இந்த சிகிச்சையில், மது அடிமை நிலையில் உள்ளவர், நச்சகற்றல் சிகிச்சையின் பின்பு, தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு “டைசல்பி(F)ரம்” குளிசைகளைப் பாவிப்பர்.
பின்னர் ஆறா வது நாள் அவர் தனக்குப் பிடித்தமான மதுவை சிகிச்சை நிலையத்தில் இருந்தவாறே அருந்து மாறு அறிவுறுத்தப்படுவர். மது அருந்தக் கொடுக்கப்படும். அந்த வேளைகளில் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு ஒரு மருத்துவக்குழு தயாராக இருக்கும்.
இதன் போது ஏற்படுகின்ற தீவிரமான கஷ்டமான அனுபவங்களினால் மீண்டும் ஒருவர் அவ்வாறான முயற்சியை, குளிசைகளோடு மது அருந்துதலை நாடமாட்டார்.
ஆயினும் இந்த வெறுப்பேற்றும் சிகிச்சை’ என்பது மிகவும் அவசியமானது என்றில்லை. எல்லாம் அவரவர் மனவலிமையைப் பொறுத்ததே.
இதனைவிட குடிப்பவர்கள் மதுவின் மீது கொண்டுள்ள வேட்கையைக் குறைப்பதற்காக வும், குடிக்கின்ற பொழுது உள்ளெடுக்கும் மது வின் அளவைக் குறைப்பதற்கும் உதவி செய்யும் Acamprosate, Naltrexone Topiramate போன்ற மருந்துகளும் பாவனையில் இருக்கின்றன.
இவை பற்றிய மேலதிக விபரங்களை உங்கள் வைத்தியரோடு கதைத்து அறிந்து கொள்ளலாம்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014