ஒவ்வொரு குடும்பத்தில் ஏற்படும் இழப்புகள் வலிகள் என்பவற்றை மற்றவதுகளால் ஒருபோதும் ஈடுசெய்துவிட முடியாது. இழப்புக்கள் வலிகள் சமூக மட்டத்தில் பல காரணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றில் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்படும் இழப்புகள் பிரதானமாகவே போக்குவரத்து விபத்துக்களாகவே காணப்படுகின்றன. இவ் விபத்துக்களிலும் பிரதானமாக தலையில் ஏற்படும் காயங்களே உயிரிழப்புக்கும் காரணமாகவும் அமைந்து விடுகின்றன.
தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளாவன
- மூளைப்பகுதியினுள் ஏற்படும் இரத்தக் கசிவுகள்
- மூளையினுள் இரத்தப் பெருக்கு அல்லது கசிவு காரணமாக மனிதனின் அத்தியாவசிய, உயிர் வாழத் தேவையான சுவாசத்தொகுதி, குருதிச் சுற்றோட்டத் தொகுதி போன்ற அங்கங்களின் செயற்பாடுகள் அனைத்திலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
- அவய செயற்பாடு பாதிக்கப்படுவதால் வாழ்நாள் முழுவதும் படுக்கையில் காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை.
- மரணம் ஏற்படும்.
தலையில் காயம் ஏற்படுவதற்கான மனிதர்களின் செயற்பாடுகள் எவை என நோக்கினால் தலையில் பலமான ஆயுதங்களால் தாக்குதல், உயரமான இடத்தில் இருந்து தவறி விழுதல், போக்குவரத்து விபத்துக்கள், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது விபத்தினால் தலையில் காயம் ஏற்படுதல், பாதுகாப்பு இல்லாத இடங்களில் சிறுவர்களை விளையாட அனுமதிப்பது, பாதுகாப்பு இல்லாத நிலையில் பிள்ளைகளை ஊஞ்சல் கட்டி ஆட விடுவது, ஏணைகளில் பிள்ளைகளை ஆட்டும்போது சுவரில் பிள்ளையின் தலை பலமாக அடிபடுவது, வீட்டுக் கூரையில் இருந்து விளையாட அனுமதிப்பதும், பட்டம் விடுவது இதன் போது தவறிவிழுவது, பெரியவர்கள் உயரமான இடங்களிலிருந்து மது அருந்துவது போதையில் மேலிருந்து விழுந்து விடுவது, இளைஞர்கள் மதுபோதையில் குத்துக்கரணம் அடிப்பதால் ( நீச்சல் தடாகங்களில்) காயங்களுடன் கழுத்து எலும்பு முறிவும் ஏற்படுகிறது. வேகமாக ஒட்டோ சவாரி செய்வது மோட்டார் சைக்கிளில் பலர் ஒன்றாக சவாரி செய்வதும், பாதுகாப்பு அற்ற போக்குவரத்துப் பாதைகளும், வாகன விபத்துக்களும் அண்மைக் காலமாக போதனா வைத்தியசாலையில் தலையில் காயம் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட பலரது நடத்தையின் விளைவுகளின் சில உதாரணங்கள். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
மேற்படி சம்பவங்கள் பொதுமக்கள், பெற்றோர், இளைஞர்கள், நண்பர்கள், சம்பந்தப்படும் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ள கவனக் குறைவுடன் மட்டும் இல்லாது விபத்துகள் பற்றிய வழிப்புணர்வுகள் இல்லாததன் காரணமும் கூட.
ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்படவேண்டியது சமூகத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அவை ஏற்படும் காரண காரியங்கள் மக்களது அறிவு மட்டத்துக்கு எற்ப விழிப்புணர்வை எற்படுத்த சமூக அமைப்புகள் பாடசாலைகள் ஊடான அமைப்புன் யாவும் முன்வர வேண்டும்.
அதி தீவிர பிரிவில் ஒரு நாள் ஒருவரைப் பராமரிக்க பல லட்சம் ரூபா வரை செலவு ஏற்படுகின்றது. இது மக்களது வரிப்பணம். இதனைத் தவிர்ப்பதன் மூலமாக மற்றைய நோயாளர்களது தேவைகள் நிறைவு செய்யப்பட முடியும். ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்க மக்களே மக்களுக்கு உதவி செய்யலாம்.
சி.விக்னேஸ்வரன்
பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்
அதி தீவிர சிகிச்சைப் பிரிவு
யாழ் போதனா வைத்தியசாலை