யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் பெருகிவரக் காரணம் என்ன?
யாழ் நகரில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகவும், சமூகப்பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பல் வேறுபட்ட உடல், உள சமூகப் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவது
- சிறுவர், பெரியோருக்கு இது சம்பந்தமான போதிய அறிவூட்டல் இல்லாமை.
- பொருளாதார நெருக்கடியால் தாய், தந்தை, உழைக்கச் செல்கின்றமையால் தம் பிள்ளைகள் மீதான கவனமின்மை.
- பெருகி வரும் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள்.
- பொருளாதார நெருக்கடிகள்.
- கட்டுப் பாடற்ற தொலைபேசி பாவனை
- இப் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள்.
- சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருவதால் , முன்பு அலட்சியப் படுத்தப்பட்டிருந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றமை.
- பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமான இரகசியத் தன்மை பேணுவதில் உள்ள நடைமுறைச் சிக்கலால் பலர் தமது பாதிப்புகளை மூடி மறைக்க முற்படுகின்ற நிலை.
எனவே இந்தப் பாரிய பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.
Posted in செய்திகள்