நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படடும் பல்வேறு வகையான மருந்துகள் ஒவ்வொன்றும் குருதியில் உள்ள குளுக் கோசின் அளவைக் குறைப்பதற்கும் கட் டுப்படுத்துவதற்கும் வெவ்வேறு தன்மையில் எமது உடலில் செயற்படுகின்றன. உதாரணம் சில மருந்துகள் எமது உட லில் உள்ள கணையத்தில் பீட்டா (டீ) செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பினை அதிகமாக சுரக்கச் செய்து குருதியில் குளுக்கோசின் அளவை குறைக்க முயற் சிக்கின்றன. சில மருந்துகள் உடல் தசைகளில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையை சரி செய்வதன் மூலம் குருதியில் குளுக் கோசின் அளவை கட்டுப்படுத்துகின்றன. இன்னும் சில மருந்துகள் சிறுகுடலில் உணவு செரிமானம் அடைவதை தாமதப்படுத்தி இதன் மூலம் குருதியில் குளுக்கோசின் அளவை சடுதியாக அதிகரிக்காமல் குருதியில் கட்டுப்பாடாக வைத்திருக்க முயல்கின்றன. வேறு சில மருந்துகள் எமது ஈரலில் இருந்து குளுக்கோசு வெளியாகி குருதியில் கலப்பதை தாமதப்படுத்து கின்றன.
மருந்துகளின் செயற்பாடுகள்
எனவே உங்களுக்கு வைத்தியரால் பரிந்துரை செய்யப்படும் மருத்தைப்பொறுத்து அது எப்போது சாப்பிட வேண்டும் என்பதை வைத்தியர், தாதியர், மருந்தாளர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள். உதாரணமாக எமது உடலில் சதையியை தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கின்ற மருந்துகளான சல்பனைல் யூரியா வகையை சேர்ந்த மருந்துகள் கிளக்கி ளாசைட், கிளைபென்கிளமைட், கிளம்பி றைட், கிளிப்சைட், ரொல்பியூட்டமைப் போன்றவை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு உள்ளெடுக்கப் பட்டால் அவை எமது குடல் பகுதியால் உள்உறிஞ்சப்பட்டு குருதியில் கலந்து பின்பு சதையியை அடைந்து பின்பு இன் சுலினை சுரக்கச் செய்து சுரக்கப்பட்ட இன்சுலினும் நாம் உண்ட உணவில் உள்ள குளுக்கோசு குருதியில் கலப்பதற்கும் அதிக இடைவெளி இல்லாமல் ஒரே சமயத்தில் நடைபெற வாய்ப்பு உண்டு. இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்.
மருந்துகளின் வகைகள்
எனினும் சில வகையான மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு நிலையை சரிசெய்யும் மருந்துகள் பைகுவனைட்ஸ் வகை மருந்துகள் மெற்போமின், பயோகிளிப்ட சோன் போன்ற மருந் துகள் குருதியில் உள்ள குளுக்கோசை கூடிய திறன் உடன் கலங்களுக்குள் உட் செலுத்துவதன் மூலம் நாம் உண்ட உணவில் இருந்து குளுக் கோஸ் வேகமாக உள் உறிஞ்சப்படுவதை தாமதப்பத்துவதன் மூலமும் அத்துடன் மாப்பொருள் அல்லாத உணவு பொருள்களில் (புரதம், லக் றேற்) இருந்து குளுக்கோஸ் தயாரிக்கப் படுவதை தடுப்பதன் மூலமும் குருதி யில் குளுக்கோசின் அளவைக் கட்டுப் படுத்துகின்றன. இவ்வகையான மருந்துகளை உணவு உண்ட பின்பு எடுப்பது நல்லது எனினும் மேற்படி மருந்துகளை பற்களால் கடிப்பதையோ, வாயினால் உமிழ்வதையோ தவிர்த்து உணவு உண்ட பின்பு ஒரு கிளாஸ் தண்ணீரில் விழுங்குவது சிறப்பானது. மெற்போமின் மருந்துகள் கணையத் தினால் சுரக்கப்படும் இன்சுலினின் ஆற்றலை அதிகரிப்பதுடன் இவ்வகை மருந்துகள் உடல் எடை அதிகம் உடை யவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.
மது அருந்துபவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது. மற்றும் கல்லீரல் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் வழங் கப்படுவதில்லை .
மருத்துவ ஆலோசனை மிகமிக அவசியமானது
நீரிழிவுக்காக உங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை ஒரு வைத்தியர் மூலம் அல்லது வைத்திய நிபுணர் மூலம் உறுதிப்படுத்தி பரிந்துரை செய்த மருந்துகளையே உள்ளெடுக்க வேண்டும்.
ஒரே அளவு மருந்து பலருக்கு பல வித்தியாசமான விளைவுகளை கொடுக்கக் கூடியது. மருந்து உட்கொண்ட பின்பு உங்கள் உடலிலோ அல்லது நடத்தையிலோ ஏதவாது மாற்றம் ஏற்பட்டால் உட னடியாக மருத்துவரை நாடவும்.
மருத்துவர் உங்களுக்கு மருந்து பரிந்துரை செய்யும்போது உங்கள் வாழ்க்கை முறை உங்களது தற்போதைய உடல் நிலை மற்றும் உங்கள் தனிப்பட்டதேவைகள் உதாரணமாக கர்ப்பமாக இருத்தல் கர்ப்பம் கரிப்பதற்கு தயார் நிலையிலி ருத்தல் மற்றும் இருதய, சிறுநீரககல்லீரல் சம்பந்தமான நோய் நிலைகள் தனிமையில் வசித்து வருதல் மது அருந்தும் பழக் கம் இருப்பின் கூறுவதன் மூலம் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற மருந்தினைச் பரிந்து செய்வதற்கு உதவ லாம்.
உங்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளைத் தனித்தனி சிறிய காற்றுப்புகாத உலர்ந்த போத்தல்களில் போட்டு அவற்றின் பெயர், அளவு (மில்லிகிராம்) போடும் நேரங்கள் திகதி போன்றவற்றைப் போடுவதன் மூலம் பாவனைக்கு உதவியாக வும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
நீரிழிவுக்காக மருந்து போடும் நீங்கள் ஓர் ஆரோக்கியமான உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்பாரத வகையில் வரும் சிக்கல்களை குறைப்பதற்கான திட்டங்களையும் தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக குறைந்த குளுக்கோஸ்நிலை, கிளிபெனகிளைமைட் போன்ற மருந்துகள் நீண்ட நேரத்துக்கு குருதியில் செயற்படும் திறன் உடையதால் குருதியில் குளுக்கோசின் அளவை குறைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மருந்துகளை உள்ளெடுக்கும் முதியோர்கள் உணவு உள்ளெடுப்பதில் ஒழுங்கற்றவர்கள் மற்றும் மது அருந்துபவர்களை கண்காணிப்பது அவசியம்.
கிளைற்றசோன் வகை மருந்துகள் றொசி கிளைற்றசோன், பொய்க்கிளைற்றசோன் மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்து இன்சுலின் ஏற்காமையை குறைக்கிறது. இவ்வகை மருந்துகளை உணவு உண்டபின்பு எடுப்பது நல்லது.
அகர்போஸ் போன்ற மருந்துகள் நாம் உண்ணும் உணவில் மாப்பொருள் உணவினை முழுமையாக செரிமானம் அடைவதை தாமதப்படுத்துவதால் குருதியில் குளுக்கோசின் அளவைக் கட்டுப்ப டுத்துகின்றது. இவ்வகையான மருந்துகள் உணவுக்கு முன்பு எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் நீண்ட நேரத்துக்கு தொழிற்படும் மருந்து கள் S.R, M.R.X.R எனக் குறிப்பிட்ட மருந்துகளாயின் அவற்றை துகளாக்கவோ பற்களால் கடிக்கவோ உமியவோ கூடாது. இவற்றை ஒரு கிளாஸ் நீரில் உள்ளெடுப் பது நல்லது.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்