Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



யாழ் குடாநாட்டு நீர் மாசுபடுதலும் அதனால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளும்.

ஒருவரின் வாழ்விற்கான அடிப்படைத்தேவை எதுவென எவரையேனும் வினவும் போது கிடைக்கும் விடையானது உணவு, உடை, உறையுள் என்பதாகும் ஆனால் ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும் தண்ணீர் இல்லாமல் ஒருவாரம் கூட வாழ முடியாது. இதற்கு மூலகாரணம் எமது உடம்பானது கிட்டத்தட்ட 70 வீதமானது நீரால் ஆனது. நீரானது உடல் முழுவதும் உணவு, ஒட்சிசன் வாயு மற்றும் உடலின் பலபாகங்களிலுள்ள கலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பதார்த்தங்களை கொண்டு செல்பதுடன் அவ்வாறான சிறிய கலங்களினால் வெளியேற்றப்படும் உடலுக்கு தேவையற்ற நச்சுப்பதார்த்தங்களை வெளியேற்றுவதற்கும் நீர் தேவைப்படுகின்றது. காலின் நுனி விரலில் இருந்து தலையின் உச்சி பகுதி முழுவதும் நீரின் இப்பணி தங்கு தடையின்றி நடைபெறுதல் அவசியம். இப்போது நம் எல்லோருக்கும் தெரியும் நீரின் முக்கியத்துவம் நீரானது மனிதனுக்கு மட்டும் அல்லாது புவியிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கும் முக்கியமானது.

ஒருவரின் உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காகவும், உடல் வெப்பநிலையை பேணுவதற்காக உடலில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை லீட்டர் தண்ணீர் உடலில் இருந்து வெளியேறுகின்றது. உடலில் இருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்குத்தக்கப்படி உடலானது தண்ணீரை எதிர்பார்க்கும். அவ்தண்ணீரானது சரியான அளவில் கிடைக்காது விடின். உடலில் கால் முதல் உச்சிவரையான பதார்த்தங்களை கொண்டு செல்லும் தொழிலானது சரியான முறையில் செயற்படுத்த முடியாது. இதனால் உடலில் உடல் முழுவதும் நீரை கொண்டு செல்வதற்கான பம்பியாக (மோட்டார் இயந்திரம்) தொழிற்படும் இதயம் வேகமாக தொழிற்பட வேண்டி ஏற்பட்டு அதனை தொழிற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, சிறுநீரகமானது சிறுநீரை வெளியேற்றுவதை குறைக்கும். அல்லது நிறுத்தப் பார்க்கும், இதனால் சிறுநீரகத்தின் தொழிற்பாடு பாதிப்படையக் கூடும். இதனால் உடலில் நச்சு பொருட்களின் அளவு அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள அனைத்து அங்கங்களும் அவற்றின் தொழிற்பாட்டை இழக்கவேண்டி வரும் எனவே ஒருவர் அவருக்குத்தேவையான நீரை அன்றாடம் எடுத்தல் முக்கியமானது மட்டுமன்றி மனிதனின் உடலானது சுற்றாடலுக்கு வெளிப்படுத்தப்படும் போது சுற்றாடலில் கண்ணுக்கு புலப்படக்கூடிய மற்றும் கண்ணுக்கு புலப்படாத மாசு பொருட்களின் தொற்றுதலுக்கு உட்படுகின்றது.

இவ் மாசுபடுதலில் இருந்து சுத்தப்படுத்த நீரானது தேவைப்படுகின்றது. நீரைப்பயன்படுத்தி இவற்றை சுத்தப்படுத்தவிடின் மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. அதே நேரம் ஒருவர் சுத்தமான நீரை உள் எடுக்காவிடினும் அசுத்த நீரினூடாக பல்வேறு நோய்கள் ஏற்படுனின்றது. எனவே சுத்தமான நீரானது மிகவும் முக்கியமானது. அனால் இன்று உலகளாவிய ரீதியில் இவ்முக்கியமான நீர்வளமானது குறைந்து செல்வது மட்டுமல்லாது அதன் பாவிக்கப்படக்கூடிய தன்மையை இழந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணம் சுற்று சூழலை பாதிக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் ஆகம்.

இயற்கையிலேயே சுத்தமான இவ்நீரானது எவ்வாறு மாறுபடுத்தப்படுகின்றது என்று பார்த்தால் நீர் வட்டத்தினூடாக வரும் சுத்தமான நீரானது வேறுபட்ட அசேதன, சேதன மற்றும் உயிரியல் சார்ந்த மூலங்களினால் பாதிப்புக்கு உட்படுகின்றது. உலகில் கிட்டத்தட்ட 80 வீதமான தொற்றுநோய்கள் நீரினால் பரப்படுகின்றது இதனால் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். என உலக சுகாதார நிறுவனத்தினால் கணிப்பிடப்பட்டதுடன் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் பெரும்பாலும் சிறுவயது குழந்தைகளும் பெரியவர்களும் வயிற்றோட்டத்தினால் மாத்திரம் இறக்கின்றனர். நீரை மாசுபடுத்தும் காரணிகளை மூன்று வகையாகப் பரிக்கலாம் அவையாவன சேதனமாசுக்கள், அசேதன மாசுக்கள் மற்றும் உயிரியல் மாசுக்கள் என்பனவாகும்.

பொதுவாக பாரம் கூடிய உலோகங்கள் ஆன, ஈயம் (PB), இரசம் (Hs), ஆசனிக்(As) மற்றும் கட்டியம் போன்றனவும் மூலக்கூறுகளன பொஸ்பேற்றுகள், நைத்திரேற்றுகள் போன்றனவும் அத்துடன் கதிர்வீச்சுப் பொருட்களும் நீரை மாசுபடுத்துகின்றன. இவ் கழிவு பொருட்கள் பொதுவாக தொழிற்சாலை கழிவுகளாக சூழலினுள்விடப்படுவதுடன், தொழிற்சாலையில் இருந்துவரும் பல விளைபொருட்களில் இவ் அதோப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஈயமானது பெட்ரோல் போன்ற ஏரிவாயு பொருட்களில் பாவிக்கப்படும் நிறப்பூச்சுகள் மற்றும் அச்சுப்பதிபிற்கு பயன்படுத்தப்படும் மைகள், பற்றரிகள், தண்ணீர் குளாய்களை இணைக்கும் ஈயப் பொருத்திகள் போன்ற இன்னோரன்ன பொருட்களில் காணப்படுகின்றது. இவற்றில் பெரும்பாலான பொருட்களில் ஈயத்தை பாவிப்பதை பல வளர்ந்த நாடுகளில் நிறுத்தி விட்டார்கள் உதாரணமாக ஐக்கிய அமேரிக்காவில் 1990 களின் பிற்பகுதிகளில் இருந்து பல்வேறு பட்ட சட்டங்களின் ஊடாக இவற்றின் பாவனைகளை குறைத்து விட்டார்கள். இவற்றின் பாதிப்புகள் பற்றிய மருத்துவ ஆய்வுகளே இதற்கான காரணமாகும். போதுவாக நீண்டகால ஈய நஞ்சாக்கத்தினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படும்.

1. ஒருவரின் நடத்தை மற்றும் கிரகித்தலில் பாதிப்பு
2. பாடசாலையில் திறம்பட செயற்படமுடியாமை
3. கேட்டல் பிரச்சினைகள்.
4. சிறுநீரகப் பாதிப்புகள்.
5. புத்திசாலித்தனம் குறைதல்.
6. உடல் வளர்ச்சி போன்ற சில முக்கியமானவை

ஆனால் எமது பகுதிகளில் ஈயத்தினை பாவிப்பதன் ஊடாக நேரடியாகவும் நீரின் மூலமும் ஈய நஞ்சாக்கமானது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இதே போன்று ஆசனிக் கட்மியம் போன்ற மூலகங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பலவுள்ளன. இவற்றில் முக்கியமானது சிறுநீரகத்தை பாதிக்கின்ற நோயாகும். இதனைப்பற்றி பிறிதோரு கட்டுரையில் விரிவாக பார்த்தல் காலத்திற்கு பொருத்தமானது.

பீடை கொல்லிகளை கொல்லிகள் உட்பட மற்றும் வீடுகளில் பொதுவாக பாவிக்கும் இரசாயனப்பொருட்கள், தொழிற்சாலையில் பாவிக்கும் பொருட்களின் ஊடாக சேதன மாசுக்கள் பரப்படுகின்றன. இவற்றின் தாக்கங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நிருபனமாக்கிகொண்டுள்ளது. உதாரணமாக கிளைபொஸ்பேற்று (glyphosate) பொதுவாக ரவுண்டப் (roundup) பற்றிய பல ஆய்வுகள் அவற்றின் பாதிப்புகளை பற்றி நீருபிக்க முற்பட்டுள்ளன. இவை பற்றிய நீருபனங்களில் கேள்வி எழுப்பதன் ஊடாக இவற்றின் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் இன்னொரு விடையமானது கருத்தில் எடுத்தல் முக்கியமானது. விஞ்ஞான மருத்துவ ஆய்வுகளின் விஞ்ஞான ரீதியாக நிரூபனங்களுக்கும் வியாபார உலகிற் தொடர்புகளும் இவற்றை பற்றி விரிவாக மக்கள் அறிந்திருப்பதும் முக்கியமானதை இலங்கையில் இப்பொருளானது விவசாயத்துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்ததுடன் அண்மைக்கால சிறுநீரகநோய்களின் அதிகரிப்புடன் அவற்றை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகள் பேற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் பாவிக்க குறிப்பிட்டளவில் பாவிக்க அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இவ் சேதன பாதார்தங்களின் ஊடாக தாவரங்களில் சென்று பின்னர் உணவினூடாகவும் மனிதனின் உடலை அடைந்து தீங்கை விளைவிக்கின்றன.

வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன்
சமூக மருத்துவ நிபுணர்.
சிரேஷ்ட விரிவுரையாளர்.
தலைவர் குடும்ப மற்றும் சமூதாய மருத்துவத் துறை.
மருத்துவபீடம், பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.

Posted in செய்திகள்
« சிறுவர்களிடையிலான வாசிப்பு பிறழ்வு
சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு – 2014 »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com