Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உடல் நிறை குறைப்பு ஒரு இலகுவான கலை பகுதி – 6

நம்மில் பலர் “மாப் பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பது எமக்குத் தெரியாது. இந்த நிலை பல நோய்களுக்கு காரணமாக அமைவதுடன் நிறை அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகவும் அமைகின்றது. புகைத்தலுக்கு அடிமையாகி, குடிவகைகளுக்கு அடிமையாகி, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கின்றோம். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பாதித்து பல மரணங்களுக்கும்  தாக்கங்களுக்கும் காரணமாக இருக்கின்ற “மாப்பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலை பற்றி நாம் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக இருக்கின்றது.

மாப்பொருள் என்றால் என்ன? மாப்பொருளுக்கு அடிமையாதல் என்றால் என்ன? என்பது பற்றி நாம் அறிந்துவைத்திருத்தல் அவசியமாகும், மாப்பொருள் அதிகமுள்ள உணவுகளாக சோறு, பிட்டு, சீனி, இடியப்பம், பாண், ரொட்டி குரக்கன்மா அல்லது ஆட்டாமா என்பன சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

நாம் இந்தவகையான உணவுகளுக்கு அடிமையாகி இருக்கின்றோமா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

மாப்பொருளிற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு மேற்கூறப்பட்ட பொருட்களை ஒன்று அல்லது  இரண்டு நாட்களுக்குத் தவிர்த்துவிடமுற்பட்டால் கூட களைப்பாக இருக்கும். நடுங்கும், வழமையான வேலைகளைச் செய்யமுடியாது இருக்கும், இலகுவில் கோபம் வரும், இந்த அறிகுறிகளை பால், முட்டை, பழங்கள், பருப்புவகைகள், மோர், சுண்டல் போன்ற ஆரோக்கியமான சுவையான உணவுவகைகளால் கூட தணிக்க முடியாமல் இருக்கும். இறைச்சி, மீன், இறால் போன்ற மாமிச உணவு வகைகளால் கூட இந்த அறிகுறிகளை தணிப்பது கஷ்டமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட மாப்பொருள் வகை உணவுகளைத் தேடி சிறிதளவாவது உண்ணவேண்டும் என்ற பெரும் ஆவல் மனதிலே தோன்றும். மாப்பொருள் இல்லாத உணவும் ஒரு உணவா? சோறு, பிட்டு உண்ணாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ளும். பால் பழம், சுண்டல், பால் சேர்த்த தேனீர், கோப்பி, அவித்த அல்லது சமைத்த மரக்கறிவகைகள், முட்டை, பருப்பு, இறைச்சிவகைகள், அகத்தி, முருங்கை,வெங்காயம் போன்றவற்றின் வறைகள், கௌப்பி,பயறு போன்ற சுவையான உணவுவகைகளைக் கூட உணவாக ஏற்றுக்கொள்ள மனம்  மறுக்கும். மாப்பொருள் உண்டால் தான் ஒரு நேர உணவு உண்டதாக மனம்திருப்தி கொள்ளும்.  மாப்பொருள் அதிகமுள்ள உணவுவகைகள் தனது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தும், மனம் அதையே நாடும். இத்தகைய ஒரு நிலையையே மாப்பொருளுக்கு அடிமையாதல் என்று வரைவைிலக்கணப்படுத்தலாம்.

எமது உடலின் அன்றாட தொழிற்பாட்டிற்காக 55 வீதம் தொடக்கும் 60 வீதம் வரையிலான மாப்பொருள் தேவையாக இருக்கின்றது. எமக்குத் தேவையான இந்த மாப்பொருளை எந்த வகையான உணவுகள் மூலம் பெற்றுக்கொள்வது ஆரோக்கியமாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். மாப்பொருள் காணப்படும் ஆரோக்கியமான உணவுவகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

  1. பழங்கள்
  2. அவரைவகை மரக்கறிகள்
  3. பருப்புவகைகள்
  4. உழுந்து
  5. பயறு
  6. கௌப்பி
  7. கரட், பீற்றூட், பூசணி

போன்ற மரக்கறி வகைகள் இந்த வகையான உணவுவகைகளை உண்பதன் மூலம் எமக்குப்  போதுமான மாப்பொருளைப்  பெற்றுக்கொள்வதுடன் உடலுக்கு வேண்டிய புரதம் கனியுப்புக்கள், விட்டமின்கள் போன்றவற்றையும் சேர்த்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையான உணவுவகைள் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டா. காரணம் இவற்றில் உள்ள கலோரி அடர்த்தி அதிக மாப்பொருளைக் கொண்ட உணவுவகைகளுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவாகும்.

எனவே நாம் மாப்பொருளிற்கு அடிமையாகி உள்ள நிலையிலிருந்து விடுபட்டு உடல் நிறையை குறைத்து ஆரோக்கியம் பெறுவதற்கு, முதலாவதாக இந்த நிலை எம்மில் இருக்கின்றது என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இரண்டாவதாக மாப்பொருள் செறிவு கூடிய உணவுகளைத் தவிர்த்து மாப்பொருள் செறிவு குறைந்த புரதச்செறிவு கூடிய உணவுகளைத் தெரிவு செய்து உண்ண வேண்டும். எமது வாழ்க்கை முறையை சுறுசுறுப்பானதாக மாற்றியமைத்து உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விலைகூடிய செயற்கை உணவுகளை தவிர்த்து விலைகுறைந்த இயற்கை உணவுகளை தெரிவுசெய்ய வேண்டும்.

பகுதி ஐந்தை வாசிக்க
தொடரும்…..

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.

Posted in சிந்தனைக்கு
« யாழ் போதனா வைத்திய சாலையில், புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
உயர்குருதியமுக்கம் பற்றி அறிந்து கொள்வோம் »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com