Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



மதுவிலிருந்து விடுபட்டவுடன் ஏற்படக்கூடிய முறைப்பாடுகள்

மதுவுக்கு அடிமையானவர்கள், மதுவின் நச்சுத்தன்மை நீங்கி, தொடர்ந்தும் மதுவை உள்ளெடுக்காத ஒருநிலையில் அவர்கள் பலவிதமான உடல் முறைப்பாடுகளையும், உளவியல் தாக்கங்களையும் வெளிக்காட்டலாம்.

உண்மையில் இவ்வாறான முறைப்பாடுகளிற் பல அவர்கள் மதுவினைப் பாவித்துக் கொண்டிருக்கும் போதே ஏற்பட்டிருக்கும். ஆயினும் மதுவானது ஒருவரை மயக்கி அவரது புலன்களைத் திரிபுபடுத்தி நோவையும் வலியையும் தெரியமாற் செய்வதனால் மதுவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவர் அவ்வேளைகளில் தனது மனக்கவலைகள், பிரச்சினைகள் பற்றி உணராது, சந்தோஷமாக இருந்தது போன்ற உணர்வைப் பெற்றிருப்பார்.

ஆனால் மதுவிலிருந்து வெளிவரும் போது உடலில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த பல பிரச்சினைகள் வெளித்தெரியத் தொடங்கும். அத்துடன் ஒருவருடைய மதுபாவனையினால் அவருக்கு குடும்பம். வேலை செய்யும் இடம் மற்றும் சமூகம் போன்ற இடங்களில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளையும் அவர் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவர். இந்தப் பிரச்சினைகளை அவர் உடல் நோய் அறிகுறிகளாகவோ, மனக் கலக்கங்களாகவோ வெளிப்படுத்தலாம்.

உடலில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பு அவசியம். அதுபோல் உள்ளத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஆதரவான உளவளத்துணையும், பிரச்சினை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதும், மனதைச் சாந்தமானதொரு நிலையில் வைத்துக்கொள்வதும் அவசியமானது.

பொதுவாக பலர் குடிப்பதன் மூலம் தமது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயலுவார்கள். அவர்கள் பார்த்த முன்னுதாரணங்களும், சினிமாக்களும் இதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் குடிப்பதனால் எமது பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் குடியைவிட்டு வாழும் போதுதான் ஒருவர் நிதானமாகச் சிந்தித்து தேவைப்பட்டால் பொருத்தமான உதவிகளைப் பெற்று தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

நன்றி –

சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்

”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014

Posted in கட்டுரைகள்
« வெறுப்பேற்றும் சிகிச்சை
மதுவை தொடர்ச்சியாக விலத்தி வைத்தல் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com