Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



குளுக்கோமா (Glaucoma)

குளுக்கோமா எனப்படுவது கண்ணில் உள்ள பார்வை நரம்பு பாதிக்கப்படும் ஒரு நிலையாகும். கண்ணினுள் உள்ள அழுத்தம் (Eye pressure) அதிகரிப்பது இந்நரம்பு பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.

பிரதானமாக இரண்டுவகையான குளுக்கோமா உள்ளது

  1. சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Closed angle glaucoma)
  2. படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Open angle glaucoma)

சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கூடுதலாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது. இது ஒரு அவசர சிகிச்சை பெறவேண்டிய நிலையாகும். இந்நிலையானது ஏற்படும் பட்சத்தில் ஒருவர் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். தவறும் பட்சத்தில் நிரந்தரமான பார்வை இழப்பு ஏற்பட நேரிடும்.

இதன் அறிகுறிகளாவன

  • கண்ணில் சடுதியாக நோவு ஏற்படல்.
  • கண் சிவந்து காணப்படல்
  • பார்வை குறைவடைந்து போதல்

எனவே மேற்படி அறிகுறிகள் சடுதியாக ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் அவர் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கண்ணில் நோவு எதனையும் ஏற்படுத்துவதில்லை. படிப்படியாக கண் பார்வை குறைவடைந்து செல்லும் ( சுற்றையல் பார்வை குறைவடைந்து செல்லும்).

எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் சலரோக நோயுடையவர்களும் பரம்பரையில் குளுக்கோமா உடையவர்களும் தவறாது வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும். கண்ணில் அழுத்தம் உள்ளவர்கள் வைத்தயரின் ஆலோசனைப்படி கண் மருந்துகளை தொடர்ந்து பாவிப்பதன் மூலம் கண்களில் மேலும் அழுத்தம் அதிகரிப்பதைத் தடுத்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

Dr.இ.பரமேஸ்வரன்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ். போதனா வைத்தியசாலை.

Posted in செய்திகள்
« வைத்தியசாலையில் மருந்து எடுக்கும் நோயாளர்கள் கவனத்திற்கு
மனித வாழ்வும் அயடீனும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com