Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    December 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Nov    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



கிரமமான மருந்துப்பாவனை (Drug Compliance)

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும்கூட சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர்.

இதற்கான முக்கிய காரணங்களாவன:

  1.  மருந்துகளின் அவசியத்தை உணராமை
  2. நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் கவனயீனமாக இருத்தல்.
  3. மருந்து பாவிக்கும் முறை பற்றியும், அதன் அவசியம் பற்றி உரிய
    விளக்கம் அளிக்கப்படாமை.
  4. வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியில் வேண்டும்
    பொழுது அதிக செலவாகின்றமை.
  5. பெண்களுக்கு குடும்பச்சுமை அதிகமாக இருத்தல்

மருந்துகளை ஒழுங்காகப் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதுரமானவையாகும்.

உதாரணமாக: சலரோகத்துக்குப் பாவிக்கவேண்டிய மருந்து ஒன்றைப் பாவிக்காமல் விடுவதால் சலரோகம் கட்டுப்பாட்டுக்கு வருவதில்லை. நோயைக் கட்டுப்படுத்து வதற்காக வைத்தியர் மருந்துகளின் அளவைக் கூட்ட நேரிடுகிறது. இதனால் நோய் குணமடையாமல் விடுவதோடு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் நோயாளி பாதிக்கப்படுகின்றார்.

இதைத் தடுப்பதானது நம் அனைவரினதும் கரங்களிலேயே உள்ளது. இதனைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம்? –

  • பாவிக்கும் மருந்துகளின் அவசியத்தையும், அவை ஒவ்வொன்றையும்
    என்ன அளவுகளில் பாவிக்கவேண்டும் என்பதையும் வைத்தியரிடம்
    இருந்து அறிந்துகொள்ள வேண்டும்.
  • நோயாளி தானாக இவற்றைச் செய்யமுடியாதவராயின், நோயாளியின் குடும்பத்தினரோ அல்லது உறவினரோ இவற்றைப் பற்றிப்பூரணமாக அறிந்துகொள்ளவேண்டும்.
  • ஒவ்வொருவகையான மருந்துகளையும் தனித்தனியே சிறிய போத்தல்களில் போட்டு, போத்தலில் மருந்தின் பெயரையும், பாவிக்கும் அளவையும் குறித்துவைக்க வேண்டும். அடுத்த தடவை மருந்தாளரிடம் போத்தல்களைக் கொடுத்து மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியில் வேண்டும்போது விலை அதிகமாக இருப்பின் ஒரே தடவையில் நீண்ட காலத்துக்கு மருந்துகளை வேண்டாமல் குறுகிய இடைவெளியில் மருந்துகளை வேண்டலாம்.
  • ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
  • குறித்த ஒரு நோய்க்குப் பல இடங்களில் வைத்தியம் செய்வதைத் தவிர்த்தல் அவசியமானது.மருந்துகளினால் பக்கவிளைவுகள் உருவாகுமிடத்து தன்னிச்சையாக மருந்துகளைப் பாவிக்காமல் விடுவதைவிட வைத்தியருடன் கலந்தாலோசித்து வேறு மாற்று மருந்துகளைப் பாவிக்கலாம்.

மேற்சொன்ன விடயங்களைக் கடைப்பிடிப்பதன்மூலம், மருந்துகள் ஒழுங்கீனமாகப் பாவிப்பதைத் தவிர்க்கலாம். ஒரு நோயாளி மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பது நோயாளி வைத்தியர் மருந்தாளர், தாதியர் முக்கியமாகக் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரிலும் தங்கியுள்ளது.

மருந்துகளை ஒழுங்காகப் பாவித்து நோயற்ற வாழ்வை அனுபவிப்போம்.

“மருந்து கால் மதி முக்கால்”

டாக்டர். S. வருண்பிரசாந்
விடுதி வைத்தியர்,
யாழ்.போதனா வைத்தியசாலை

 

Posted in கட்டுரைகள்
« சலரோக நோயால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க கையாள வேண்டியவை
ஆகார அறிவே ஆரோக்கியத்தின் முதல் படி »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com