நீள நினைந்திடல்
- மது அடிமையிலிருந்து விடுபட்டு வெளி வருவது என்பது சவாலான ஒரு காரியம் என்பதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
- மதுவிலிருந்து விடுபட்டாயிற்று என்று இருப்போரிலும் சிலவேளைகளில் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம்.
- இவ்வாறு குடிக்கும் எண்ணம், ஆசை வரும் போது எல்லாம் அவர் தான் முன்பு குடிக்கு அடிமையாகவிருந்தபோது இருந்த நிலைமையை எண்ணிப் பார்க்க வேணன் டும். அப்பொழுது ஏற்பட்ட அவமானங்கள், கஸ்டங்கள், துயரங்கள், மரியாதை இழப்புகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்ப்பது நல்லது.
- சில வேளைகளில் இனி வாழ்நாள் முழுவதும் குடிக்க இயலாது எனும் எண்ணம் தலை தூக்கி மன வருத்தத்தைத் தரலாம். இவ்வாறு வருந்து பவர்கள் நீண்டநாட்கள் குடியை விட்டு இருக்கப் போகிறோம் என நினைக்காமல் – ஒவ்வொரு நாட்களும் இன்று ஒரு நாள் மட்டும் குடிக்காமல் இருப்போம் என்பதை நினைத்துக் கொண்டு அன்றைய பொழுதைக் குடிக் காமல் கழிக்கலாம்.
- குடியிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு வரும் தாங்கள் ஏன் குடியை நிறுத்தினோம்? என்ற வினாவை அடிக்கடி தமக்குள்ளே கேட்டு, அதற்கான விடையையும் அடிக்கடி மனதிலே சொல்லி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஒருவர் குடிக்கும் பொழுது இருந்த களையிழந்த முகம், அனுபவித்த உடல் ரீதி யான வலிகள், மனதில் ஏற்பட்ட காயங்கள், அலைக்கழித்த குற்றவுணர்வு, வீட்டில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், குடும்பத்தைப் பாதித்த மோசமான பணத் தட்டுப்பாடு போன்றவற்றை இடைக்கிடை நினைவுபடுத்திக் கொள்ளல் பிர யோசனமானது.
- அதுபோல் தற்போது கிடைத்திருக்கும் குடியற்ற வாழ்க்கை பற்றியும் எண்ணிப் பார்க்கலாம். இப்போது இருக்கின்ற சந்தோஷம், பூரிப்பு, மனைவியின் அன்பான கவனிப்பு, பிள்ளைகளின் உறவாடல், ஆனந்தமான தூக்கம், சமூகத்தில் மதிப்பு போன்றவை குடியிலிருந்து விடுதலை யானதற்குக் கிடைத்த சண்மானங்களல்லவா?
- ஒவ்வொருவரும் தனது புதிய வாழ்க்கை நிலையைத் தானே பாராட்டிக் கொள்ளல் வேண்டும். தற்போதுள்ள ஆரோக் கியமான மனமகிழ்வான வாழ்க்கை தொடர தமக்குத் தாமே உறுதி பூணல் வேண்டும். நான் இப்பொழுது சந்தோ வமாக இருக்கிறேன் இந்த மகிழ்ச்சி மேன்மேலும் தொடர வேண்டும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014
Posted in கட்டுரைகள்