Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சூழலைச்சூழும் நெகிழித் திரவியங்களும் அவற்றின் தீதும்

இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் இறப்பர் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலேயே நெகிழித் திரவியக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்டது. இது இன்று மனிதனின் அன்றாடத் தேவைகளில் இன்றியமையாத வளமாக மாறிவிட்டது. ஆனால் இதன் கட்டுப்பாடற்ற பாவனை சூழலை மிகவும் விரைவாகப் பாதித்துவிட்டது. அதில் இருந்து விடுபட ஒரு யுகம் தேவை.

கோடிக் கணக்கான நெகிழிகள் பரந்துள்ளன. இந்தப் புவியில்

நெகிழித்திரவியங்கள் (பிளாஸ்ரிக்) எமது பூகோளத்தில் அபரிமிதமான பாவனையால் உயிர்ச்சாகீயத்தின் சீர்த்திட நிலையினைக் காவு கொள்கின்றன. இன்று பல நூறு ஆயிரம் தொன் கணக்கிலான நெகிழிக் கழிவுகள் சமுத்திரத்தில் விரகிக் காணப்படுகின்றன. மேலும் தரையிலும், குப்பைகுதிகளிலும், குப்பை மேடுகளிலும் நெகிழி கழிவாக மிகைப்பட்டு உள்ளது. நெகிழித்திரவியங்கள் முழுமையாகச் சிதைவடையச் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை செல்லலாம். நெகிழி நுண்மங்கள் நனோமீற்றர் பருமனில் இருக்கும். ஒரு தடவை சலவை இயந்திரத்தினை பயன் படுத்தும்போது நைலோன், பொலியஸ்டர் போன்ற செயற்கை ஆடைகளில் இருந்து 700, 800 நெகிழி நுண்மங்கள் கழிவு நீரில் சேர்கின்றது. நெகிழி நுண்மங்கள் உணவுச் சங்கிலியூடு கடத்தப்பட்டு முழுச் சாகியத்தினையும் பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றன. நிலக்கீழ் நீரினை நெகிழி நுண் மங்கள் மாசடையச் செய்யும். நெகிழி சிதைவடையும்போது உருவாகும் இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை. பொதுவாக விவசாயத்துக்கு, கழிவு வாய்க் கால்களில் படியும் சேதனங்களைப் பயன் படுத்தும்போது அதிக அளவு நெகிழி நுண் மங்கள்மாசாக நிலங்களை அடையும்.

மனித ஆரோக்கியத்துக்கு நெகிழி தரும் கேடுகள்

நெகிழி நுண்மங்கள் உணவுச் சங்கிலி யோடு மனிதனையும் தாக்குகின்றன. தாவர உணவு, கடல் உணவு, மாமிச உணவு அனைத்திலும் நெகிழி நுண்மங் கள் செறிவடைந்து உள்ளன. நெகிழிநுண் மங்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் இரசாயனத் தன்மையில் தங்கியிருக்கும். மனிதனில் நெகிழி நுண்மங்கள் உடற்றொழில் ரீதியிலும், நோய்க்கூற்றுரீதியிலும் பல பாதகமான தாக்கங்களைப் புரிகின்றன. இவைகானில் சுரப்பிகளுக்கு மாற்றாகச் செயற்படுகின்றன. உடலில் ஒவ்வாமை சார்ந்த நோய் நிலை மையை ஏற்படுத்து கின்றன. பல வகை யான புற்றுநோய்கள் ளுக்கு ஏதுவாக அமை கின்றன. மூளை மென்சவ்வின் ஊடே கடத்தப்பட்டு, நரம்பக் கலங்களின் செயற் பாட்டைப் பாதிக்கின்றன. இதனால் மனித நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பதகளிப்பு, மனச்சோர்வுக்கு காரணமாக அமைகின்றன.

நெகிழிநுண்மங்கள் மனித ஆரோக்கியத்துக்கு ஏற்படுத்தும் கேடுகள், நெகிழித்திரவியப் பாவனையை வரையறுக்கவும், கட்டுப்படுத்தவும் மிகவும் அவசரமாகவும், ஆக்கபூர்வமாகவும் எடுக்கவேண்டிய நட வடிக்கையாக மாறியுள்ளது.

நெகிழித்திரவி யங்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை அதன்பருமனைக்கருத்திற்கொண்டு மூன்று நிலைகளில் ஆராயலாம். அவையாவன:

  1. நெகிழி நுண்துணிக்கைப் பாதிப்பு
  2. நெகிழி நுகர்பொருள் கழிவுப் பாதிப்பு
  3. நெகிழிக் கழிவுகூளப் பாதிப்பு

நெகிழி நுண்துணிக்கைப் பாதிப்புக்கள் உணவுச் சங்கிலியோடும், நீரினூடும் ஏற் படும். நெகிழி நுண்பொருள் கழிவுகளாக நெகிழிப் பைகள், நெகிழிக் குடுவைகள் மற்றும் இதர நுகர்வுப் பொருள்களும் அமைகின்றன. இவை திண்மைக்கழிவு முகாமைத்துவத்தில் இடரையும், பொருள் செலவையும், நேரவிரயத்தையும் ஏற்படுத் துகின்றன. பலநோய்க் கிருமிகள் பரவுவ தற்கு உகந்த சூழலைச் சூழலில் ஏற்படுத்து கின்றன. மேலும் நுளம்புகளின் பெருக்கத்துக்கும் இடம் அமைத்துக் கொடுக்கின்றது. நெகிழிக் கழிவுகூளங்களின் பாதிப்பு, தரையில் பள்ளமான இடங்களை நிரவ இடப்படும் கழிவுகளில் நெகிழிக் கழிவுகூ ளங்கள் உருவாகின்றன. இவை நிலக்கீழ் நீரை மாசுபடுத்துகின்றன. சமுத்திரத்தின் அடியில் நெகிழிக் கழிவுகூளங்கள் பல உருவாகி வருகின்றன. இவை சமுத்திரத் தில் தொடர்ச்சியாக நச்சுப் பதார்த்தங்களைக் காழுகின்றன.

எண்ணற்ற உயிர்களின் இறப்புக்குக் காரணம்

நெகிழி நுண்துணிக்கைகள் சமுத்திரங்களின் அடியிலும், மலை உச்சியிலும்கூட அவதானிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், காட்டுவிலங்குகள் என்பன நெகிழிநுகர்பொருள்கழிவுகளை நேரடியாக உணவுடன் சேர்த்து உண்பதால் இரைப்பையில் அவை திரண்டு இறக்கின்றன.

நெகிழித் திரவியப் பயன்பாட்டைக் குறைப் பதற்கும் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நெகிழிக் கடதாசிகளை உ வுப் பொதியிடலுக்குப் பாவித்தலைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பைகளின் (பொலித்தீன் பைகள்), பாவனையைக் குறைக்கவேண்டும். நெகிழிக்குடுவைகள் (பிளாஸ்ரிக் போத்தல்) பாவனையைக் குறைக்க வேண்டும். பொது நிகழ்வுகளிலும், பொது இடங்களிலும் இவற்றைத் தவிர்ப்பதால் அல்லது தடைசெய்வதால் எமது சூழலுக்கு நன்மை செய்பவர்களா வோம். உதாரணமாகத் திருமண நிகழ்வில் பிளாஸ்ரிக் போத்தலில் நீர் கொடுப்பதற்குப் பதிலாகச் செம்பு நீரினைப் பயன்ப டுத்தலாம். நெகிழி கடதாசியில் உணவு பரிமாறாது வாழை இலையில் உணவு பரிமாறலாம். இவ்வாறே மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் ஆண்டு தோறும் கடலில் சேரும் நெகிழித் திரவியத் தில் 40 வீதம் ஒரு தடவை தேவைக்காக பயன்படுத்தப்பட்டவை. அடுத்து தவிர்க்க முடியாத தேவைகளுக்கு உபயோகமாகும் நெகிழித் திரவியத்தை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீளமீள பயன்படுத்தலாம்.

நெகிழியில் இருந்து தப்பிக்க முடியுமா?

அண்மைய சிலகண்டுபிடிப்புகள் நெகிழித் திரவியம் இயற்கையில் மாசுபடுத்துவதில் இருந்து தடுக்க மேற்கொள்ள முனையும் திட்டங்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன. 2016ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகளால் நெகிழிக் கழிவுக் கூளங்களில் “ஐடோனெல்லா சாகை என் சிஸ்’ என்ற பக்றீரியாக்கள், நெகிழித் திரவியத்தைப் பிரிகையாக்கக்கூடிய பெட்டேஸ் என்ற நொதியத்தை உருவாக்குகின்றமை கண்டறியப்பட்டது. நெகிழித்திரவியக்கழி வுகளுக்கு தீர்வைத் தருவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு ஆறுதலளித்துள்ளது.

நெகிழிக் கழிவுக்கூளங்களில் நெகிழித்திரவியத்தைப் பிரிகையடையக்கூடியதான நொதியத்தை உருவாக்கும் பக்றீரியாக்க ளின் உருவாக்கம் எமக்கு ஓர் அபாயகரமான செய்தியைக் கூறுகின்றது. அதாவது எமது சூழலில் ஆபத்தான புதிய கிருமிகள் உருவாகும் சாத்தியம் உள்ளது. நெகிழித் திரவியங்களின் பயன்பாடு மருத்துவம், கணினி முதல் பல தொழில்நுட்பங்களில் உதவுவதாக நெகிழிக்கழிவுகூளங்களின் விகாரமடையும் கிருமிகள் நன்மை செய்யும் தொழில்நுட்பங்களைப் பாதிக்கலாம். மிக அண்மையில் ஆஸ்ரேலியாவின் அடி லைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் அவரது குழாமும் காந்த நுண் சுருங்கல் மூலம் நெகிழி நுண்துகள்களை அழிக்கும் தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்தனர். இது நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகமாகும். இங்குநைட்ரஜன் முலாமிட்டகுழாயினுள் மக்கனீஸ் உலோகத்திலான நனோச்சுருள்கள், நெகிழி நுண்துகள்களை ஒட்சிசனு டன் இணைந்து காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் வெளியேற்றுகின்றது. இந்தக் கண்டுபிடிப்பு குடி தண்ணீரில் மாசாக உள்ள நெகிழித்துகள்களை அகற்றுவ தற்கு எதிர்காலத்தில் உறுதுணையாக அமையும்.

நெகிழிக்கழிவுக்கூளமும் யாழ்ப்பாணமும்

யாழ்குடாநாட்டு நெகிழிக்கழிவுகள் கல்லுண்டாய் வெளியில் முகாமைப்படுத்தப் படுகின்றன. நெகிழி நுகர்வுப் பொருள்கள் குறிப்பாக நெகிழிப் பைகள் காற்றினால் பண்ணைக் கடனீரேரியை மாசடையச் செய்கின்றன. அடுத்து கீரிமலைக்கு அரு கில் உள்ள பெரிய கிடங்குகள் நெகிழிக்கழி வுக்கூளங்களால் நிரப்பப்படுகின்றன. இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். ஏனெனில் யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீரினை இந்தச்செயற்பாடு மிகவும் விரை வாக மாசடையச் செய்துவிடும்.

சீனா போன்றவல்லரசுகள் நெகிழிக்கழிவு களைச் செறிவாக்கிக் கடற்படுக்கைகளில் துறை முக நகரங்களை அமைக்கின்றன. இது சிலவேளை சூழலுக்கு ஆபத்தாகலாம். எனவே நெகிழித் திரவியப் பாவனையை மட்டுப்படுத்துவதாலேயே நாம் சூழலுக்கு கொடுக்கும் மேலதிக சுமையை நீக்கலாம். எனவே பொது இடங்களில் நெகிழிக் கடதாசிகள், நெகிழிக் குடுவைகள் என்பவற்றை உபயோகிக்காமலும், வீசாதும் நாம் வாழ்வதால் எமது சூழலை நாம் காப்பாற்றலாம்.

மருத்துவர். சி.யமுனாநந்தா




Posted in கட்டுரைகள்
« நீரிழிவும் சிறுநீரக நோயும்
குறுநடை போடும் குழந்தைகள் ஏன் சரியாகச் சாப்பிடுவதில்லை? »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com