Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    December 2015
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Nov   Jan »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2015

புரத பிஸ்கட்

செய்முறை பயறு, பருப்பு என்பவற்றை வறுத்து தூளாக்கவும், பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பின்னர் இனிப்பூட்டி இட்டுக் கொள்ள வேண்டும். மேற்கூறிய பழங்களை சிறுதுண்டுகளாக்கி பின்னர் பாலிற்கு இடவும். பால் இறுகி வந்த பின்னர் வறுத்து தூளாக்கிய பருப்பு, பயறு என்பவற்றை சேர்த்துக் குழைக்க வேண்டும். தட்டையாக தட்டி பின்னர் oven இல் அவித்துக் கொள்ளவேண்டும். தேவையான பொருட்கள் பால் ( பசுப்பால்) ½போத்தல் பருப்பு 500 கிராம் பயறு 500 கிராம் அன்னாசிப்பழம் பாதித்துண்டு பப்பாசிப்பழம் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
மசாலாப்பால்

செய்முறை உழுந்தை வறுத்து திரித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு சிறிதளவு நீர் விட்டு கரைக்கவும். பசுப்பாலை நன்கு கொதிக்க விட்டு கொதித்த பின் அதனுள் உழுத்தம்மா கலவை, ஏலக்காய் என்பவற்றை சேர்த்து கலக்கவும். தேவையெனின் சுவையூட்டி சேர்க்கலாம். தேவையான பொருட்கள் பசுப்பால் ½போத்தல் உழுத்தம்மா 250 கிராம் ஏலக்காய் சிறிதளவு சுவையூட்டி தேவைக்கேற்ப   இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி லோகராணி இராசேந்திரம்

Posted in சிந்தனைக்கு, No Comments »
முருங்கையிலை தேநீர்

செய்முறை முருங்கையிலை, சிறுகுறிஞ்சா இலை என்பவற்றை வெயிலில் உலர்த்தி பின் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். நெல்லிக்காய் வற்றலையும் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இந்தக்கலவையில் 3 தேக்கரண்டி எடுத்து ஒரு தம்ளர் சுடுநீரில் சில நிமிடம் ஊறவிட்டு வடிகட்டி எடுக்கவும். வடித்த தேநீரில் தேவைப்படின் இஞ்சி சேர்க்கலாம். இனிப்பு தேவையானால் சுவையூட்டி சேர்க்கலாம். அல்லது தேநீரில் சிறிதளவு எலும்மிச்சம்பழச்சாறும் உப்பும் சேர்த்து சூடாகவோ குளிராகவோ அருந்தலாம். தேவையானால் பால் சேர்க்கலாம். தேவையான பொருட்கள் முருங்கையிலைத்தூள் (உலர்ந்தது) 100 கிரம் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
மதம் ஒரு மருத்துவப் பெருஞ்சுடர்

எல்லா மதங்களும் மனிதனை உடல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சுகமும் பலமும் பொருந்தியவனாக ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கான பாதையைக் காட்டி நிற்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் மனிதனின் சுகம் என்றால் என்ன? ஆரோக்கியம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணப்படுத்தும் பொழுது “அது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள சமூக ஆன்மிக நன்னிலையும் சேர்ந்திருக்கும் பொழுதே அது உண்மையான ஆரோக்கியம்” எனத் திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது. இந்த உண்மையான நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் வரையறுத்துச் சொல்வதற்குப் […]

Posted in கட்டுரைகள், No Comments »
வாழைத்தண்டு பானம்

தேவையான பொருட்கள் வாழைத்தண்டு சாறு ( வடித்தது) 100ml பப்பாளிப்பழ சாறு 200ml பாகற்காய் சாறு 50ml மாதுளம்பழச் சாறு ½ கப் ஐஸ்கட்டி தேவையான அளவு இனிப்பூட்டி தேவையான அளவு செய்முறை வாழைத்தண்டை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். பப்பாளிப்பழம், பாகற்காய், மாதுளம் பழம் என்பவற்றை தனித்தனியாக சாறாக்கிக் கொள்ளவும். பின்பு இவை எல்லாவற்றையும் Blender இல் அடித்து எடுக்கவும் எடுத்த சாற்றுக்குள் ஐஸ்கட்டி இட்டு பரிமாறவும். தேவையானால் இனிப்பூட்டி சேர்க்கலாம். இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
உறவுகளைப் புரிந்துகொள்ள…

நமது நாளாந்த வாழ்க்கை உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. பலதரப்பட்ட உறவுகளை நாம் சந்திக்கின்றோம். அவை குடும்பங்களிலும், வேலைத்தளங்களிலும், நண்பர்கள் வட்டத்திலும், விதிகளிலும் எனப் பல பரிணாமங்களைப் பெறுகின்றன. உறவுகளை ஆரம்பிப்பதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் நாம், எமது குறிப்பிடத்தக்களவு நேரத்தையும் சக்தியையும், பணத்தையும் பயன் படுத்துகின்றோம். இவ்வாறான பல பயனுள்ள உறவுகளால் எமக்கும், எமது உறவுகளுக்கும், சமுதாயத்துக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் எமக்குப் பயனளிக்காத சில உறவுகளை நாம் தொடர்வதில்லை. பலருக்குக் கெடுதலை ஏற்படுத்தக்கூடிய சில உறவுகளும் […]

Posted in கட்டுரைகள், No Comments »
வடஇலங்கையில் நீரிழிவு நோய் அதிகரிக்கக் காரணம் என்ன?

நீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது உங்களுக்குத் தெரியும்.உலகளாவிய அளவில் ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் 15 ஆண்டுகளில் இந்தத் தொகை 600 மில் லியன்களைத்தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது. உலகுடன் ஒப்பிடும்பொழுது இலங்கையில் குறிப்பாக வட பகுதியில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இலங்கையிலே நாடளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி 10.3 வீதமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் நாட்டின் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
நாம் பரிசுப்பொருள்கள் தெரிவு செய்யும் பொழுது கவனிக்கவேண்டியவை.

நாம் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்போது அது அவருக்கு உடற்சுகத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் நல்ல நினைவுகளைக் கொடுக்கக்கூடியதாகவும் பிரயோசனப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது. அந்த வகையில் பின்வரும் பொருட்களைக் கருத்தில் எடுக்கலாம். “பழங்கள், முட்டை, ஓவியங்கள், நல்ல புத்தகங்கள், பதிவேடுகள், உடை, தலைக்கவசம், குடை, பாரம் குறைந்த பாதணிகள், வீட்டில் சமைத்த பலகாரங்கள், முட்டைமா, பயற்றம்மா, உழுத்தம்மா, வேலைசெய்யும்பொழுது அணியும் கையுறை, உடற்பயிற்சி செய்யும் இயந்திரம், தாவரங்கள், விதைகள் ” போன்றவை. இப்பொருட்கள் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
மருந்துகள் பாவிக்கும்பொழுது கவனிக்க வேண்டியவை

நோயாளிகள் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்படி எடுப்பதன்மூலமே முழுமையான குணப்படுத்தலைப் பெறமுடியும். மருந்துகளின் எண்ணிக்கையோ மருந்துகள் எடுக்க வேண்டியதற்கு இடையிலான கால அளவையோ தமது விரும்பின்படி மாற்றக்கூடாது. ஏனெனில், இவை இரண்டும் மருந்து இரத்தத்தில் நின்று செயற்படும் திறனை வைத்தே கணிக்கப்பட்டு வைத்தியரால் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, இவற்றைக் குறைப்பதன்மூலம் செயற்றிறன் குறைக்கப்பட்டு, குணமடைதல் தாமதப்படுத்தப்படும். எனினும், இவற்றைக் கூட்டுவதன்மூலம் மருந்தின் செயற்றிறனை அதிகரிக்கமுடியாது. மாறாக, அது நச்சுத்தன்மைக்கும், சிறுநீரகப் பழுதடைதலுக்கும் வழிவகுக்கும். மருந்து ஒன்று காலையும் மாலையும் எனப் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்!

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும், உடல் அங்கங்களின் இழப்புக்களும் அதிகரித்த நிலையிற் காணப்படுகின்றன. இந்த விபத்துக்களுக்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளபோதிலும் பொதுவீதிகளைப் பயன்படுத்துபவர்கள் விழிப்பாக நடந்து கொள்ளாமையே விபத்துகள் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக அமைகின்றது. பொது வீதிகளில் வாகனங்களைச்செலுத்துபவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்களாவன: வானங்களை அதிகரித்த வேகத்தில் செலுத்துவதைத் தவிர்த்தல் சன நெரிசல் மிக்க இடங்களில் அதிகரித்தவேகத்தில் செலுத்தும் போது சடுதியாக நிறுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் சாரதியின் கட்டுப்பாட்டையும் மீறி விபத்து ஏற்படுகின்றது. மதுபோதையில் […]

Posted in கட்டுரைகள், No Comments »
« Older Entries
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com