Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சுகத்தையும் சுவாசக்காற்றையும் அள்ளித்தரும் அட்சயபாத்திரங்கள்

நோயுற்று மூச்சுத்திணறி உயிருக்காய் போராடும் மனிதர்களை மீட்டெடுக்க ஈரலிப்பு கலந்த ஒட்சிசன் வாயு தேவைப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒட்சிசன் இன்றி உயிரினங்கள் உயிர்வாழ முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறோம். அசுத்தக் காற்றாலும் அசுத்த நீராலும் நோயுற்று விழும் மக்கள் தொகை பற்றியும் அறிந்து வைத்திருக்கின்றோம். தூய காற்றுக்காகவும் நீருக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றோம். சுற்றாடல் வெப்பமாகி எமது சொந்தப்பூமி வரண்டுபோய் மண்ணும் மனிதமனங்களும் மரத்துப்போன நிலையில் ஒரு குளிர்ச்சியான நிழல் தேடி அலைந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்தையுமே அள்ளி வழங்க ஆயத்தமாக இருக்கும் அட்சயபாத்திரங்கள் பற்றி நாம் அக்கறைப்பட்டுக்கொள்வதில்லை. அதற்கும் ஒருபடி மேலே சென்று அவற்றை அழித்துவிடவும் ஆயுதம் தூகக்கி நிற்கின்றோம்.

எம்மை சுற்றி பச்சைப்பசேல் என்று வளரும் தாவரங்கள் அனைத்தும் அட்சயபாத்திரங்கள் என்று கருதுவது மிகைப்படுத்தப்பட்ட சிந்தனை ஆகாது.

பசுமையான மரங்கள் ஒவ்வொன்றும் நித்தமும் பல்லாயிரக்கணக்கான லீட்டர் ஈரலிப்பான ஒட்சிசனை ஒருவாக்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளாக விளங்குகின்றன. அத்துடன் நாம் வெளிவிடும் அசுத்தக்காற்றை உள்ளெடுத்து சுத்திகரிக்கும் வடிகட்டிகளாகவும் தொளிற்படுகின்றன. சுற்றாடலின் வெப்பநிலையைக் குறைத்து சூழல் வெப்பநிலையை மனிதன் சுகமாக வாழக்கூடிய ஒரு வெப்பநிலையில் சீர் செய்து வைக்கும் ஒரு வெப்பநிலை சீராக்கியாகவும் இந்த மரங்கள் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன. தாவரங்களில் துளிர்த்து வரும் குருத்துக்களும், பசுமையும், குளிர்ச்சியும், நிழலும் அதன் மலர்களும் மனித மனங்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியையும் அள்ளி வழங்குகின்றன. மாதம் மும்மாரி பொளியாவிட்டாலும் போதுமான அளவு மழைவீழ்ச்சி கிடைப்பதற்கும் எமது தண்ணீர்த்தேவையை நிவர்த்திப்பதற்கும் மரங்கள் இன்றியமையாதவை என்பதும் மரம் இன்றி மழை இல்லை என்பதும் எமக்குத் தெரியும். எமக்கு உணவுப்பொருட்களையும் வருவாயையும் தரும் தாவரங்கள்தான் பயனுள்ள தாவரங்கள் என்று எண்ணிக்கொள்கிறோம். அனைத்து தாவரங்களுமே பயனுள்ள அட்சய பாத்திரங்கள் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்தப் பாத்திரங்களையும் அதன் பயன்களையும் பாதுகாக்க என்ன செய்யப்போகிறோம்.

மரங்கள் பல அனாவசியமாக வெட்டி எறியப்படுகின்றன. மரங்களால் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கிய காற்றுகளுக்கு வீடு தோறும் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது. யன்னல்கள் அனைத்தையும் அடித்து மூடி உள்ளே மின்விசிறிகள் போட்டு நாம் சுவாசித்து வெளிவிட்ட அசுத்தக்காற்றையே மீண்டும் மீண்டும் சுழலவிட்டு சுவாசித்து பல நோய்களுக்கு ஆட்பட்டுகிகொண்டிருக்கின்றோம். அத்துடன் இவ்வாறான அசுத்தக்காற்றை சுவாசிப்பது மன அமைதிக்குறைவு, நித்திரைக்குறைவு, கற்றல் செயற்பாடுகளில் தாக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

நாம் வெட்டி வீழ்த்திய ஒவ்வொரு மரங்களுக்காகவும் வேதனைப்படுவோம். அதற்கு பிராயச்சித்தமாக வீழ்த்திய ஒவ்வொரு மரங்களுக்கு பதிலாகவும் 9 மரங்கள் நட்டுவளர்ப்போம். மரம் ஒன்றை நாட்டிவளர்ப்பது ஒரு உன்னதமான புண்ணியகாரியம் மட்டுமல்ல மனித குலத்திற்கும் மருத்துவ உலகிற்கும் செய்யும் ஒரு மகத்தான சேவை என்பதை மனதில் நிறுத்துவோம். தாவரங்களிலும் அன்பு செலுத்துவோம். நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்நாளில் எத்தனை மரங்கள் நட்டு வளர்த்தோம் என்பதை கணக்கிட்டு வைத்துக்கொள்வோம். அதைச்சொல்லிக்கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்வோம்.

மனிதனுக்கு உணவு, உடை உறைவிடம், மருந்து, சுவாசக்காற்று, நிழல், குளிர்ச்சி, மனஅமைதி, மழை, நீர், எரிபொருள், மகிழ்ச்சி என அனைத்தையுமே தொடர்ந்து அள்ளிவழங்கிக் கொண்டிருக்கும் அட்சயபாத்திரங்களான தாவரங்களையும் மரங்களையும் நட்டு வளர்ப்பதில் பெருமிதம் கொள்வோம். வீட்டுச் சுற்றாடலையும் பொது இடங்களையும் தாவரங்களால் பசுமைப்படுத்துவோம்.

சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.

Posted in சிந்தனைக்கு
« உடற்பயிற்சியின் மகத்துவம்
உயிர்குடிக்கும் உண்ணிக்காய்ச்சல் Scrub Typhus »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com