Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    October 2015
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep   Nov »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2015

நோயாளர்கள் மருந்துவகைகளைப் பாவிக்கும்போது விடக்கூடிய தவறுகள்

நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும்போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக் காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படு கின்றது. நோய் குணமான பின்பும் மருந்து வில்லைகளை உபயோகிக்க வேண்டும்?” சில நோய்கள் மட்டுமே குறுகிய மருந்துகள்மூலம் முற்றாகக் குணப்படுத்தக்கூடியன. சில நோய்களுக்கு நீண்டகால அடிப்படை யில் மருந்துகளைத் தவறாது உள்ளெடுப்பதன்மூலம்தான் […]

Posted in கட்டுரைகள், No Comments »
நகங்களின் பாதுகாப்பு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல உடலின் நலத்தை, நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம். நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்கமுடியும். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மை யான நரம்புக் கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருள்களைக் கையாளவும், நமது தொடுஉணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் […]

Posted in கட்டுரைகள், No Comments »
வைத்தியசாலையில் தொற்றும் நோய்த் தொற்றுக்களைத் தடுத்தல்

வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக் கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்களிலிருந்துநாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி?  வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நாள்களை இயன்றவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோயுடைய வேறு நோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக சுவாசத் தொற்றுடைய நோயாளிகளை (TB) கைகளைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் சரியான முறையில் கழுவிக் கொள்ள வேண்டும்.  சாப்பாட்டுக்கு முன் மருந்து […]

Posted in கட்டுரைகள், No Comments »
எடை காத்து நலத்தைப் பேணுங்கள்

“மிகினும் குறையினும் நோய் செய்யும்” உடலில் உள்ள மூலப் பொருள்களில் எப்பொருள் மிகுந்தாலும் அல்லது எப்பொருள் குறைந்தாலும் உடலுக்கு ஊறு ஏற்படும் என்பதனை வள்ளுவர் அழகாகக் கூறியுள்ளார். எனவே, உடலுக்குத் தேவையான சத்தான சரிவிகிதமான உணவுகளை எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வேளாவேளைக்குச் சரியான இடைவெளியில் சாப்பிடுதல் முக்கியம். உங்களை உயிர்ப்புடையவராக வைத்திருப்பதற்கும் உங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கும் உங்களுக்கும். இவ்வுலகுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் […]

Posted in கட்டுரைகள், No Comments »
தாய்ப்பாலின் மகத்துவம்

பெண் கர்ப்பமானது முதற்கொண்டு தனது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற உணர்வும் முனைப்படையத் தொடங்குகிறது. இதற்கேற்ப அந்தப் பெண் தனது உடலையும் தயார் செய்து கொள்கிறாள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதில் காணப்படும் உத்வேகமும் அவசரமும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதில் காணப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிகவும் முக்கியமானது அனேகமான தாய்மார்கள் தமக்குப் பால் சுரப்பதில்லை. அல்லது அதன் சுரப்புக் குறைவாகக் காணப்படுகிறது. எனக் காரணம் கூறுகின்றார்கள். இது […]

Posted in கட்டுரைகள், No Comments »
உயர் குருதியமுக்கமும் அதனைத் தடுக்கும்வழிமுறைகளும்

உயர் குருதியமுக்கம் என்றால் என்ன? சாதாரணமாக எம்மில் இரத்தக்குழாய்களினூடாகக் குருதி பாய்கை பில் நாடிகளின்சுவர்களில் அமுக்கமொன்று ஏற்படுத்தப்படுகிறது.  இது இதயம் சுருங்கும்போது 120mmHg இலும் குறைவாகவும், இதயம் தளரும்போது 80mmHg இலும் குறைவாகவும் சாதாரணமானவர்களில் இருக்கும். இதனையே வைத்தியல் 120/80 mmHg எனக் குறிப்பர். சில சந்தர்ப்பங்களில் இந்த அமுக்கமானது 140/90mmHg இனைவிட அதிகரிக்கும்போது அதனையே உயர்குருதியமுக்கம் என்கிறோம். உயர் குருதியமுக்கம் ஏற்படும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? ஆரம்பத்தில் அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் நீண்ட காலமாகக் […]

Posted in கட்டுரைகள், No Comments »
கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரிட்டன் ஒப்புதல்

பிரிட்டனில் முதல்முறையாக பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்குத் தேவையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு ஸ்வீடனில் இத்தகைய கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை தான் உலகிலேயே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்வீடனில் உயிருடன் இருக்கும் பெண்ணின் கர்ப்பப்பையை மாற்று அறுவை சிகிச்சை […]

Posted in செய்திகள், No Comments »
புரத மரக்கறி கூழ்

செய்முறை மரக்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் இடவும். நனைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாக அவிய விடவும். அவிந்து நீர்வற்றி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி கலவையை மசித்தல் வேண்டும். பின் உப்பு, மிளகு, மஞ்சள் தூள், சீரகத்தூள், சேர்த்து மீண்டும் சிறிது சூடாக்கி கூழ்பதம் வரும் போது இறக்கவும். ஆறியதும் தேசிப்புளி சேர்த்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் கரட் 1 கோவா சிறிய துண்டு துவரம் பருப்பு 100 கிராம் லீக்ஸ் 1 வெண்டிக்காய் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
ஆரோக்கிய முதுமை தருமே – அர்த்தம் நிறைந்த வாழ்க்கை

முதுமை என்பது தனி மனித வாழ்க்கைச்சக்கரத்தில் ஒரு பருவமே. இது நோய் அல்ல. ஆனால் பல நோய்களின் விருப்பத்திற்கு உரிய இடமாக இது உள்ளது என்பதுதான் உண்மை. அரோக்கியமான முதுமை என்பது தானும் சந்தோசமாக இருந்து கொண்டு மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவதே. வளரிளம் பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட நல்ல பழக்கவழக்கங்களே ஆரோக்கிய முதுமையைத்தரும். மாறாக, புகைத்தல், மதுபான பழக்கம், போதைப்பொருள் பாவனை, முறையற்ற பல பெண்களுடனான தொடர்புகள், ஆரோக்கியமற்ற உணவுப்பாவனை போன்ற தகாத பழக்கங்களைக்கொண்ட வளரிளம் பருவம் நல்ல […]

Posted in கட்டுரைகள், No Comments »
பழப்பால் பானம்

செய்முறை விதை நீக்கிய விளாம்பழத்தையும், பப்பாசிப்பழத்தையும், ஐஸ்கட்டியையும் மிக்ஸியில் இட்டு அடித்து எடுத்த பின் அதனுள் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் அன்னாசி, அப்பிள், துண்டுகளை இட்டு கலக்கி பின் அப்பானத்தை கப் ஒன்றுக்குள் இட்டு அதன் மேல் பால்மாவை இட்டு பரிமாறவும். தேவையாயின் இனிப்பூட்டியை சேர்த்துக் கலக்கவும்   தேவையான பொருட்கள் ஐஸ்கட்டி   –     1 விளாம்பழம் – 1 பப்பாசிப்பழம் – சிறியது அன்னாசி – 1 அப்பிள் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
« Older Entries
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com