Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    May 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து விடுபடுதல்

டெங்கு காய்ச்சல் இன்று எம்மிடையே விரைவாக பரவிவருகின்ற காய்ச்சல் ஆகும். பல உயிர் இழப்புக்கழையும் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுத்துகின்றது. டெங்கு காய்ச்சல் Dengue Virus எனப்படுகின்ற Flavivirus இனத்தை சேர்ந்த ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுவதாகும். இந்த வைரஸில் பிரதானமாக நான்கு வகையான பிற பொருள்களைக்கொண்ட (Antigenic) வைரஸ் வகைகள் உள்ளன. இந்த நோய்ககுரிய வைரஸ், பிரதானமாக பகல் வேளைகளில் கடிக்கின்ற ( Adesacgypti என்ற ஒரு வகையான நுளம்பால் ஒரு நோயுற்ற மனிதனில் […]

Posted in கட்டுரைகள், No Comments »
குழந்தைகளை காப்பது எப்படி? வீட்டு விபத்துக்களைத் தவிர்ப்போம்.

வீட்டிலே ஏற்படும் விபத்துக்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. அனேகமான வீட்டு விபத்துக்கள் சிறுவர்களுக்கு ஒரு வயதின் பின்பே நிகழ்கின்றது. ஏனெனில் குறுநடைபோடும் குழந்தைகள் (toddlers)  அனைத்தையும் ஆராயும் தன்மையும்,  வாயில் எதனையும் வைத்து கடிக்கும் இயல்பும்  பெரியவர்கள் செய்வதை பார்த்து தாமும் அதே போல் செய்யும் பழக்கமுள்ள குறும்புக்காரர்களாக இருப்பதே யாகும். எவ்வாறான வீட்டு விபத்துக்கள் சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றன? சிறுபிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வீட்டு விபத்துக்களில் மிகவும் பொதுவாக காணப்படக்கூடியவை […]

Posted in கட்டுரைகள், No Comments »
2030 ஆம்ஆண்டளவில் நீர்வெறுப்பற்ற உலகம்

ரேபிஸ் என்பது எம்மவர் மத்தியில் விசர் நாய்க்கடி வியாதியென அறியப்பட்ட ஒரு நோய். தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ்வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்ரெம்பர் 28ஆம் திகதி உலக ரேபிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ்பாஸ்டர் இறந்த தினமான செப்ரெம்பர் 28ஆம்திகதி உலகளாவிய நீர்வெறுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என்ற தன் னார்வ அமைப்பு, ரேபிஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து “உலக […]

Posted in கட்டுரைகள், Comments Off on 2030 ஆம்ஆண்டளவில் நீர்வெறுப்பற்ற உலகம்
உலக இதய மீளியக்க தினம்

இருதய மீள் இயக்கம் எனும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை உங்கள் எண்ணங்களின் தோன்றுவது கண்கூடு. ஆனால் இந்த இருதய மீள் இயக்கம் என்பது உங்கள் அண்மையில் உள்ளவர் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் (அதாவது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முதல்) இதயத்துடிப்பு நிறுத்தப்படுமானால் அவர் இறப்பு நிலைக்கு செல்வதற்கு முதல் அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலான நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் சி.பி.ஆர் என்ற சொற்பதத்தால் வழங்கப்படும் ஒரு அவசர சிகிச்சையாகும். இந்த நிலைக்கு அதாவது […]

Posted in கட்டுரைகள், Comments Off on உலக இதய மீளியக்க தினம்
டெங்குக் காய்ச்சல் அபாயகரமானது! அசட்டையாக இருக்காதீர்கள்!!

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாடுமுழுவதும் 22,562 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்சேர்க்கப்பட்டுள்ளார்கள்.இதில் சுமார் 1385 பேர் யாழ்.மாவட்டத்தில் மட்டும்பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் 14 பேர் உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டெங்குக் காய்ச்சல் வருடம் முழுவதும் ஏற்பட்டாலும் நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான மாரி காலத்தில்தான் வட பகுதியில் அதிகமாக ஏற்படுகின்றது. மாரி காலத்தில் அதிக நீர்தேங்கும் இடங்களால் ஏற்படும் நுளம்புப் பெருக்கம் இதற்குக்காரணமாகும். டெங்குக்காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது? ஈடீஸ் (Aedes) எனப்படும் […]

Posted in கட்டுரைகள், No Comments »
மாணவர் நன்னிலை மையம்

மனித வாழ்வுச்சக்கரமானது பல்வேறு தேவைகளையும் அவற்றை அடைவதனையும் மையமாகக்கொண்டு உருண்டோடுகின்றது. இந்த வாழ்வின் நகர்வுக்கு உடல் ஆரோக்கியமும் வாழ்வின் முழுமைக்கு சமூகத்துடனான தொடர்பும் அவசியமாகக் காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தை வழங்குவதற்கு சிறந்த சுகாதாரம் பங்களிப்புச் செய்வதனைப் போன்று சமூக ஊடாட்டத்தை ஏற்படுத்துவதில் கல்விக்கு அளப்பெரிய பங்கு உண்டு. கல்வி மூலமாக வரும் அறிவு வளர்ச்சி சமூக விருத்தியை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் கல்வியானது மனித விருத்தி கட்டத்தில் பல்வேறு மட்டத்தில் வழங்கப்பட்டு வருவது என்பது நாம் அறிந்ததே. […]

Posted in கட்டுரைகள், Comments Off on மாணவர் நன்னிலை மையம்
மழைகாலமும் மழலைகளின் நோய்களும்

மழைகாலம் தொடங்கி விட்டது. நோய்நொடிகளும் இலகுவில் குழந்தைகளை அணுகத் தொடங்கிவிடும். நாம் கவனமாக இருப்பதன் மூலம் அவற்றிலிருந்து குழந்தைகளாக் காப்பாற்றலாம். மழைகாலங்களில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள் பின்ருவன தடிமனும், சளிக்காய்ச்சலும். தொண்டைமுனை அழற்ச்சி வயிற்றுளைவும் வயிற்றோட்டமும் சாதாரண வைரசு காய்ச்சல் டெங்கு காய்ச்சல் தோற்றுபுண்கள் நீர்சிரங்கு முட்டு வருத்தம் ( அஸ்துமா) விஷ ஜந்துக்களின் கடி மழைகாலங்களில் காணப்படும் வெப்பநிலை மாற்றங்களும், அதிக ஈரப்பதனும் ஈரலிப்பான சூழலும் சுவாசத் தொகுதியை பாதிக்கக்கூடிய வைரசுக்களினதும், பக்றீறியாக்களும் வளர்ச்சிக்கு ஏதுவாகின்றது. […]

Posted in கட்டுரைகள், No Comments »
மகிழ்ச்சி

மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் என்னென்ன இருக்கவேண்டும் என்று எம்மிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கின்றது. மகிழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். பேராசிரியர் லோட் ரிச்சாட் லேயாட் மகிழ்ச்சி என்பதைப் பற்றி கூறும் போது “மகிழ்ச்சி என்பது உங்கள் எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கிடைப்பதையும் சமன் செய்வதாகும். ஒன்று நீங்கள் விரும்புவது எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது […]

Posted in கட்டுரைகள், Comments Off on மகிழ்ச்சி
நீரிழிவு உள்ளவர்களுக்கு சுவையான உணவுமுறை

நீரிழிவு உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளன. இந்த உணவு வகைகள் சுவை நிறைந்தனவாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமையும். சுவையாக எவற்றை உண்ண முடியும்? முட்டை, பால், கோழி இறைச்சி, மீன், இறால், தயிர், மோர் போன்றவை அதிக புரதத்தையும் விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்களையும் கொண்டவை. இவற்றை உங்களுக்கு பிடித்த சுவையானவடிவத்தில் தயார்செய்து உண்ணமுடியும். சமையலின் பொழுது வாசனைத் […]

Posted in கட்டுரைகள், Comments Off on நீரிழிவு உள்ளவர்களுக்கு சுவையான உணவுமுறை
மன அழுத்தத்தால் வரும் பிரச்சனைகள்

எமது சமுதாயத்தில் இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றோர் அதிகளவாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைக்கு அதிகரித்த வேலைப்பளு, ஆடம்பர வாழ்க்கை முறை, நாகரிக மாற்றம், நேரமுகாமைத்துவமின்மை , அதிகரித்த தேவைகள் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கூறிக்கொண்டே போகமுடியும். இன்றைய காலப்பகுதியில் அதிகரித்த மன அழுத்தம், அந்த மன அழுத்தத்தைச் சரியாகக் கையாளுகின்ற திறமைக் குறைவு இவற்றினால் பல்வேறு நோய்கள் மற்றும் சமூக, உளப்பிரச்சினைகள் என்பன ஏற்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாதிப்பை எதிர் […]

Posted in கட்டுரைகள், Comments Off on மன அழுத்தத்தால் வரும் பிரச்சனைகள்
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com