Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

எல்லா நாடுகளும் தோற்றுபோனது

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘லான்ஸட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதிக எடை உள்ளவர்கள் அல்லது பருமனானவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது. இந்த […]

Posted in செய்திகள், No Comments »
பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களிற்கு பார்ப்பதற்கு புதியவகை கண்ணாடி அறிமுகம்

சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம் பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளில் ஒரு சிறப்பு முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு கணினியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முப்பரிமாண கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் உடனுக்குடன் கணினிக்கு சென்று, அந்த கணினியில் இருந்து இந்த காட்சிகள் மீண்டும் இந்த சிறப்புக் கண்ணாடியில் […]

Posted in செய்திகள், No Comments »
கொக்கோ சாறு அல்சைமர்ஸ் (Alzheimers) தடுக்க உதவுமா?

அல்சைமர்ஸ் எனப்படும் ஞாபக மறதி நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் நியூயோர்க்கில் மவுண்ட் சினெய்யிலுள்ள மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வொன்றில் கொக்கோ சாற்றின் மூலம் இந்நோயை தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான ( natural, ditched, lavado) கொன்கோ மாதிரிகள் எலிகளில் பரிசோதிக்கப்பட்ட போது lavado ( Minimally processessed cocoa extract) கொக்கோ சாறானது அல்சைமர்ஸ் நோயை தடுப்பதற்கான மிகச்சிறந்த பதார்த்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எலிகளின் மூளையில் AB […]

Posted in செய்திகள், No Comments »
பாம்புக்கடிக்கு மூக்கினுள் அடிக்கும் மருந்துமூலம் சிகிச்சை

எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு […]

Posted in செய்திகள், No Comments »
கைத்தொலைபேசிகளை காற்சட்டைப் பைகளில் வைப்பது பாதுகாப்பானதா?

கைத்தொலைபேசிகள் தற்போது மனிதனின் அன்றாட செயற்பாடுகளிற்கு இன்றியமையாத ஒரு சாதனமாக மாறியுள்ளது. பொதுவாக இதனை காற்சட்டைப் பைகளில் வைத்திருக்கும் பழக்கமே காணப்படுகின்றது. மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து […]

Posted in செய்திகள், No Comments »
சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் 50% -60%  மேற்பரப்பில் பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் சிகரெட் பெட்டிகளின் மேற்பரப்பில் 80 வீதமான பகுதியை உள்ளடக்கி நோய் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், சிகரெட் பெட்டிகளின் 50 முதல் 60 வீதமான மேற்பரப்பில் மட்டும் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் சிகரெட் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் புகைத்தலினால் ஏற்படுகின்ற அபாயங்களை சிகரெட் பெட்டிகளின் 80 வீதமான மேற்பரப்பில் எச்சரிக்கைப் படங்களாக பிரசுரிக்க வேண்டும் என்று அரசு அண்மையில் […]

Posted in செய்திகள், No Comments »
நல்ல இனப்பூச்சிகளையும் தேனீக்களையும் பாதிக்காத பூச்சி கொல்லி

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றி விஞ்ஞானிகள் கவலைகொண்டுள்ள நிலையில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்ற தேனீ இனத்தை பாதிக்காமலேயே தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டுபிடித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ‘புனல்‘ வடிவத்தில் வலைபின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்ஸின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய இரசாயன மூலக்கூற்றை இந்த பூச்சிக்கொல்லி மருந்து கொண்டிருக்கிறது. செயற்கை இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பான மாற்றாக இந்த இயற்கை வழி பூச்சிக்கொல்லி பயன்படக்கூடும் என […]

Posted in செய்திகள், No Comments »
மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்துக் கூடிய உணவு ஒரு அருமருந்து.

நார்ச்சத்துக் கூடிய உணவுகளான இலைவகைகள், கீரைவகைகள், மரக்கறி வகைகள், பழவகைகள், தவிட்டுத்மையுடைய தானிய உணவுகள், கௌப்பி, பயறு, போன்ற அவரை வகை உணவுகள் மனிதனில் பல வகையான நோய்கள் ஏற்படும் வீதத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கின்றது. மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு […]

Posted in செய்திகள், No Comments »
அசுத்தக் காற்றை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிக்கப்படும் ஆபத்து

இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்து வருவது நமது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்பது யாவரும் அறிந்ததே. எமது சுற்றாடல் பல்வேறுபட்ட காரணிகளால் அசுத்தமடைந்து எம்மைச் சூழவுள்ள வாயு மண்டலமும் பல வாயுக்களால் அசுத்தமடைவதால் மனிதனுக்கு பல ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில்  அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் […]

Posted in செய்திகள், No Comments »
இலங்கையின் கரையோரங்கள் கடலில் புதைகின்றதா??

இறுதியாகக் கிடைத்த பல்வேறு தகவல்களின் படி சுற்றாடல் வேகமாக வெப்பமடைந்து வருவதனால், கடல்நீர் ஆண்டுதோறும் 3 – 10mm  வரை உயர்ந்து வருவதாகவும்,  நிலத்தடி நீர் அதிகமாக உறுஞ்சி எடுத்துப் பாவிக்கப்படுவதால் நீர்மட்டம் ஆண்டுதோறும் 6 – 100mm  என்ற வேகத்தில் அமிழ்ந்து வருவதாகவும் கண்டறிப்பட்டிருக்கின்றது. இதனால் இலங்கையின் உயரம் குறைவான கரையோரப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு சுற்றாடல் வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும், நிலத்தடி நீர் மேலதிகமாக […]

Posted in செய்திகள், No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com