Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



மார்பக புற்றுநோய் வருமுன் கண்டறிய உரிய இரத்தப்பரிசோதனை

உலகெங்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதனைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதமே. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு புதிய எளிய இரத்தப்பரிசோதனை மூலம் மார்பகப்புற்று நோய் ஏற்படும் ஆபத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் 1380 பெண்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காலப்போக்கில் இவர்களில் 640 பேருக்கு மார்பக புற்றுநோய் உருவானது.

இந்த 640 பேரின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இருக்கும் ஏடிஎம் எனப்படும் குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாறுதல் இந்த பெண்களின் மார்பக புற்றுநோயை தூண்டியதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக, இந்த குறிப்பிட்ட மரபணு ஏன் மாற்றமடைகிறது என்பதை இவர்கள் ஆராய்ந்தபோது, இந்த மரபணுவின் மேற்புறத்தில் இருக்கும் மிதைலேடன் எனப்படும் குறிப்பிட்ட ரசாயனப்பொருளில் ஏற்படும் மாற்றமே, மரபணுவின் மாற்றத்தை தூண்டுவதை இவர்கள் கண்டுபிடித்தனர்.

எனவே, ஒரு பெண்ணின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இந்த குறிப்பிட்ட மிதைலேடன் என்கிற ரசாயனம் அதிகரித்து காணப்பட்டால் அந்த பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியம் இரண்டுமடங்கு அதிகம் இருப்பதாக இவர்கள் கணித்திருக்கிறார்கள். இவர்களின் இந்த கணிப்பை, மார்பக புற்றுநோய் உருவான 640 பெண்களின் இரத்த மாதிரிகளில் காணப்பட்ட அதிகரித்த மிதைலேடன் உறுதி செய்ததாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இனிமேல் பெண்கள் எளிய இரத்த பரிசோதனை மூலம் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடுமா என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்பது மருத்துவ உலகின் நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி கண்டுபிடிப்பதன் மூலம் அந்த பெண்கள் மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்து அந்த நோயை ஒன்று தடுக்கலாம் அல்லது மார்பக புற்றுநோய் உருவாவதை மேலும் தள்ளிப்போடலாம் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவுகள், மார்பக புற்றுநோய் தடுப்பில் மட்டுமல்ல மரபணு மூலக்கூறுகள் எப்படி செயற்படுகின்றன என்கிற துறையிலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது மரபணுக்காரணிகள் எப்படி மாற்றமடைகின்றன என்பதற்கான புதிய புரிதலையும் இந்த ஆய்வு வழங்கியிருப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Posted in செய்திகள்
« கர்ப்பகால கவனிப்பு
உயர வளர்ச்சிக் குறைபாடு – ஆலோசனைகளும் தீர்வுகளும் »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com