Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    May 2025
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

விபத்தில் காயமுற்றவலுக்கான முதலுதவி

விபத்து நடந்தவுடன் அதைச் சூழ்நின்று வேடிக்கை பார்ப்பதையும், அல்லது அதிலிருந்து விலகி ஒடுவதையும் விடுத்து, காயப்பட்டவரை எவ்வளவு விரைவாக வைத்தியசாலைக்கு சிக்கல்கள் ஏற்படாமல் அனுப்பும் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோம். இதனால் காயப்பட்டவர் இறப்பதிலிருந்து, மேலும் அங்கவீனமடைவதிலிருந்தும் காப்பாற்ற முடியும். முதலாவதாக விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவர் சுவாசத்தை அவதானிக்க வேண்டும். சுவாசம் இருக்கின்றதா அல்லது கஷ்டப்பட்டு சுவாசிக்கின்றாரா என்பதை அவதானிக்க வேண்டும். இதை அவதானித்து அவரது மூக்கு, வாய் பகுதிகளில் மண், கல் போன்றவற்றால் சுவாசப்பாதை […]

Posted in செய்திகள், No Comments »
நடந்துபார் .. குருதிக் குளுக்கோஸ் ஓட்டம் பிடிக்கும்…!

அதீத தொழில்நுட்பங்களும் நவீன வாழ்க்கை முறைகளும் எம் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்திருக்கின்ற போதிலும் எம்மிடையே காணப்பட்ட நாம் அன்றாட வாழ்வில் செய்து வந்த பல இலகுவான உடல் அப்பியாசங்களை இல்லாதொழிக்க காரணமாகியுள்ளன. இதுவே நாம் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டதற்கான அடிப்படைக் காரணியாகும். உடற்பயிற்சியில் ஈடுபடுகயைில் உடற்தசை இழையங்கள் குளுக்கோசின் முழு வினைத்திறனுடன் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அத்தோடு இவ்வினைவானது 1 – 2 நாள்கள்வரை நீடிக்கிறது. எனவே நாளாந்தம் உடற் பயிற்சியில் ஈடுபடுவதானது குருதியில் குளுக்கோசின் […]

Posted in செய்திகள், No Comments »
இ-ரீடர்கள் தூக்கத்தை பாதிக்குமா?

இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. தற்போது அந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து […]

Posted in செய்திகள், No Comments »
பறவைகளால் பேரழிவுகளை முன்கூட்டியே உணரமுடியும்.

சில பறவைகள் பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்டமை. அவ் சந்தர்ப்பங்களில் அவை தம் இருப்பிடங்களை விட்டுச் சென்று எமக்கு முன்கூட்டியே அறியத்தருகின்றது. சுனாமி ஏற்படும் நாளுக்கு முன்பே சில பறவைகள் தமது இருப்பிடத்தை விட்டு பறந்து சென்று பேரழிவு ஏற்படப் போவதை எமக்கு அறியத்தந்துள்ளது. தொலைதூரம் பறந்து செல்லும் பறவைகளான பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப் பறவைகள் இந்த இயற்கை அழிவுகளை வெகு சீக்கிரம் அறிந்துவிடும். இப்பறவைகள் இந்த ஏப்ரல் மாதம் தென்னளி பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட […]

Posted in செய்திகள், No Comments »
ஒளிரும் பூச்சி இனம்

பூச்சி இனங்கள் பல தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டவை. அதில் மின்மினிப் பூச்சியும் ஒன்றாகும். மின்மினிப் பூச்சிகளை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அது எப்படி இந்த பூச்சி மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது உண்டு. மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று அழைக்கிறார்கள், Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பூச்சி ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது […]

Posted in செய்திகள், No Comments »
யாழ் குடாநாட்டு நீர் மாசுபடுதலும் அதனால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளும்.

ஒருவரின் வாழ்விற்கான அடிப்படைத்தேவை எதுவென எவரையேனும் வினவும் போது கிடைக்கும் விடையானது உணவு, உடை, உறையுள் என்பதாகும் ஆனால் ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும் தண்ணீர் இல்லாமல் ஒருவாரம் கூட வாழ முடியாது. இதற்கு மூலகாரணம் எமது உடம்பானது கிட்டத்தட்ட 70 வீதமானது நீரால் ஆனது. நீரானது உடல் முழுவதும் உணவு, ஒட்சிசன் வாயு மற்றும் உடலின் பலபாகங்களிலுள்ள கலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பதார்த்தங்களை கொண்டு செல்பதுடன் அவ்வாறான […]

Posted in செய்திகள், No Comments »
மூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்!

மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக […]

Posted in செய்திகள், No Comments »
எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை என்ன செய்யப் போகிறோம்? – பகுதி 3

சுன்னாகம் மண்ணிலும் அதன் நிலத்தடி நீரிலும் கலந்துபோயிருக்கும் பெருமளவிலான எண்ணெய்ப் படிவுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் இந்த மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கும் இனி என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும். முதலாவதாக எண்ணெய்க்கலப்பு நடந்திருக்கும் பகுதிகள் தெளிவாக இனம் காணப்பட்டு அந்தப்பகுதி மக்களுக்கு மாற்று குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுவது நல்லது. அத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நிலத்தடி நீரை குடிப்பதற்கோ சமையலுக்குப் பாவிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இதற்கு மேலதிகமாக புதிதாக சுற்றாடலிலோ அல்லது […]

Posted in செய்திகள், No Comments »
எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை என்ன செய்யப் போகிறோம்? – பகுதி2

பொன்கொழிக்கும் பூமியாக பரந்த விவசாய நிலங்களையும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சுன்னாகம் மண்ணின் நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரம் லீற்றர் கழிவு எண்ணெயை எவ்வாறு அகற்றப் போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு அகற்றப்போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றோம். இதனால் மனிதனில் ஏற்படக்கூடிய பெரிய சுகாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும்? இந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களிலும் தாவரங்களிலும் […]

Posted in செய்திகள், No Comments »
எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை என்ன செய்யப் போகிறோம்?

சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் […]

Posted in செய்திகள், No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com