சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறு தயாரித்து விற்கும் முறையில் மறுசீர் செய்யுமாறும் எம்.எஸ்.எஃப் எனும் எல்லைகளற்ற மருந்துவர்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுவர்களுக்கான மருந்துகளின் விலை 2001ம் ஆண்டு இருந்ததை விட 68 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்று விடுத்துள்ளது. வளரும் நாடுகளில் நிமோனியா தடுப்பு மருந்துகளுக்கு வளர்ச்சியடைந்த நாடான பிரான்ஸை விட ஏனைய நாடுகள் அதிகமான விலையை கொடுக்க நேரிடுவதாக கூறப்படுகின்றது.
இந்த அமைப்பின் அறிக்கை பெருமளவு சரியானதே என்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் பி குகானந்தம்.
பல்வேறு தடுப்பு மருந்துகளின் தயாரிப்புச்செலவுகளையும் அதற்கான லாபத்தையும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே சம்பாதித்துவிட்ட பிறகு வளரும் நாடுகளிடமும் அவர்கள் அதிக விலைக்கு விற்பதில் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.