You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

உடலால் பருத்து அதனால் உண்மையில் பலவீனப்பட்டு பல அன்னிய உணவுகளிற்கெல்லாம் அடிமைப்பட்டு எமது சுதேச ஆரோக்கிய உணவுகளிலிருந்து அன்னியப்பட்டு அடுக்கடுக்காய் பல நோய்களிற்கு ஆட்பட்டு நாம் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? விளை நிலங்கள் எல்லாம் தரவையாய் கிடக்க எமது உடம்பு மட்டும் விளைந்து போய் வீட்டிலும் தோட்டத்திலும் உளைக்க மறந்து இயந்திரங்களில் ஏறி உழக்குவதற்காய் வாங்கிய உடற்பயிற்சி மிசின்கள் கூட சும்மா கிடக்க சோம்பேறி அடிமைகளாய் நாம் சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கத் துவங்கியதன் காரணம் […]

மனித உடம்பு ஒரு வினைத்திறன் கூடிய வாகனத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இதனை வடிவமைத்த இறைவன் எவ்வளவு ஒரு அற்புதமான கலைஞன் என்பது புலனாகின்றது. ஒருவர் ஒரு சாதாரண தேநீர் அருந்தினால் அதில் உள்ள சக்தியில் அவரால் 3கிலோமீற்றர் ஒட முடியும். ஒருவர் உடற்பயிற்சிக்காக தினமும் 3Km தூரம் ஒடி விட்டு அந்த களைப்பை போக்குவதற்கு மேலதிகமாக ஒரு தேநீர் அருந்தினால் அவரிலே எந்த வித சக்தி இழப்பும் ஏற்பட மாட்டாது. எனவே இதன் காரணமாக எந்த […]

“விரும்பிய உணவுவகைகளை உண்ணமுடியாத ஒரு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஒரு நல்ல காரியத்திற்கு போனால் கூட அவர்கள் தருவதை உண்ணமுடியாதா? வடை, பற்றீஸ், ஐஸ்கிறீம், பாயாசம், றோல்ஸ் என பல உணவுவகைகளை ஒறுத்து ஒரு சன்னியாசவாழ்க்கை வாழ்ந்துதான் நிறையை கட்டுப்படுத்த வேண்டுமா? இப்படி ஒரு நிறைக்குறைப்பு தேவைதான, என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட உணவுவகைகளை உண்டும் நாம் அளவான நிறையைப் பேணமுடியும். துறவறம் பூண்டவர்கள் போல் இவை அனைத்தையும் ஒறுத்து வாழ வேண்டிய […]

உடல்நிறைக்குறைப்பு என்ற கலையை வெற்றிகரமாக அரகேற்றுவதற்கு நாம் கடந்து செல்லவேண்டிய முக்கியமான படிநிலைகள் எவை என்பதை அறிந்துவைத்திருப்பது அவசியமாகும் அவற்றில் சில முக்கியமான படிநிலைகள் வரிசைப்படுத்துவோமாயின் 1. “நான் உண்பது மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது எவ்வளவோ குறைவு ஆனால் நிறை தானாக அதிகரித்து வருகின்றது” என்ற தப்பவிப்பிராயத்தை நீக்குதல் வேண்டும். நாம் உண்ணும் உணவின் அளவை மற்றவர்கள் உண்ணும் அளவுடன் ஒப்பிட முடியாது காரணம் ஒவ்வொரு உடம்புக்குமான உணவுத்தேவை வேறுபடும். 2. ”இது பரம்பரை உடம்பு அல்லது […]

நம்மில் பலர் “மாப் பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பது எமக்குத் தெரியாது. இந்த நிலை பல நோய்களுக்கு காரணமாக அமைவதுடன் நிறை அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகவும் அமைகின்றது. புகைத்தலுக்கு அடிமையாகி, குடிவகைகளுக்கு அடிமையாகி, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கின்றோம். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பாதித்து பல மரணங்களுக்கும் தாக்கங்களுக்கும் காரணமாக இருக்கின்ற “மாப்பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலை பற்றி நாம் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக இருக்கின்றது. மாப்பொருள் என்றால் என்ன? மாப்பொருளுக்கு […]

பசிவந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள். இது முற்றிலும் உண்மையானதே. காரணம் மூளையில் இருக்கும் பசியுடன் சம்பந்தமான பகுதி மிகவும் வல்லமை பொருந்தியது. நிறை குறைக்க முற்படும் காலத்திலே ஒருவருக்கு பசி ஏற்படுமாயின் அது அவரின் நிறை குறைப்பு சம்பந்தமான அறிவையும் நிறைகுறைக்கு வேண்டும் என்ற ஆர்வத்தையும் அற்றுப்போகச் செய்துவிடும். எனவே இந்தக் காலப்பகுதியிலே பசி ஏற்ப்படாதவாறு நிறை அதிகரிப்பை அதிகம் ஏற்ப்படுத்தாத உணவுகளை அடிக்கடி உண்பது அவசியமாகும். சிலவகையான உணவுவகைகளை அதிகளவு உண்டாலும் சிறிதளவு […]

சுவை குன்றாமல் நிறை அதிகரிக்காமல் எவற்றை உண்ண முடியும் என்பதையும் சிறிய அளவு உட்கொண்டாலும் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்ல அதாவது கலோரி பெறுமானம் கூடிய உணவு வகைகள் எவை என்பதையும் நாம் அடையாளப்படுத்த வேண்டும். கலோரிப் பெறுமானம் கூடிய உணவுவகைகளை தவிர்த்து அவற்றிற்கு மாற்றீடாக எவற்றை உண்ணமுடியும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். சீனி, சர்க்கரை, பனங்கட்டி அல்லது இவை சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் அல்லது பானங்கள் போன்றவற்றை சிறிதளவு உட்கொண்டாலும் பெரும் நிறை […]

உடல்நிறையை குறைத்துக்கொள்வது மட்டும் எமது இலக்காக இல்லாது எமது உடலின் ஆரோக்கியத்தையும் தொழிற்பாட்டு வீதத்தையும் அழகையும் மேம்படுத்தி உடல்நிறையை குறைத்துக்கொள்வது எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும். இதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் இன்றியமையாதவையாக அமைகின்றன. உடல்நிறையை குறைப்பதற்கு எந்த வகையான உணவுவகைகளை தெரிவுசெய்ய வேண்டும் என்று சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்துவதாக இருந்தால் ”அந்த உணவுவகைகள் உடல்நிறை அதிகரிப்பை ஏற்ப்படுத்தாத கலோரிப் பெறுமானம் குறைந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான, பசியைபோக்கி திருப்தியை கொடுக்கவல்ல உணவு வகைகளாக இருக்க வேண்டும்” என […]

“கண்டதும் கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதும் உண்டவன் பண்டிபோல் குண்டாவான்” என்று பலரும் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கிறார்கள். எனவே நாம் எம் முன்னவர்களின் கருத்துக்களையும் கருத்தில் எடுத்து. ஆரோக்கியமாக சுவையாக நிறைவாக உண்டு எமது நிறையை சரியான அளவில் பராமரிக்கும் கலையை கற்றுக்கொள்ள முயலுவோம். நிறையை குறைத்துக் கொள்வதற்கு பட்டிணி கிடக்கவேண்டிய அவசியமில்லை. பட்டிணி கிடந்து நிறையை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. நிறை குறைப்பதற்கு முயற்சி […]

எமது உடல் நிறையை சரியான அளவில் பேணிக் கொள்வதும் ஒரு கலையே! திருமூலர் திருமந்திரத்திலே “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்” என்று சொல்லி உடலை ஆலயத்துடன் ஒப்பிட்டிருக்கின்றார். அந்த ஆலயத்தை அழகுற பராமரிப்பது கலை மட்டுமல்ல எமது கடமையுமாகும். “ உடல் நிறையை குறைப்பது இயலாதகாரியம், பட்டினிகிடக்க வேண்டி வரும், நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்” என்ற ஒரு தப்பவிப்பிராயம் பொதுவாக நிலவிவருகிறது. மிகவும் சிறிதளவு உணவை உட்கொண்டும் கூட நிறை தானாகக் கூடிவருகிறது. எவ்வளவு வேலைகளைச் […]