Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

உலகில் புகைப்பிடிப்போர் வீதம் அதிகரிப்பு

உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்து விட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உலக மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், புகைப்போரின் விகிதம் குறைந்து வருவதாக அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துருக்கிறார்கள். உலக மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா போன்ற சில நாடுகளில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான ஆண்கள் […]

Posted in செய்திகள், 1 Comment »
காரைநகர் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்தில் மருத்துவ முகாம்

காரைநகர் வட மத்தி முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்தில் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் Dr.M அரவிந்தன் (அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்) தலைமையில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Posted in செய்திகள், படங்கள், No Comments »
முடி உதிர்தலுக்கு நிரந்தர தீர்வு

உலக அளவில் ஆண்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் வழுக்கைத்தலை மிக முக்கிய ஒன்றாக விளங்குகின்றது. வழுக்கையைத் தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவைச் சிகிச்சை முறை என்று பலவகை மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை நிரந்தரத் தீர்வைத் தரவில்லை என்றே பார்க்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில் மனிதர்களின் முடியை செயற்கையாக […]

Posted in செய்திகள், 20 Comments »
நோயாளர்களின் அநாவசிய சிரமத்திற்கு காரணம் என்ன?

தற்போது யாழ் குடாநாட்டின் ஏனைய பிராந்திய வைத்தியசாலைகளும் போதிய வைத்திய வசதிகளைக் கொண்டிருந்தும் அநேகமான நோயாளர்கள் தமது சிறிய சிறிய மருத்துவப் பிரச்சினைகளுக்குக் கூட யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவதையே பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் அநாவசியமான நேரத்தைச் செலவு செய்வதுடன் போக்குவரத்துக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் தமது பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள அரசாங்க வைத்தியசாலையில் தமக்கு வேண்டிய அதி உச்ச மருத்துவப் பயன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சியெடுப்பது நல்லது. […]

Posted in செய்திகள், No Comments »
யாழில் முதுமை மூளை நோய் அதிகரிப்பு

யாழ் குடாநாட்டில் முதுமை மூளை நோய் வேகமாக அதிகரித்துவருகின்றது. அண்மைக்காலமாக யாழ் நகரில் “டிமென்சியா” (முதுமையில் ஏற்படும் ஒரு வகை மறதியுடன் கூடிய மூளை அழற்சி) எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். மற்றைய பகுதிகளை விட யாழ் நகரில் ஒப்பீட்டளவில் முதியவர்களின் விகிதாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது. அடுத்து வாழும் வயதெல்லை அதிகரித்து வருவது இதற்கு ஒரு காரணம் ஆகும். உறவினர்கள், குடும்பங்கள் பிற நாட்டில் […]

Posted in செய்திகள், No Comments »
சொக்லேட் – நீரிழிவிற்கு ஆபத்து

யாழில் நீரிழிவு நோய்க்குள்ளாபவர்களதும் கட்டுப்பாட்டினை இழக்கின்ற நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிதீவிரமாக அதிகரித்து வரும் நிலைமை காணப்படுகின்றது. இந்நிலைக்கான காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு உறவினர்கள் கொண்டுவரும் “சொக்லேட்” என்றே வைத்திசயசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மாதமொன்றிற்கு இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் மூலம் கொண்டு வரப்படும் சொக்லேட் தொன்கணக்குகளில் காணப்படுகிறது. உறவுகளின் மேலுள்ள அன்பு மேலீட்டால் வழங்கும் வெளிநாட்டு “சொக்லேட்டுகள்” தம் உறவுக்கு உடற்பருமன் அதிகரித்தல், நீரிழிவுக்குள்ளாகும் ஆபத்தை ஏற்படுத்தல் கட்டுப்பாடற்ற நீரிழிவை ஏற்படுத்துதல் பற்சூத்தை […]

Posted in செய்திகள், No Comments »
செவ்விளநீர் கன்றுகள் விநியோகம்

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினால் 20.11.2015 அன்று உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டில் பாடசாலைகள் பொது அமைப்புக்களுக்கு செவ்விளநீர் கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. பொது மக்களிடையே சோடா, மென்பானங்கள் போன்றவற்றின் பாவனையை குறைத்து இயற்கையான உற்பத்திகளை உபயோகிக்க வைக்கும் முகமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

Posted in Sildeshow, செய்திகள், No Comments »
உணவு தயாரித்தல் போட்டி

நீரிழிவு உயர் குருதியமுக்கம் மற்றும் கொலஸ்திரோல் அளவு கூடுதலாகக் காணப்படுதல் என்பன எமது சமுதாயத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. உணவு முறைகளில் ஏற்படும் மாற்றமானது பொது மக்களின் ஆரோக்கியத்தில் பிரதானமான பங்கை வகிக்கிறது. இலங்கை மக்களிடையே ஆரோக்கிய மான உணவுமுறைகளை ஊக்குவிப்பதில் இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்கள் கல்லூரியின் பிரிவான நீரிழிவு அற்ற இலங்கை (DIBETES SRI LANKA) உதவி வருகின்றது. இந்த அமைப்பானது எமது கலாசாரத்துக்கமைவான, சுவையான மற்றும் இலகுவாகத் தயாரிக்கக்கூடிய உணவுவகைகள் பற்றி பொது மக்களை […]

Posted in செய்திகள், No Comments »
கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரிட்டன் ஒப்புதல்

பிரிட்டனில் முதல்முறையாக பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்குத் தேவையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு ஸ்வீடனில் இத்தகைய கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை தான் உலகிலேயே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்வீடனில் உயிருடன் இருக்கும் பெண்ணின் கர்ப்பப்பையை மாற்று அறுவை சிகிச்சை […]

Posted in செய்திகள், No Comments »
பாம்புக் கடியும் விஷ முறிவு மருந்தும்: ஒரு புரிதல்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பாம்பு விஷத்தில் என்னவுள்ளது? பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு […]

Posted in செய்திகள், No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com