Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

அழுத்தங்களை வெற்றி கொள்ளுங்கள்

அழுத்தம் (Stress) என்பது: நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது, நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவே இருக்க முடியும். Stress அவசியமான ஒன்று:பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு (Stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் Stress இற்கு […]

Posted in கட்டுரைகள், Comments Off on அழுத்தங்களை வெற்றி கொள்ளுங்கள்
வயிற்றோட்டம்

ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் நீராக மலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும் போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தை தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும். நோய்க் கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள் வயிற்றோட்டத்தை தவிர்க்கும் முறைகள் வயிற்றோட்டத்திற்கான சிகிச்சை […]

Posted in கட்டுரைகள், Comments Off on வயிற்றோட்டம்
குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குப் பின்பு உணவு கொடுப்பது எவ்வாறு?

உங்கள் வீட்டில் 6 மாதத்தினை அடையும் குழந்தை உள்ளதா? அவ்வாறாயின் நீங்கள் இக்கட்டுரையை கவனத்துடன் வாசியுங்கள். உங்கள் குழந்தைக்கான தாய்ப்பாலுடன் கூடிய உணவூட்டலுக்குத் தயாராவதற்கு இது துணை புரியும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதுவரை கற்கண்டு நீர், கொதித்தாறிய நீர், கொத்தமல்லி, பணங்கட்டி, குளுக்கோசு நீர் என்பன கொடுக்கத்தேவையில்லை. தாய்ப்பாலிலுள்ள ஊட்டச்சத்தும் நீரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் பசியை ஆற்றவும் போதுமானது. ஆறு மாத முடிவில், மேலதிக ஊட்டச்சத்துக்களைப் […]

Posted in கட்டுரைகள், Comments Off on குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குப் பின்பு உணவு கொடுப்பது எவ்வாறு?
பாம்புக்கடிக்கான முதலுதவி

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவரையும், உங்களையும் பாம்புக்கடியலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். கடித்த பாம்பினை நன்கு அடையாளம் காணமுயலுங்கள். இதனால் எவ்வகையான பாம்பு என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும். பாம்பை இனங்காணுவதில் அதிக நேரத்தை செலவழிப்பதையோ அல்லது அம் முயற்சியில் மீண்டும் கடிவாங்குவதையோ தவிர்க்கவும். பாம்பினால் தீண்டப்பட்டவரை குறைந்த அசைவுடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும். அத்துடன் கடிக்கு இலக்கானவரை அமைதியாக வைத்திருக்கவும். (அதிக அளவு அசைவும் மன உளைச்சல், அதிர்ச்சி என்பன இரத்த ஓட்டத்தை […]

Posted in கட்டுரைகள், Comments Off on பாம்புக்கடிக்கான முதலுதவி
சுவாச நோய்களைத் தடுப்போம்

தற்போதைய உலகில் இறப்பு வீதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் நீண்டகாலத்துக்குரிய சுவாச நோய்கள் (வருடத்திற்கு நான்கு மில்லியன்) விளங்குகின்றன. அதிகரித்த புகையிலைப் பாவனை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், சரீர உழைப்பின்மை மற்றும் அதிகரித்த மது பாவனை என்பவையே இந்த நோய்களின் தூண்டற் காரணிகளாக அமைகின்றன. பொதுவான சுவாச நோய்களாவன பொதுவாகச் சுவாச நோய்கள் கீழ்வரும் காரணிகளால் ஏற்படுகின்றன சுவாச நோய்களைத் தடுக்கவும் நோய்க்குரிய சமூகத்திலிருந்து எமக்கு பரவாது தடுப்பதற்குமான வழிமுறைகளாவன… சுவாச நோய்கள் பொதுவாகக் காற்று வழியான பரவுகையைக் […]

Posted in கட்டுரைகள், Comments Off on சுவாச நோய்களைத் தடுப்போம்
குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசக்குழாய் அழற்சி (Bronchiloitis)

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் ஆபத்தான நோய் நிலை இதுவாகும். இலங்கையிற் குழந்தைகளின் வைத்தியசாலை அனுமதியில் இரண்டாவது இடத்தினை இந்த நோய் வகிக்கின்றது. இது ஒரு வைரஸ் நோய் நிலை. இது Human Metapneumo Virus, Adeno Virus, Parainfluensa Virus, Rhino Virus போன்ற வைரஸ் தொற்றுதலினால் ஏற்படுகின்றது. நோய்த் தொற்றலின் போது சுவாசப்புன்குழாய்கள் அழற்சியுற்றுச் சுரப்புகள் அதிகரிக்கும். இதனால் குழந்தைகளில் சுவாசித்தல் கடினம். காய்ச்சல், இருமல், பால்குடித்தல் கடினம், சுவாசவீதம் அதிகரித்தல் என்பன […]

Posted in கட்டுரைகள், Comments Off on குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசக்குழாய் அழற்சி (Bronchiloitis)
நகங்களின் பாதுகாப்பு

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மையான நரம்புக்கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருட்களைக் கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட […]

Posted in கட்டுரைகள், Comments Off on நகங்களின் பாதுகாப்பு
வைத்தியசாலையில் தொற்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல்

வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி? எஸ்.ரகுராமன், பி.கலாவேந்தா, வி.செந்தூரன்மருத்துவ மாணவர்கள் (28 ஆவது பிரிவு)

Posted in கட்டுரைகள், Comments Off on வைத்தியசாலையில் தொற்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல்
நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும் போது விடக்கூடிய தவறுகள்

நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும் போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக்காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படுகின்றது. எஸ்.வித்தியஷாகரன், எஸ்.தனிஷன்,28ஆவது பிரிவு மருத்துவ மாணவர்கள்

Posted in கட்டுரைகள், Comments Off on நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும் போது விடக்கூடிய தவறுகள்
பீடை நாசினிகளும் மரக்கறிகளும்

மனித வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டுமாயின் நோயற்ற வாழ்க்கை அவசியமாகும். வாழ்வதற்கு பல்வேறு காரணிகள் முக்கியமானவையாகக் காணப்படினும், ஆரோக்கியமான நிறைவான உணவும், சுத்தமான நீரும் நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ இன்றியமையாதவை எனலாம். எவ்வளவு தான் உணவுப்பழக்கவழக்கங்களில் அக்கறை கொண்டிருந்தாலும் நியம முறைப்படி நிறை உணவுக் கூறுகளைத் தேர்ந்தெடுத்தாலும் கிருமி நாசினித் தாக்கமற்ற காய்கறிகளைத் தற்காலத்தில் பெறமுடிவதில்லை. அதிகரித்து வரும் பீடைநாசினிப் பாவனையால் தாக்கம் விளைவிக்காத காய்கறி, இலைக்கறி வகைகளைப் பெறல் அரிதே எனலாம். அதிகரித்துவரும் […]

Posted in கட்டுரைகள், Comments Off on பீடை நாசினிகளும் மரக்கறிகளும்
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com