Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உயிர்குடிக்கும் உண்ணிக்காய்ச்சல் Scrub Typhus

இன்று காய்ச்சல் என்றவுடன் எல்லோரும் பயப்படுவது டெங்குக் காய்ச்சலுக்குத்தான். ஆனால் டெங்கைப்போல ஆபத்தான காய்ச்சல் ஒன்று இருப்பதைப்பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் உண்ணிக்காய்ச்சல். இது யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. விரைவில் இனங்காணப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

Life cycle

உண்ணிக்காய்ச்சலை ஆங்கிலத்தில் “ஸ்கிரப் டைபஸ்” (Scrub Typhus) என அழைப்பார்கள். இது Orientia tsutsugamushi என்னும் சிறிய Richetsia ஆல் ஏற்படுகின்றது. ( பக்டீரியா போன்ற நுண்ணுயிர்) இந்தக்கிருமிகள் Trambiculid mits எனப்படும் தெள்ளின் குடம்பிப்பருவத்தினால் பரப்ப்படுகின்றன. இந்தக் குடம்பிகள் “சிகர்” (Chigger) என அழைக்கப்படுகின்றன. இக்குடம்பிகள் மிகச் சிறியவை (0.2mm) வெற்றுக்கண்களால் பார்க்கும்போது ஒரு சிகப்புப்புள்ளியாகத் தென்படும்.

Scrub vegetations

Trambiculd mits பற்றைகளிலும் புதர்களிலும் வாழ்கின்றது. குடம்பிப்பருவம் மட்டும் விலங்குகளின் உடலி ஏறி ( குறிப்பாக எலிகள், முயல்கள்) தோலிலுள்ள திரவத்தை உறிஞ்சுகின்றன. இலைபற்றைகளின் இலைகளின் விளிம்பில் இருந்து விலங்குகளின் உடலில் ஏறுகின்றன. மனிதன் பற்றைக்காடுகளில் நடமாடும்போது மனிதனின் உடலில் ஏறி ஊர்ந்து சென்று மறைவான இடங்களில் கடிக்கின்றன. கடித்து 6 – 18 நாட்களில் காய்ச்சல் ஏற்படுகின்றது.

escar

இனி உண்ணிக்காய்ச்சலின் அறிகுறிகளைப்பார்ப்போம்.

பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். தலையிடி, உடல்நோ, கண்கள் சிகப்படைதல் என்பவையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் சாதாரண வைரஸ்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், வெப்டோஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்களிலும் ஏற்படும் என்பதால் வேறுபடுத்தி அறிவது கடினம். ஆனால் உண்ணிக்காய்ச்சலைக் கண்டுபிடிக்க ஒரு வழியுண்டு அதுதான் Eschar எனப்படும் கறுப்பு நிற அயறு ஆகும். இது குடம்பி கடித்த இடத்தில் ஏற்படும். இது சிகரட் சுட்ட புண்ணைப்போன்ற அமைப்புடையது. இது கமக்கட்டு அரை போன்ற மறைவான ஈரளிப்பான இடங்களில் காணப்படும். இது நோவையோ சொறிச்சலையோ ஏற்படுத்துவதில்லை. எனவே நோயாளி இது பற்றிப்பெரிது படுத்துவதோ அவதானிப்பதோ இல்லை. தற்செயலாக நீங்கள் இதை அவதானித்தால் வைத்தியரிடம் தெரியப்படுத்துங்கள். ஆனால் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதமானவர்களுக்கே இந்த அயறு ஏற்படுகின்றது.

உண்ணிக்காய்ச்சலை கண்டுபிடிக்காமல் உரிய சிகிச்சையளிக்காமல் விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம், மூளை அழற்சி, நிமோனியா, இருதையப்பாதிப்பு, மற்றும் குருதியமுக்கம் குறைவடைதல் போன்ற பலபிரச்சினைகள் ஏற்பட்டு இறுதியில் இறப்பு ஏற்படலாம்.

உண்ணிக்காய்ச்சலுக்கு நல்ல சிகிச்சை முறைகள் உள்ளதால் தகுதியான வைத்தியரிடமோ அல்லது வைத்திய சாலையியோ காலம் தாழ்த்தாது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இனி உண்ணிக்காய்ச்சல் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

குடம்பிகள் பற்றைகளில் காணப்படுவதால் வீட்டைச் சுற்றியுள்ள பற்றைகளையும், புதர்களையும் அழித்து விடுங்கள். பீடை நாசினிகளை விசுறுவதன் மூலமும் குடம்பிகள் பரவுவதைத்தடுக்கலாம். பற்றைகளிலும் புதர்களிலும் நடமாடுவதை இயன்றளவில் தவிருங்கள் அவ்வாறு நடமாடவேண்டிய தேவையிருந்தால் சப்பாத்து, காலுறை, முழுநீளக்காற்சட்டை அணிந்து செல்லுங்கள். உங்கள் செல்லப்பிராணிகள், வளர்ப்பு மிருகங்களுக்கு தெள்ளு, உண்ணி என்பவை தொற்றாது பாதுகாத்துக்கொள்ளுங்கள். புற்தரையில் அமர்வதையும், குந்தியிருந்து மலசலம் கழிப்பதையும் தவிருங்கள். சித்திரனெல்லாப்புல்லெண்ணெய் போன்ற பூச்சிகளை விரட்டும் எண்ணெய்களை உடலில் பூசுவதன் மூலமும் ஒரளவு எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உண்ணிக்காய்ச்சல் அபாயகரமான மற்றும் பொதுவான நோயாகக்காணப்பட்டபோதிலும் இதைப்பற்றி விளிப்புணர்வு மக்களிடையே போதாமல் உள்ளது. எனவே உரிய தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுவதன் மூலமும் இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

Dr.S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை

Posted in கட்டுரைகள்
« சுகத்தையும் சுவாசக்காற்றையும் அள்ளித்தரும் அட்சயபாத்திரங்கள்
புகை நாற்றத்தை என் வாயிலிருந்து குறைத்தால்…. »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com