புபகைத்தல் நாகரீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்த நிலமைகள் தற்போது மாற்றம் கண்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கின்ற காலம் துளிர்விட ஆரம்பித் துள்ளது. இதற்குக் காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது புகைப் பிடிப்போரை மட்டுமே பாதிப்பதில்லை, அவரைச்சுற்றியுள்ள அனைவரையும் பாதித்து நோயாளி ஆக்கிவிடும் தன்மையை கொண்டுள்ளது. இத்தகுகாரண காரியம் கொண்டே பொது இடங்களில் புகைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டவிதி நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
புகையிலைச் செடியை பயிரிடாது தவிர்ப்போம்
கஞ்சாச் செடி வளர்ப்பது தண்டனைக் குரிய குற்றம் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொண்டுள்ளோம். ஆனால் பல இலட்சம் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் புகையிலைச்செடியை வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக வெளிப்படுத்தப்படவில்லை. உண்மையில் நாம் பயிரிடுகின்ற ஒவ்வொரு புகையிலைச் செடியும் யாரோ ஒரு முகம் தெரியாது மனிதனை நோயாளியாக்கும் என்பதை உணரமறுக்கிறோம்.
இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அழிவில் இருந்து மீண்டுவர எம்மை நாமாக வழிப்படுத்த முன்வர வேண்டும். புகையிலை பயிரிடும் விளைநிலத்தில் மரக்கறிப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் உணவுத் தேவையில் தன்னிறைவு பெற முயற்சிக்கலாம்.
நோய்
புகைப்பிடிப்பதால் ‘பாரிசவாதம், மாரடைப்பு, புற்றுநோய், சுவாசம் சம்பந்தமான நோய்கள், குருதிக் குழாய் சம்பந்த மான நோய்கள் எனப் பல பாரதூரமான நோய்கள் ஏற்படும். இதனை நாம் அனைவரும் அறிந்துகொண்டுள்ள போதும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை துடைத்தெறியும் மார்க்கம் தெரியாது துன்பப்படுகிறோம்.
பாதிப்பு
ஒரு சிகரெட்டின் புகையைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்கும் போது வேதிப்பொருள்கள் அணிவகுத்து உடலின் முக்கிய உறுப்புகளான, மூளை, நுரையீரல், இதயம் மற்றும் குருதிநாளங்கள் போன்றவற்றுள் உட்செலுத்தப்படுகின்றன. உடலில் வேதிப்பொருள்களின் அளவு அதிகரிப்பதால் புற்று நோய் தாக்கம் ஏற்படும்.
குறிப்பாக புகைபிடித்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையேயான தொடர்பு குறித்து அனைவருக்கும் தெரிந்து கொண்டுள்ள போதும், புகைப்பழக்கம் நுரையீரல் தவிர்ந்த ஏனைய உடல் உறுப்புகளையும் திசுக்களையும் கூட பாதிக் கிறது. இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் புகையிலைப்பாவனையால் சாவடைவதாக 1997 ஆம் ஆண்டில் வெளி யிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
புகையிலையில் உள்ள முக்கிய பொருளான நிகோடின் ஓர் அடிமைப்படுத்தும் பொருளாகும். இந்த நிகோடின் தான் புகைப்பிடிக்கும் உணர்வைத் தூண்டுகிறது. நிகோடின் மூளை வேதிப்பொருளின் அளவை அதிகரித்து புகைப்பிடிப்போரை இதமான உணர்வில் ஆழ்த்துகிறது. ‘டோபாமைன் அட்ரினல் சுரப்பியைத் தூண்டி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதனால் குருதி அழுத்தமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது.
சிகரெட்டின் புகையில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய 60 இற்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன. ஆர்சனிக், சயனைட்’ போன்ற விசப் பொருள்கள் நுண்ணிய அளவில் உள்ளன. மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களும் உள்ளடங்கியுள்ளன.
அவற்றுள் ஒன்று காபன் மோனாக்சைட். இது குருதியில் உள்ள பிராணவாயுவின் இடத்தைப் பிடித்துக்கொண்டு இத யம், மூளை மற்றும் அவசியமான பிற உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் புகைப்பழக்கமானது சுவை உணர்வையும் வாசனை உணர்வையும் மந்தமாக்கிவிடுகின்றது. இதனால் முதலில் இருந்ததுபோன்று உணவைச் சுவைத்து உண்ண முடியாது.
பாதிப்பில் இருந்து விடுபட முயற்சிப்போம்
புகைத்தல் தனி மனித உரிமை எனில், ஒருவரை புகைக்க வேண்டாம் என்று வற்புறுத்துவதற்கு யாருக் கும் உரிமை இல்லை. ஆனால் புகைப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம். அது மட்டுமே எம்மால் முடிந்த ஆரம்ப அறிவுரையாக இருக்கமுடியும். புகைக்கவிரும்பினால் சன நடமாட்டமற்ற நல்ல காற் றோட்டமான இடத்தை தெரிவு செய்து அங்கு சென்று புகைத்துக்கொள்ளுங்கள். இதனூடே குடும்பத்தையும் பிள்ளைகளையும் சுற்றத்தவர்களையும் நீங்கள் வெளி விடுகின்ற புகையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஏற்படப்போகின்ற பாதிப்புகளை உங்க ளோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று வரும் போது, அந்தப் பழக்கத்தினால் உடலில் ஏற்பட்ட தாக்கங்களின் பெரும்பகுதியில் இருந்து மீண்டு வருவ தற்கான சந்தர்ப்பம் கிட்டும்.
சிந்தித்துச் செயலாற்றுவோம்
புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவரும் இப்பழக்கத்திலிருந்து முழு மனதோடு விடுபட்டு அதை நடை முறைப்படுத்த முயற்சிக்கும்போது, சிலவேண்டத்தகாத அறி குறிகள் தோன்றின் மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும். புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒவ்வொருவரையும் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இந்தப் படுகுழியிலிருந்து காப்பாற்றிவிடுவதற்கு எம்மாலான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவோம்.
தன் உடலை அழித்து தான் சார்ந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை சிதைத்து, தனைச் சூழ்ந்துள்ளவர்களின் சுகாதாரத்தை சீர்குலைக்கும் செயற்போக்குடைய புகைப்பிடிப்போரே சுய சிந்தனையோடு செயற்படுங்கள். உடல் ஆரோக்கியம் பெற்று வாழ முன்வாருங்கள்.
சி.சிவன்சுதன்
பொது மருத்துவ நிபுணர்,
போதனா மருத்துவமனை,
யாழ்ப்பாணம்.