தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்துவரின் உடல் எடை குறைந்திடும். இதய அடைப்புக்கள் இல்லாது போகும், தசைகள் தாமே வலுப்பெறும்,குறுதி அழுத்தம் சீராகும். சலரோகம் கட்டுப்பட்டு சாதாரண் குருதி வெல்ல நிலமை ஏற்படும். இவ்வாறாக பல நன்மைகள் எமக்கு நடைப்பயிற்சியினால் ஏற்படுகின்றன என்பது நாம் அறியயாததல்ல.
உடல் இயங்கு நிலைகுறைவாகவுள்ள ஒருவரில் குருதிச் சுற்றோட்டம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக கிடைப்பதில்லை. இயங்கு நிலையில் தன் செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொள்ளும் ஒருவரில் கால்களில் குருதித் தேக்கம் குறைந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் குருதி பம்பப்படும். அதேசமயம் நுரையீரல்களும் நன்கு விரிந்து அதிகளவு காற்றை உள்ளிளுப்பதனால் குருதியில் அதிகளவு பிராண வாயு கரைந்து உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் போதியளவு ஒக்சிசன் கிடைக்கப் பெறும் அதன் காரணமாக செயற்றிறன் அவற்றின் ஆரோக்கியமாகவும் சீராகவும் இடம்பெறும் என்பதனையும் நாம் அறிவோம்.
தினமும் காலை மாலை வேளைகளில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் குறைந்தது முப்பது நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்துவரின், உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறைந்து ஆரோக்கியமான வசீகரமான கட்டான உடலமைப்பு ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சியும் ஆக்க சக்தியும் அதிகரிக்கும். குருதி நாளங்களில் படிந்துள்ள கொழுப்பினளவு குறைவதனால், குருதிச்சுற்றோட்டம் சீராகின்றது. இதயத்துக்கான வேலைப்பளு குறைகின்றது. இதன் காரணமாக குருதி அழுத்தம் அதிகரித்தியாது, சாதாரண ஆரோக்கிய நிலையில் பேணப்படுவதனால் இதய ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுள் அதிகரிக்கும். நடைப் பயிற்சியின் போது கை வீசி உடல் வியர்க்கும் வேகத்தில் நடத்தல் வேண்டும். கைவீசி நடந்தால் கலோரிகள் எரியும் என்பதையும் நாம் அறி வோம்.
நடைப்பயிற்சியின் நிறைவில் நடைப்பயிற்சியினால் ஏற்பட்ட களைப்பை நீக்குவதற்காக உற்சாக பானம் அருந்துதல், புகைபிடித்தால், அதிக சீனி/இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களை அருந்துதல் எண்ணெயினுள் அமிழ்த்திப் பொரிக்கப்பட்ட கோதுமை மாவுப்பண்டங்களை உண்ணுதல் போன்றவை எதிர்பார்க்கப்படும் நன்மைகளுக்கு பதிலாக எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.
இந்தப் பயிற்சியினால் தொற்றாநோய்களின் தாக்கங்களிலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளும் வழி உண்டு என்பதை நாம் உணர்ந்தாலும் அதனை செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்துடனும் இருந்தாலும் அதற்கான நேரத்தை கண்டுபிடிப்பதே முயல் கொம்பாக உள்ளது. இயந்திரத் தன்மையான இலத்திரனி யல் வாழ்வியல் நடைமுறையில் நடைப்பயிற்சிக் கான நேரம் காணாமலேயே போய்விட்டது.
நடைமுறைப் பயிற்சி செய்வதற்கான நேர முகாமைத்துவம் செய்ய இயலாதவர்களும் நேரத்தை கண்டுபிடிக்க முடியாதோரும் நடைமுறைப்பயிற்சியை தம் வாழ்வுடன் இணைந்ததாக மாற்றிய மைத்திட்டால் நீண்டு நிலைக்கக் கூடிய நடை பயிற்சியின் நன்மைகள் அனுபவித்திட முடியும்.
எம் வாழ்வுடன் இணைந்ததாகவும் இசைந்தாகவும் கீழ்வரும் செயன்முறைகளை இயலுமான வரை நடைமுறைப்படுத்திட முயற்சித்துப் பார்க் கலாமே!
வேலைத்தளங்களில் செய்யக்கூடிய நடைப் பயிற்சிகளான
- மாடிகளில் ஏறுவதற்கு மின் உயர்த்திகளையோ எஸ்கலேற்றர்களையோ பாவிக்காது மாடிப்படிகளில் நடந்தே சென்றடைவோம்.
- சென்றடைய வேண்டிய இடங்களுக்கு சற்று தூரவாகவே வாகனங்களை நிறுத்தி இறங்கிக்கொள்வோம்.
- மதிய உணவின் பின்பு 10நிமிடங்கள் வரை மேலதி கமாக இருப்பின் படிகளில் ஏறி நடந்திடுவோம்.
- தேனீர் இடைவேளைகளில் இயலுமானவரை நடக்க முற்படுவோம்.
- வேளையிலீடுபட்டிருக்கும் போது நீர் அருந்த விரும்பும் போதெல்லாம் எழுந்து சிறிது தூரம் நடந்திடுவோம்.
- சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே இடத்தில் இருப்பதற்கு பதிலாக எழுந்து நடந்திடலாம்.
- சக உத்தியோகத்தரை அழைப்பதற்கு பதிலாகவோ அல்லது மெயில் செய்வதற்கு பதிலாகவோ அவரது மேசை வரை நடந்திடலாம்.
- சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வேக நடை செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
- தொலைபேசியில் உரையாடும்போது எழுந்து நின்று உரையாடலாம்.
- புத்தகம் படிக்கும்போது ஒவ்வொரு ஆறு பக்கங்களுக்கும் ஒருதடவை எழுந்து சிறுதூரம் நடந்திடலாம்.
- கைதொலைபேசிகளில் உரையாடும் சந்தர்ப்பங்களில் எழுந்து நின்றோ நடந்து கொண்டோ உரையாட முயற்சிக்கலாம்.
- ஓய்வு அறைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் நடக்கக்கூடிய பாதையைதெரிவு செய்திடலாம்.
வீட்டில் செய்யக்கூடிய நடைப்பயிற்சிகள்
- தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வர்த்தக இடை வேளையின் போதும் எழுந்து நடந்திடலாம்.
- மனதுக்கு விருப்பமான பாடல்களுக்கு நடனம் ஆட டிடலாம்
- ஒவ்வொரு நாளும் 15-30வரையாவது நிமிடங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடலாம்.
- விறாந்தையில் வேக நடை செய்திடலாம்.
- அருகிலுள்ள கோயில்களுக்கு நடந்தே சென்று வந்திடலாம்.
- அருகிலுள்ள கடைகளில் பொருள்களை வாங்க நடந்தே சென்று வந்திடலாம்.
இவ்வாறான கிடைக்கின்ற சிறு சிறு சந்தர்ப்பங்களையும் நடைப்பயிற்சி செய்திடவாய்ப்பாக பயன்படுத்திடலாம். நடைப்பயிற்சியின் நன்மைகளை அனுபவரீதியில் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர். போலும் அதனால் தான் அயல் ஆலயங்களுக்கு நடந்து செல்லுதல் தூரத்து கோயில்களுக்கு பாத யாத்திரை செய்தல், ஆலய வீதி களை ஒற்றை எண்ணில் சுற்றி வருதல் போன்ற நடைமு றைகளை ஏற்படுத்தியிருந்தார்கள் போலும்.
நடைப்பயிற்சியின் மூலம் இதய நோய்கள், மூட்டு நோய்கள் முதுகு நோவுகள் போன்ற தொற்றா நோய்கள் குறைவடைகின்றன என அறிந்தோம். இதன் காரணமாக அ சுக்கு வருடாந்த தேசிய சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுகின்ற கோடிக்கணக்கான பணம் மீதப்படுத்தப்படும். ஆரோக்கிய மனித வளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் லண்டன் போன்ற வளர்ச்சியுற்ற நாடுகளில் நகரங்களை திட்டமிடும்போது வாகனப் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி மக்கள் நடப்பதற்கும் துவிச்சக்கரவண்டிகளை செலுத்துவதற்குமான பாதைகளை உருவாக்குகின்றார்கள். பூங்காக்களை சுற்றியும் இந்தப் பாதைகளை வடிவ மைப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறான நக ரத்திட்டங்கள் மக்களுக்கு வாழ்வுடன் இயைந்ததான உடற்பயிற்சியை அவர்கள் உணராமலேயே தந்து விடுகின்றது.
ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி
யாழ். மாநகரசபை