Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயாளர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டுதலும்!
  • நீரிழிவு நோயாளி ஒருவரின் குருதி அழுத்தம் 130/80 mmHG இலும் குறைவாக இருத்தல் நன்று
  • நீரிழிவு நோயாளி ஒருவரில் சராசரி குளுக்கோசின் அளவு நல்ல நிலையில் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நீரிழிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும்.
  • நீரிழிவு நோய் இல்லாத ஒருவரின் குருதியில் குளுக்கோசின் அளவு 70 தொடக்கம் 160MG/DL ஆகக்காணப்படும். அதாவது ஒருநாளில் 3.9 – 8.9 MMOL வரை மாறிமாறி இருக்கும்.
  • நீரிழிவு நோய் இருப்பதை உறுதிப்படுத்திய ஒருவர், அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருந்துகளைச் சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலே அவருடைய குருதியில் ‘HBA1C’ வீதம் 6 தொடக்கம் 8 இற்கு இடையிலும், 6 வீதத்துக்கு அண்மிதமாகவும், 8 வீதத்துக்குக் கூடாமலும் இருக்குமாயின், அவர் நீரிழிவுடன் ஆரோக்கிய நிலையில் இருக்கிறார் எனக் கருதலாம்.
  • குருதியில் குளுக்கோசின் அளவு 180 MG/DL என்ற நிலையில் இருக்கும் போது அதாவது, 1O MMOL’ இற்கு மேல் இருக்கும் சந்தர்ப்பத்திலே எமது சிறுநீரகமானது குளுக்கோசை சிறுநீரின் உதவி கொண்டு வெளியேற்றும் தன்மை உடை யது. இவ்வாறு நீரிழிவு நோயாளிக்கு தொடர்ச்சியாக குளுக்கோசின் அளவு அதிகரித்த நிலையில் இருக்குமானால், உடலில் இருக்கும் நீரின் உதவியுடன் குளுக்கோஸ் சிறுநீராக வெளியேற்றப்பட்டவாறு இருக்கும். இந்த நிலையில் நோயாளி அதிகதாக உணர்வு உடையவராகவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பவராகவும் இருப்பார். தாகம், களைப்பு போன்ற அறிகுறிகளோடு நோயாளி இருப்பின் உரிய சிகிச்சைபெற வேண்டும். இல்லாது போனால் சிறுநீரகம் மூலம் மேலதிகமான குளுக்கோசை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள் கீற்றோன் நிலையை (அமிலத் தேக்கம்) அடைதல்

நீரிழிவு நோயாளி ஒருவருக்கு இன்சுலின் சுரப்பு குறைந்திருக்கும் சந் தர்ப் ப த் தி ல், உடல் இயக்கத்துக்குக் தேவையான சக்தியை கொழுப்பில் இருந்து எடுக்கும் சந்தர்ப்பம் உருவாகும். இதன்போது ‘கீற்றோன்’ உருவாகின்றது. இதனை நோயாளியின் குருதியிலும், சிறுநீரகத்திலும் காணலாம். அத்துடன் நோயாளியின்  சுவாசத்தின் போது ஏற்படும் மணம் மூலமும் (பழ மணம்) உணரமுடி யும்.

கீற்றோன் நிலை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள்

  • நீரிழிவு ‘வகை – 1 உள்ளவர்கள்: செயற்கை இன்சுலினை ஏற்ற மறந்தவர்கள். ‘மாப்பொருள் உணவுகளை அதிகளவு உண்பவர்கள். நீரிழிவுக்குரிய மருந்தை உள்ளெடுக்காதோர்.
  • குருதியில் குளுக்கோசின் நிலை 300 MG/o. (16.7 MML/L) இற்கு மேல் காணப்படுவோர்.
  • வேறு நோய்களால் அதிகம் பாதிப்பு டைந்தோர் மற்றும் கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர்.
  • நீரிழிவு நோயாளி ஒருவருக்கு வழங்கப்ப டும் மருந்தைத் தொடர்ந்து ஒழுங்கு முறையாக உள்ளெடுக்காது அலட்சியமாக இருப்பவராயின், அவரின் குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரித்துச் செல்லும். குருதியில் இன்சுலின் அளவு குறைந்த நிலையில் காணப்படும். எனினும் குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்குள் செலுத்துவதற்கு இன்சுலின் அவசிய மானது. அத்துடன் இன்சுலின் குருதியிலும் உடலிலும் உப்புகளின், மின் இரசாயன உப்புகளின் சமநிலையைப் பேண உதவுகிறது. இப்போது இன்சுலின் குறைபாட்டால் கலங்களுக்குள் செல்ல முடியாத நிலையில் குளுக்கோஸ் குருதியில் அதிகரித்த நிலையில் காணப்படும். அதேசமயம் எமது உடலானது தனக்குத் தேவையான சக்தியை கொழுப்பில் இருந்து பெறும் முயற்சியில் ஈடுபடும். இதன்போது கொழுப்பில் இருந்து “கீற்றோன்’ எனும் பதார்த்தம் வெளியேறிக் குருதியில் கலந்துவிடும். இதுகுருதியைஅமிலக்குருதியாக மாற்ற முற்படும். அத்துடன் கலங்களுக்குள் வேறு இரசாயனப் பதார்த்தங்களும் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இதனால், நீரிழப்பு,குருதியில் அதிக அமிலச் சேர்க்கை , கலங்களில் சோர்வு, தேகச் சோர்வு, மூளைச் சோர்வு, மின்நீர்மப் பொருள்க ளின் சமத்துவமின்மை ‘ போன்ற நிலைக்கு நோயாளி தள்ளப்படுகின்றார். இதற்கு உடனடிச்சிகிச்சைபெறாவிட்டால் நோயாளி ஆபத்தான நிலையை அடைய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
  • குருதியில் உள்ள குளுக்கோஸ் மட்டுமே மனித மூளைக்குச் சக்தியை வழங்குகிறது. எனவே குருதியில் உள்ள குளுக்கோஸ் குறைந்த நிலைக்குச் செல்லுமானால், மூளை சரிவர இயங்கமுடியாத நிலை ஏற்படும். எனினும் மூளை தற்காலிகமாக வேறு விதமான முயற்சிகளை மேற் கொண்டு குளுக்கோசைப் பெற்று இயங்குநிலை பெறும். நோயாளிஉணவு உண்ணாமை, கூடியளவு மருந்து, நோய்நிலைகள், தொற்றுக்கள் போன்ற பல காரணங்களாலும் குருதியில் குளுக்கோசின் அளவு தொடர்ந்து குறைவடையுமானால், மூளை தனது செயற்பாட்டை இழந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இப்படியான சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புடையோர் 

  • நீரிழிவு ‘வகை – 1’ உடையோர். இவர்கள் தங்களுக்கு கணிக்கப்பட்ட இன்சுலின் மருந்தை எடுத்துவிட்டு உணவு உண்ணாமல் அல்லது குறைந்தளவான உணவை உள்ளெ டுப்பதால் இன்சுலினின் ஆதிக்கம் மேலோங்கி குளுக்கோசின் அளவு குருதி யில் குறைவடைந்து காணப்படும்.
  • நீரிழிவு நோயாளிக்கு அதிகரித்த கிருமித்தொற்று உள்ளநிலை.
  • அதிகளவான மருந்தை தவறுதலாக உள்ளெடுத்தல்.
  • அதிகளவான வேலையை தொடர்ச்சியாகச் செய்பவர்கள்.
  • நீரிழிவு நோயாளர்களில் காணப்படும் முக்கியமான குறைபாடு இன்சுலினே. இங்கு ஒருவகையினர் இன்சுலின் அற்று செயற்கை இன்சுலினை பெறுபவர்களாக இருப்பர். மற்றைய வகையினர் இன்சுலின் இருந்தும் சுரக்க முடியாதவர்களாகவும், சுரக்க முடிந்தாலும், இன்சுலின் எதிர்ப்பால் முடக்கப்பட்டவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு இன்சுலின் சுரக்கத் தூண்டும் மருந்துகள், இன்சுலின் எதிர்ப்பை முறியடிக்கும் மருந்துகள் என நோயாளர்களின் நோய்நிலைக்கு ஏற்ப மருத்துவர்களால் மருந்துகள் சிபார்சு செய்யப்படும்.
  • நீரிழிவு நோயாளி ஒருவருக்கு குருதியில் குளுக்கோசின் அளவு மிகக் குறைவாகக் காணப்படும் பட்சத்தில், முதலில் மூளையின் பெருமூளைப்பகுதியில் இருந்து சிறுநீரகத்தின் மேல் உள்ள அதிரீனலின் சுரப்பிக்கு தகவல் அனுப்பப்படும். அவை உடனடியாகச் செயற்படத் தொடங்கும். அதன்போது நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கென அதிர்லின், நோர் அதிரீலின் என இரண்டு வகை ஓமோன்கள் சுரக்கப்படும். இவை குருதியில் கலக்கும்போது, ‘நோயாளிக்கு வியர்க்கும் தன்மை , பயம், பதற்றம், நடுக்கம், பசி, அதிக இதயத் துடிப்பு, சொண்டு வாய்ப்பகுதி காய்தல், சோர்வு, மயக்கம், அலறல், பிதற்றல் போன்ற பல குணம் குறிகளை வெளிக்காட்டும். மேற்படி உணர்வலைகளைக் கண்டால் நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெறுவதன் ஊடே மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பி விடலாம்.
  • நீரிழிவு நோயாளி ஒருவருக்கு அவருக்கு தெரியாமல் குருதியில் குளுக்கோசின் அளவு குறைவடையும் நிலை ஏற்படும்போது உதாரணமாக, உறங்கும் போது இந்த நிலை ஏற்படின் விடியற் காலையில் அவர்களுக்குத் தலையிடி, தலைப்பாரம், சோம்பல் தன்மை ஏற்படுவதுடன் அவர்களின் படுக்கை விரிப்புக்கள், மேலாடைகள் நனைந்த நிலையில் காணப்படும்.

குளுக்கோசின் அளவு குறையும் வாய்ப்புள்ளோர் 

  • நீரிழிவு வகை 1, வகை II நோயாளர்களில் செயற்கை இன்சுலின் எடுப்போர்.
  • நீரிழிவுடன் மருந்தை எடுத்துவிட்டு உணவைப்போதியளவு உள்ளெடுக்காது பாரமான வேலை, கனரக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஓடும் இயந்திரங்களில் தொழில் புரிவோர்.
  • ஒரு நீரிழிவு நோயாளி நித்திரைக்குச் செல்லும் முன்பு அவரின் குருதியில் குளுக்கோசின் அளவு 5.6 MMO/L இற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • செயற்கை இன்சுலினும் அதனுடன் சேர்ந்து நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளையும் உள்ளெடுப்போர். சிலர் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இரண்டு வர்க்க மருந்துகளை எடுப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டவர்கள்.  இவர்கள் தங்களது உணவு விடயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ் போதனா வைத்தியசாலை

Posted in கட்டுரைகள்
« நீரிழிவு நோயும் அவதானமான செயற்பாடுகளும்
நீரிழிவு நோயாளியொருவர் நினைவு இழக்கும் நிலையை அடையும் போது கடைப்பிடிக்க வேண்டியவை »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com