதன விவசாய முறைகளாலும் நாம் போசணையான உணவப்பொருட்களை பெற்றுக் கொள்கின்றோம். இது தவிரவும் எமது நாட்டு சீதோவ்ண நிலையும் எமக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. ஆகவே எமது சுற்றாடலில் இயல்பாகவே கிடைக்கும் கீரை வகைகளின் எண்ணிக்கையோ சொல்லில் அடங்காது. எமது உடல்நோய் […]

உடலில் ஊனத்தை ஏற்படுத்தி,இன்னொருவரில் சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தும் நோய்களில் தொழுநோயும் ஒன்றாகும். இது பரம்பரை நோயல்ல. இது ஒரு தொற்று நோயாகும். நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் சிந்தும் சிறுதுளிகளினால் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு பரம்புகின்றது. இதன் நோயரும்பு காலம் 3-5 வருடங்கள் வரைநீண்டு காணப்படலாம். இது எல்லா வயதினரையும் ஆண், பெண் இரு பாலினரையும் தாக்கக் கூடியது. பெரும்பாலும் பொருளாதார வளம் குன்றிய குடும்பத்தினரே இலகுவில் பாதிப்புறுகின்றனர். தோல் மற்றும் நரம்புகளையே இந்த நோய் […]