கு டிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் அந்நிலையிலிருந்து விடுபட விரும்பினாலும், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் குடியை நிறுத்துவது தொடர்பாகப் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் பயங்களையும் கொண்டி ருக்கிறார்கள்.
குடியைத் திடீரென்று விட்டால், “கையைக் காலை இழுத்துவிடும்”, “வருத்தங்கள் வரும்” போன்ற நம்பிக்கைகள் ஆதாரமற்றவை. யாரா வது குடியைவிட முன்வந்தால், அவரோடு சேர் ந்து குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இவ்வாறான கதைகளைச் சொல்லி அவரைத் தொடர்ந்தும் குடிக்க வைப்பார்கள்.
மதுப்பழக்கத்திற்கு அடிமை யான ஒருவர் மருத்துவ உத வியுடன் அப்பழக்கத்தை முழு மையாக நிறுத்திவிட முடியும்.
எமது சமூகத்தில் மதுவுக்கு அடிமையான ஒருவர், மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கு முடிவு செய்தால், அவர் அதனைப் பூரணமாகக் கைவிடுதல் என்பதே நடைமுறைச் சாத்தியமான தெரிவாக இருக் கும்.
எம்மில் பலர் விரும்புவது போன்று குடிக்கும் அளவைக் குறைப்பதாலோ, குடிக்கின்ற இடைவெளியை அதிகரிக்கச் செய்வதாலோ, குடிக்கும் மதுபான வகைகளை மாற்றுவதாலோ ஒருவரால் குடிப்பழக் கத்திலிருந்து வெளிவர முடியாது.
இவ்வாறு முயற்சிப்ப வர்களில் பலர் மிகக் குறுகிய காலத்திலேயே தமது முயற் சியில் தோல்வியடைந்து, மது வைத் தொடர்ந்தும் வழமை போல் பாவித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
எனவே குடியை நிறுத்துவது என ஒருவர் முடிவு செய்தால், அவர் “இனி எனது வாழ்நாள் முழுவதும் குடிக்கா மல் இருப்பேன் எனத் தீர் மானிப்பதுவே இந்நோயிலிரு ந்து விடுபடும் ஒரே வழியாக இருக்கும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014