செய்முறை
ரின்மீனை சுத்தம் செய்து சிறிய பாத்திரத்தில் இட்டு மசிக்கவும். மரக்கறியை சிறியதுண்டுகளாக வெட்டவும், கரட்டை சீவவும். வெங்காயம், மிளகாய் சிறியதாக நறுக்கவும், உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும், பின்பு ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். அதனுள் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம்பழச்சாறு அல்லது தயிர், கறிவேப்பிலை சேர்த்து கையால் மசித்து பிசைநை்து கலக்கவும். பின்பு பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
| கரட் | 1 |
| பச்சை மிளகாய் | 5 |
| வெங்காயம் | 10 |
| ரின் மீன் | 1 |
| கறிமிளகாய் | 2 |
| தக்காளி | 1 |
| உருளைக்கிழங்கு | 1 |
| எலும்பிச்சம்பழச்சாறு அல்லது தயிர் | தேவையானளவு |
| மிளகுத்தூள் | தேவையானளவு |
| உப்பு | தேவையானளவு |
| கறிவேப்பிலை | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. ஜனார்த்தனி கேசவன்


