Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2015
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Feb   Apr »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2015

பாரிசவாதம் பற்றிய விழிப்புணர்வு

பாரிசவாதம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாக கருதப்படுவது ஏன்? பாரிசவாதம் என்பது ஒரு அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாகும். உங்களிற்கு அல்லது உங்களிற்கு தெரிந்தவர்களுக்கு பாரிசவாதத்திற்கான குணங்குறிகள் ஏற்படின் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரவும். மூளைக்கான குருதியை விநியோகிக்கின்ற இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அதனால் பாரிசவாதத்திற்கு ஆளாகியிருந்தால் இரத்தக்கட்டியை உடனடியாக கரைப்பதற்கு விசேட மருந்து தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மருந்தானது பாரிசவாதத்திற்கான […]

Posted in கட்டுரைகள், No Comments »
நன்னீருக்காய் கண்ணீர் சிந்தும் குடாநாடு

உயிரினங்களின் இருப்புக்கு அத்தியாவசியமான ஒரு வளமாக தண்ணீர் அமைந்துள்ளது. மனிதனைப் பொறுத்தவரை அவனது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக தண்ணீர் விளங்குகிறது. மனிதனால் உணவின்றி ஒரு மாத காலம் வரைவாழ முடியும். ஆனால் தண்ணீர் இன்றி ஒரு சில நாள்கள் கூட உயிர் வாழ முடியாது. இதனைத்தான் வள்ளுவப் பெருமான் “நீரின்றி அமையாது உலகு” எனக் குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட மனிதர்களது முக்கிய அடிப்பதை் தேவைகளில் ஒன்றான தண்ணீர் இன்று யாழ். மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நன்னீராகக் […]

Posted in கட்டுரைகள், No Comments »
கோதுமை மாவா? அரிசி மாவா?

கோதுமை மாவா? அரிசி மாவா? எது மிகவும் சுவையானது? இவற்றுள் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது? நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாகவே வாழ ஆசைப்படுகின்றோம். பாடசாலைக்குச் செல்லும் குழந்தை முதல், கடலுக்குச் செல்லும் மீனவர் வயலுக்குச் செல்லும் விவசாயி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை புரிவோர் மற்றும் கூலி வேலைகளுக்குச் செல்வோர், ஏன் இன்னும் வீட்டில் வேலையின்றி வெட்டியாக இருப்போர் என அனைவரினதும் காலை, மாலை மற்றும் இடைவேளை சாப்பாட்டு வேளைகளிலும் வாய்க்கு விருந்து அளிப்பது பாணும், […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
அபீபாவினால் ஏற்படும் ஈரல் சீழ்க்கட்டிகள் ( Amoebic liver abscess)

ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று பேராவது ஈரல் சீழ்க்கட்டிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வேதனையை அளிப்பதுடன் சிலவேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. தடுக்கப்படக்கூடிய இந்த நோய் வடபகுதி மக்களிடையே பரவியிருக்கக் காரணம், இந்த நோய் பற்றிய விழிப்புர்வு இன்மையும். அறியாமையுமாகும். பெரும்பாலான ஈரல் சீழ்க்கட்டிகள் என்ரமீபா ஹிஸ் ரோலிடிகா ( Entamoaba Histotlitica) எனப்படும் ஒரு கல நுண்ணங்கிகளால் ஏற்படுகின்றன. இனி இந்த நுண்ணங்கிகள் எவ்வாறு மனிதனின் ஈரலைச் சென்றடைகின்றன […]

Posted in கட்டுரைகள், No Comments »
தூக்கம் எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை, “உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது”, என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் […]

Posted in செய்திகள், No Comments »
கௌபி தட்டை (சிற்றுண்டி)

செய்முறை கௌபியை நன்கு ஊறவைத்து அவிக்கவும் உருளைக்கிழங்கை அவிக்கவும் அவிந்த உருளைக்கிழங்கு கௌபியை நன்கு மசிக்கவும். சிறிதளவு வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை 1 மேசைக்கரண்டி  எண்ணெய் விட்டு வதக்கவும் உப்பு அளவுக்கு மிளகாய்த்தூள் ½ தே. கரண்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து புரட்டி தூளாக்கியமீன் எடுக்கவும். ஒரு முட்டையை நன்கு அடிக்கவும். கௌபி கடலையை சிறு வட்டமாக உருட்டி தட்டி எடுக்கவும். Frying pan ஐ அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விடவும் சூடு […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
சிறார்களில் கண் விபத்து ஏற்படும் முறைகளும் அவற்றின் தடுப்பு முறைகளும்

சிறார்கள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். எதையும் ஆராயும் குணம் கொண்டவர்கள். வேகமாக செயற்பட விளைபவர்கள். அவர்களின் இயக்கம் பெரியோர்களைப் போன்று ஒருங்கமைக்கப்பட்டதல்ல. இவை சிறுவர்களின் கண்களில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படக் காரணமாகின்றன. கண்களில் காயங்கள் ஏற்பட்டுவிட்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் கண்களைப் பரிசோதித்தல் மிகவும் சிரமமானது. கண்களுக்கு உரிய முறையில் மருந்திடவும் அவர்கள் அனுமதிப்பதில்லை. கண்ணில் ஏற்படும் வலிகாரணமாக கண்ணைக் கசக்க முற்படுவதால் காயங்கள் அதிகரிக்கலாம். காயங்களால் ஏற்படும் தற்காலிக பார்வை இழப்புகளும் சிறார்களின் மூளையில் நிரந்தர பார்வை விருத்தி […]

Posted in கட்டுரைகள், No Comments »
Vitiligo ( தோலில் ஏற்படுகின்ற வெள்ளை நிற மாற்றங்கள்)

Vitiligo என்றால் என்ன? Vitiligo என்பது தோலில் ஏற்படுகின்ற ஒர் குறைபாட்டு நிலைமையாகும். எமது தோலின் நிறத்துக்குக் காரணமான பதார்த்தமாகிய மெலனினைச் சுரக்கும் கலங்கள் முற்றாக அழிக்கப்படுவதால் அந்த இடங்களில் வெள்ளை நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் இந்த நிறமாற்றம் உருவாவதற்கான காரணம் தோலில் இந்த நிறமாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஆய்வாளர்கள் இது தொடர்பில் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். இவற்றுள் உடலினுள் செல்கின்ற பிறபொருள்களை அழிப்பதற்காகத் தொழிற்படுகின்ற நீர்ப்பீடனத் தொகுதியானது தனது […]

Posted in கட்டுரைகள், No Comments »
பாம்புக்கடி

இலங்கையில் 93 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் கடல் பாம்புகளும் அடங்கும். எனினும் ஐந்துவகை பாம்புகள் மட்டுமே அதிக நச்சுத் தன்மையுள்ளனவாகவும், இறப்பை ஏற்படுத்தக்கூடியளவாகவும் உள்ளன. இலங்கையில் உள்ள அதிக நச்சுப்பாம்புகள்.   நாகபாம்பு (Cobra) எண்ணை விரியன் ( Common Krair, Ceylon Krait) கண்ணாடி விரியன் ( Russell’s Viper) சுருட்டை பாம்பு ( Saw Scaled Viper) பெரும்பாலான இறப்புக்கள் நாகபாம்பு, எண்ணை விரியன், கண்ணாடிவிரியன் என்பவற்றினாலேயே ஏற்படுகின்றன. பாம்புக்கடியினால் ஏற்படுகின்ற நோய் […]

Posted in கட்டுரைகள், No Comments »
கொழுக்கிப் புழுவின் தாக்கத்திலிருந்து பாதுகாப்போம்.

கொழுக்கப்புழு (Hookworm Necator amcriconus) மனிதனின் சிறு குடலில் வாழ்ந்து முட்டைகளை இடுகின்றன. இம்முட்டைகள் மலத்தினூடாக மண்ணை அடைந்து குடம்பி (Larva) ஆக உருமாற்றத்துக்கு உட்பட்டு மனிதனின் தோலைத் துறைப்பதனால் இரததோட்டத்தினூடாக மீண்டும் சிறு குடலை வந்தடைகின்றது. இவை சிறு குடலில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதனோடு மட்டுமல்லாமல் இரத்தம் உறைாயாதவாறான பதார்த்தத்தையும் சுரக்கின்றன. இதனால் இவை குடித்த பின்னரும் ஏற்பட்ட புண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடும். அத்துடன் புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்ற போது அவை போசனைப் பதார்த்தங்களின் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com