You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

ஆரோக்கியமான ஆளுமை விருத்தி, உடல் உள வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்வுக்கு போதியளவு போசனை மிக்க உணவு அவசியமாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானதாக உள்ளது. பதப்படுத்திய உணவு அதிகளவு கிடைக்கக் கூடிய தன்மை, துரித நகராக்கல் வாழ்க்கை முறை மாற்றம், விரும்பத் தகாத சந்தைப்படுத்தல் செயன்முறைகள் என்பவை எம்ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை முற்றாகவே மாற்றிவிட்டன. மக்கள் தற்போது உண்ணும் உணவுகள் கூடிய சக்திப்பெறுமான முள்ளதாகவும் அதிகளவு கொழுப்பு சீனி மற்றும் உப்புக்கொண்டவையாகவுமே உள்ளன. இவை […]

குழந்தையின் வளர்ச்சிப்படிமுறையைப் பிரதானமாக நான்கு எல்லைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: குழந்தைப் பருவம், முன்பள்ளிப்பருவம், இடைத்தர சிறுவர் பராயம் மற்றும் இளைஞர் பருவம் ஆகும். சிறுவர் பராயத்தின் முற்பாக விருத்திப் படிமுறையானது பிறந்தது முதல் இருவயது வரை உள்ளபகுதியை உள்ளடக்குகிறது. இந்தக் காலப்பகுதியில் உடல் ரீதியான இயக்கச் செயற்பாடுகள் மற்றும் விவேகம் சார்பான விடயங்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இவ்வறிவானது சிறுவரொருவரை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலுள்ள யாவருக்கும் தேவையானதாகும். முதலில் 4 மாதகால பிள்ளையின் திறன்களை […]

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுகாதாரத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அவற்றை அவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தம்செயற்பாடுகள்மூலம் அறிந்து கொள்வதற்குமாகவும் பாடசாலை சுகாதாரக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களின் சுகாதார நன்னிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் இந்தக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் ஏற்கனவே இருக்குமாயின் அதனை உயிர்ப்பாக்கி அதன் செயல்வீச்சை அதிகரித்திடல் வேண்டும். பாடசாலைகளை சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புக்களாக மாற்றுவதில் இந்தக் கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இந்தக்கழகம் செவ்வனே இயங்குவதை பாடசாலை அதிபர் கண்காணித்து அதன் செயற்பாட்டை […]

டெங்குக் காய்ச்சலானது நுளம்பால் பரப்ப படும் டெங்கு வைரஸ் இனால் உருவாக்கப்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது பெரும்பாலான வெப்பவலய நாடுகளை பாதிக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன் நேரத்துக் நேரம்மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்சல் (Dengue fever) தொடக்கம் உயிர்கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic fever) மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock syndrome) போன்றவற்றையும்ஏற்படுத்தலாம். இதுஅனை வரையும் பாரபட்சமின்றிப் பாதித்தாலும் சிறுவர்கள், […]

நாம் உண்ணும் உணவானது சுத்தமாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். நுண்ணங்கிகளின் தாக் கத்தால் அவற்றின் தரம் பாதிப்புறும். உணவு நஞ்சாவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். பழுதடைந்த உணவின்நிறம், சுவை, உள்ளடக்கம் என்பனவும் மாற்றத்துக்குள்ளாகும். ஆனால் இவை பழுதுற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிகழும் எனக் கூறமுடியாது. பழுதடைந்தஉணவானது பலஅசெளகரியங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தலாம். எனவே இவற்றை இனங்காணும் ஆற்றலை வளர்த்துக்கொள்வோம். ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்யும்போது எப்பொழுதும் சுத்தமானதும் புதியனவானதுமான உணவு வகைகளையே தேர்வுசெய்வோம். பழங்கள் வெடித்த சேதமுற்ற நிறம் மாறிய, […]

சிறுவர்களில் காணப்படும் மிகப் பொதுவான நாள்பட்ட நோயாக இழுப்பு வருத்தம் (அஸ்மா) காணப்படுகிறது. அநேகமான பெற்றோருடைய கவலை ‘ஏன் அடிக்கடி எம் பிள்ளைக்கு இழுப்பு வருகிறது எப்படி இதை வராமல்தடுக்கலாம்? இழுப்பை முற்றாக மாற்ற முடியுமா?” என்பனவாகும். உலகில் சிறுவர்களைப் பொறுத்தவரையில் பதினொரு பேரில் ஒருவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுவதுடன் நீண்டநாள்களுக்கு மருந்தும் தேவைப்படுகிறது. லண்டனில் சாதாரண வகுப்பு ஒன்றில் மூன்றில் ஒரு சிறுவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுகிறது. இலங்கையில் 5 தொடக்கம் 1 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் […]

சுறுசுறுப்பாகவும் நோயற்றும் இருப்பதற்கு சமபல போசணையான உணவும் உடற்பயிற்சியும் தகுந்த ஓய்வும் போதியளவு தூக்கமும் அவசியமாகும். திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு கண்டு முன்னேறுதல் நல்ல மன ரீதியான சந்தோசத்தை வழங்கும். மன நிலை நல்ல நிலையில் இருப்பின் எங்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கிட முடியும். சமுதாயத்துடனான நல்ல தொடர்புகள் எம்மை களைப்பின்றி உற்சாகமாக கடமைகளை ஆற்றிட உதவும். உடலிலுள்ள அனைத்துதசைகளுக்கும் சீரான செயற்பாட்டை வழங்கும் படியாக […]

உலகில் பெண்களில் சாவை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்காவது இடத்தை கருப்பைக் கழுத்துப் புற்றுநோயே வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் கண்டுபிடிக்கப் படுவதால் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவு. ஆனால், இலங்கை போன்றநாடுகளில் அத்தகைய வசதிவாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால், இந்தப் புற்றுநோய் வளர்ச்சி அடைந்த பின்பே கண்டு பிடிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் சத்திரசிகிச்சை (Surgery) மற்றும் கதி ரியக்க சிகிச்சை (Radiotherapy) போன்ற […]

உலகளாவியரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர் முகநாடுகளிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்ற்து. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வொன்றின்படி கொழும்பு நகரப்பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் (Pre Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது மக்களிடையே சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையானது அதிகமாக இருப்பதும் இதற்கானதொரு […]

மன அழுத்தமானது உடலில் நோய், விபத்து, சோகம், கவலை, பயம், யோசனை, குளிர் அதிக சூடான காலம், கோபம், கடன், இழப்பு போன்ற பல காரணங்களாலோ அல்லது வெளித்தாக்கத்தினாலோ ஏற்படுகின்றது. இவ்வாறு எல்லாவித மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்படுவது மூளையே ஆகும். இவ்வாறு பாதிக்கப்படும் போது எமது மூளையில் இருந்து சைகைகள் (அறிவுறுத்தல்கள்) ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக அதிரினலின் (Adrenaline) நோர் அதிரினலின் (Nor Adrenaline) குளுக்ககோன் (Gucagon) கோட்டிசோல் (Cortisol) வளர்ச்சி ஓமோன் (Growth […]