Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    February 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  
    « Jan    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

கட்டுக்கடங்காது பெருகி வரும் விபத்துக்கள்

அண்மைக்காலமாக A9 வீதியிலும் யாழ்குடா நாட்டிலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் பெருமளவு அதிரித்துக் காணப்படுகின்றது. இது பல இறப்புக்களுக்கும், நிரந்தர உடற்பாதிப்புக்களுக்கும் காரணமாக அமைகின்றது. தினந்தோறும் வாகன விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் விடுதிகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பெரும் இட நெருக்கடி காணப்பட்டு வருகின்றது. இலகுவில் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இவ் வாகன விபத்துக்கள் காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்கு ஆளாகி வருவதுடன், பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனர். வாகன […]

Posted in செய்திகள், No Comments »
இலங்கையில் அதிகரித்து வரும் இளவயதுத் திருமணங்கள் பெரும் சுகாதாரப்பிரச்சினையாக மாறும் ஆபத்து

அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் இலங்கையில் இளவயதுத்திருமணங்கள் அதிகரித்து வருவதையும் இதனால் பாரிய உடல், உள, சமூக பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றது என்பதையும் கோடி காட்டி நிற்கின்றது. யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார்…. சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் […]

Posted in செய்திகள், No Comments »
உடற்பருமன் அதிகரிப்பால் ஆண்டு தோறும் 30 இலட்சம் பேர் இறப்பு!

உலகளாவிய அளவில் போஷாக்கின்மையால் 10 இலட்சம் மக்கள் ஆண்டுதோறும் இறப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. இதனைத் தடுப்பதற்கு பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில்  உடற்பருமன் அதிகரிப்பால் ஆண்டுதோறும் 30 இலட்சம் பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 […]

Posted in செய்திகள், No Comments »
நல்ல நினைவுகளை கூடிய நேரம் நினைத்துப் பார்ப்பது நல்லது

மனித வாழ்வில் நல்ல சம்பவங்களும் தீய சம்பவங்களும் மாறிமாறி நடந்த வண்ணம் இருக்கின்றன. நடந்த முடிந்த தீயவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தித்து மனம் நொந்து கொண்டு இருப்போமாயின் நாம் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் அதிகமாகும். நாம் அன்றாடம் நல்ல விடயங்களை சிந்திக்க கூடியளவு நேரத்தையும் பிரச்சனையான விடயங்களைச் சிந்திக்க குறைந்தளவு நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும். மனித மூளையும் இதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மனிதனின் நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை […]

Posted in செய்திகள், No Comments »
மார்பக புற்றுநோய் வருமுன் கண்டறிய உரிய இரத்தப்பரிசோதனை

உலகெங்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதனைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதமே. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு புதிய எளிய இரத்தப்பரிசோதனை மூலம் மார்பகப்புற்று நோய் ஏற்படும் ஆபத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த […]

Posted in செய்திகள், No Comments »
கரப்பான் பூச்சிகள் ஆபத்தானவை!

கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சியானது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றாதா என்பது சிலருக்கே தெரிகின்றது. கரப்பான் பூச்சியானது தனது மலக்கழிவு உமிழ் நீரினூடாக உணவு, நீர் என்பவற்றினை மாசடையச் செய்கின்றது. இக்கழிவுகளால் வயிற்றோட்டம், உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார […]

Posted in செய்திகள், No Comments »
எழுந்து வரும் புற்றுநோய் பேரலை

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புற்றுநோயாளரின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவது அறியப்பட்டுள்ளது. இதில் மனவருத்தத்திற்குரிய விடயம் யாதெனில், இந்தப் புற்றுநோய்களில் பாதிக்கும் அதிகமானவை பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் தவிர்த்திருக்கக் கூடியதாக இருப்பதேயாகும். புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்ப்பது எவ்வாறு என்பது சம்பந்தமான தகவலை யாவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பது சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக: புகை பிடித்தல் கிருமித்தொற்று […]

Posted in செய்திகள், 1 Comment »
ஆயுள் அதிகரிக்கும் பாதாம் மற்றும் வால்நட்

பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று “நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை”யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. தினமும் ஒரு […]

Posted in செய்திகள், No Comments »
நீரிழிவு நோயாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்துவருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய நீரிழிவுநோயாளர்களும், பாதங்களில் பாதிப்புள்ள நீரிழிவு நோயாளர்களும் இந்தக் கருத்தரங்கில் இலவசமாகப் பங்கு பற்றலாம். பாதணிகள் தேவைபற்றிய ஆய்வுகள் நீரிழிவுநோயாளர்களுக்கு இலவசமாகச் செய்து […]

Posted in செய்திகள், No Comments »
பெண்கள் வல்லமை கூடியவர்கள்

பொதுவாக நம் வாழ்க்கையில், குடும்ப சுமைகளை ஆண்களா, பெண்களா சுமக்கின்றனர் எனும் கேள்வி இருந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலை காரணமாக பல குடும்பச்சுமைகளை பெண்களே தனிமையாக வெற்றிகரமாகத் தாங்கி குடும்பத்தினை நல்ல முறையில் நடாத்தி வருகின்றார்கள். ஆண்கள் பொதுவாக குடும்பத்திற்கான வருமானத்தைத் தேடிக்கொள்வதில் பெரும்பங்கு ஆற்றினாலும் பெண்கள் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு மேலதிகமாக குடும்பப் பராமரிப்பு, சமையல், பிள்ளைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களை கவனிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் […]

Posted in செய்திகள், No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com