உலகளாவியரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர் முகநாடுகளிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்ற்து. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வொன்றின்படி கொழும்பு நகரப்பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் (Pre Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.
எமது மக்களிடையே சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையானது அதிகமாக இருப்பதும் இதற்கானதொரு காரணமாகும். இதேபோல அதிகரித்துவரும் மேற்கத்தைய துரித (Fast Food) உணவுகளின் பயன்பாடும் இதற்கு முக்கிய காரணமாகும். உடற்பயிற்சியற்ற (Sedentary) வாழ்க்கை முறையும் கூட இதற்கு ஏதுவாக அமைகின்றது.
இவ்வாறான தவறான உணவுப் பழக்கங்களால் நீரிழிவு ஏற்படும் போது அதனால் பல வகையான நீண்ட காலப் பிரச்சினைகள் (Complica tions) ஏற்பட நேரிடலாம். கண் குருடாதல், சிறுநீரக செயலிழப்பு நரம்புகளில் ஏற்படும் தாக்கம் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
எமது மக்களிடையே தாகம் ஏற்படும் போது அருந்தும் பானமாக “சோடா” எனப்படுகின்ற மென்பானங்கள் அமைந்திருப்பது மிகவும் துர்ப்பாக்கியமான விடயமாகும். நாம் தேநீர் மற்றும் பழச்சாறு என்பவற்றுக்குநேரடியான முறையிலும் அதே போல பல்வேறுபட்ட மறைமுகமான வழிகளிலும் சீனியைப் பயன்படுத்தி வருகின்றோம். மென்பானங்கள் ஐஸ்கிறீம், கேக் மற்றும் இனிப் பூட்டிய பிஸ்கற் சொக்கலேட் என்பவற்றில் மிகவும் அதிகமான அளவில் சீனிச்சத்து இருக்கிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி ஒருவருடத்தில் இலங்கைய ரொருவர் உள்ளெடுக்கும் சீனியின் அளவு ஏறக்குறைய 30 கிலோகிராம் ஆகும். எமது விழாக்கள் மற்றும் சடங்குகளில் கூட சீனி மற்றும் மாச்சத்துள்ள உணவுப் பண்டங்களின் அளவு மிக அதிகமாக இருத்தலைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
எமது மண்ணிலே மூலைக்கு மூலை புதிது புதிதாக முளைக்கின்ற ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பான நிலையங்களும் இவ்வாறான சீனிப்பாவனை அதிகரித்துச் செல்வதற்குக்கு காரணமாகும்.
சுகாதார அமைச்சானது மிக அண்மையில் குளிர்பானங்களுக்கு வர்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பச்சை (மிகக் குறைந்த சீனியளவு, மஞ்சள் இடைப் பட்ட அளவு, சிவப்பு மிக அதிகளவு) ஆகிய நிறக்குறியீடுகளை மென்பானங்களில்நாம் பார்க்க முடியும்.
தீர்வுகள்
01.சிறுவர்களுக்கு ஆரம்பகாலத்திலிருந்தே அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையால் ஏற்படும் தீமைகளை எடுத் துரைத்தல் அவசியமாகும். இவ்வாறான பாவனையால்நீண்டகாலஅடிப்படையில் ஏற்படும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்தை எடுத்துரைப்பது அவசியமாகும்.
02.பொது மக்கள் மத்தியில் அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையால் ஏற்ப்டும்பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறுவது இன்றியமை யாததாகும். இதற்குப் பத்திரிகை வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையங்கள் போன்றவை உதவமுடியும்.
03.பாடசாலை உணவகங்களில் அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துள்ள உணவு களையும் துரித உணவுகளையும் தடை செய்து ஆரோக்கிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
04. தாகம் ஏற்படும்போது சோடா போன்ற மென்பானங்களை அருந்துவதைத் தவிர்த்து சீனி சேர்க்கப்படாத இயற்கையான பழச்சாறு, செவ்விளநீர் அல்லது தூயநீரை அருந்தப் பழக வேண்டும்.
05.பொதுச் சுகாதாரப் பிரிவினர் சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி குளிர்பான மற்றும்ஐஸ்கிறீம் தயாரிப்பு நிலையங்களில் சீனிப் பாவனையின் அளவைக் கண்காணித்து தேவையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும்.
06.நாம் உறவினர் மற்றும் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லும் போது சொக்கலேட் பிஸ்கற்ற்று மற்றும் ஐஸ்கிறீம்போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொண்டு செல்லாது பழங்கள் போன்ற ஆரோக்கியமான வற்றையே கொண்டு செல்லப் பழகிக்கொள்ள வேண்டும். எமது உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ சீனி மற்றும் மாச்சத்து அதிகமான தின்பண்டங்களை வழங்குவதன் மூலம் அவர்களை நாம் ஆரோக்கியமற்ற நோயாளராக மாற்றாது இருத்தல் அவசியமாகும்.
07. எந்தவொரு காரியாலயக் கூட்டமாக இருந்தாலும் விழாக்களாக இருந்தாலும் சீனியை வேறாக வைத்திருத்தல் அவசிய மாகும். இவ்வாறு வைத்திருக்கும் போது தேவைப்பட்டவர் தனக்குத் தேவையான அளவில் அதைச் சேர்த்துக் கொள்ள முடியம்.
08. இறுதியாக நாம் அனைவரும் அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துப்பாவனையினால் நீண்டகால அடிப்படையில் ஏற்படுகின்ற பாரதூரமான பின் விளைவுகளையும் தொற்றா நோய்களையும் கருத்தில் கொண்டு இன்றே செயற்பட விளைவது காலத்தின் கட்டளையாகும்.
“நாளைய மாற்றத்திற்காக இன்றே செயற்படுவோம்”
மருத்துவர்.M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை.