Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு உலகை அச்சுறுத்தும் பேரரக்கன்

நீரிழிவு நோயானது,சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படம் போது குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால் ஏற்படுகின்றது. அதிகர்க்கும் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகின்றது.முக்கியமாக கண்,நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாகப் பாதிக்கின்றது.

கடந்த இரு தசாப்தங்களாக உலகலாவிய ரீதியில் நீரிழிவு நோயானது பெரமளவில் அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலரையும் நீரிழிவு சரி சமனாகவே பாதிக்கின்றது. நீரிழிவு ஏற்படும் சந்தர்ப்பமானது பின்வரும் காரணிகளால் அதிகமாகியுள்ளது.

குடும்பத்தில் நீரிழிவு நோயாளர்கள் உள்ளமை,அதிக உடல் நிறை உடற்பயிற்சியின்மை இனம் ஏற்க்கனவே அறியப்பட்ட நீரழிவுக்கு முன்னான நிலை கர்ப்பகால நீரழிவு அல்லது உடல் நிறை கூடியபிள்ளைப்பேறு நீர்க்கட்டிகள் தோல் மடிப்புக்களின் கருமை படர்ந்த நிலை என்பன அவற்றில் சில.

நீரிழிவு நோயாளர்களால் ஏற்ப்படும் நரம்புப் பாதிப்புக்கள்:

நீரழிவினால் ஏற்ப்படுகின்ற உயர்மட்ட குளுக்கோஸ் ஆனது குருதிகுழாய்களில் இருவேறு விதமான சிக்கல்களை உருவாக்கும்.

1.பருமனான குருதிகுழாய்ச் சிக்கல்கள் (உதாரணம்-பாரிசவாதம்)

2.நுண்ணிய குருதிகுழாய்ச் சிக்கல்கள் (உதாரணம்-நீரிழிவு நரம்புப் பாதிப்பு)

பாரிசவாதம்:

மூளைக் குருதியானது இரு பெரும் நாடிகளூடாக வழங்கப்படுகின்றது. அந்த நாடிகளிலோ ஏற்படும் கொழுப்புப் படிவுகளாலும் அவை உடையும் போது ஏற்படும் இரத்த உறைவுக் கட்டிகளாலும் உண்டாகும் அடைப்பு மூளையில் ஏற்ப்படுத்தும் பாதிப்பினாலேயே பாரிசவாதம் உருவாகிறது. திடீரென ஏற்ப்படும் இரத்தோட்டக் குறைவினாலும் மூளையில் அப்பகுதி படிப்படியாக இறப்படையநேரிடம். இதனால் பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியில் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் பகுதி செயலிழக்கின்றது. பாரிசவாதம் வருவதற்கான சந்தர்ப்பம் சாதரண ஒருவரிலும் பார்க்க நிரிழிவு நோயாளர்களில் இரு மடங்காகவும் துரிதமாகவும் ஏற்ப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.

நீரிழிவு நோயாளர்களில் பாரிசவாதம் ஏற்படும் சந்தர்பத்தை அதிகரிக்கும் காரணிகள் குரதிக் குளூக்கோஸ் கட்டுப்பாடில்லாமல் இருத்தல் இருத்தல் அதிகரித்த உடற்பருமன் அதிகரித்த குருதிக்கொலஸ்ரோலின் அளவு ,புகைப்பிடித்தல், குடும்பத்தில் பாரிசவாதம் உள்ளமை அதிகரித்த வயது சிறுநீரில் அல்புமின்வெளியேறல் என்பனவாக அமைகின்றது.

பாரிசவாதத்தை தடுக்க மேற்க்கொள்ள வேண்டியவை:

1.குருதியில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.உடல் பருமனைக் குறைத்தல்.

3.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தல்.

4.இரத்தத்தில் குளுக்கோஸின அளவைக் குறைத்தல்.

5.புகைப்பிடித்தலை தவிர்த்தல்.

6.பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றை தவறாது உள்ளெடுத்தல்.

பாரிசவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் (ஒரு பக்ககையோ அல்லத காலோ அல்லது கையும் காலுமோ செயலிழத்தல் பேச்சுத்தடை நடைத்தள்ளாட்டம் திடீர் கண் பார்வை குறைவுகள் )உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் குருதிக்கட்டியை கரைக்கும் மருத்துவ பாரிசவாத அறிகுறி ஏற்பட்டு முதல் நான்கரை மணித்தியாலங்களுள் வழங்கப்படல் வேண்டும்.பாரிசவாதம் எற்பட்ட பின்னும் தவறாது மருந்தக்களை உட்கொள்வதோடு உடற்பயிற்சிகள் ஆலோசணைகள் என்பவற்றை ஒழுங்காக பெற்றுக்கொண்டு மேலுமொரு தாக்கம் வராமல் பாதுகாக்க வேண்டும்.

நீரழிவால் ஏற்படும் நரம்பு நோய்:

நரம்புகளிற்கு குருதியை வழங்கும் நுண் குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் நீண்ட கால உயர்குருதிக் குளுக்கோஸ் ஆகியவற்றால் அது ஏற்படகினறது.

வயதான நோயாளர்களில் இது நீரிழிவை கண்டு பிடிக்கும் போதே இணங்காணப்படலாம்.ஆனால் இன்சுலினில் தஙிகியிருக்கும் நீரிழிவை உடையவர்களில் நீரிழிவு ஏற்பட்டு பல வருடங்களின் பின்பே இதுவெளிக்காட்டப்படுகிறது. இது பின்வருமாறு வகைப்படும்.

1.சமச்சீர் உணர்ச்சி நரம்ப பாதிப்பு.

2.சடுதியான நோவுடன் கூடிய நரம்புப் பாதிப்பு.

3.ஒற்றை நரம்புப் பாதிப்பு.(பல்வேறு ஒற்றை நரம்புகள் தனித்தனியாக பாதிக்கபடல்)

4.சமச்சீரற்ற இயக்க நரம்பு பாதிப்பு.

5.தன்னியக்க நரம்பு நோய்கள்.

சமச்சீரான உணர்ச்சி நரம்பு பாதிப்பு:

இதன் ஆரம்ப அறிகுறிகளாவன நோயையோ வெப்பத்தையோ அல்லது அதிர்வுகளையோ உணரமுடியாத விறைப்பு நிலையாகும்.இதன் நாள்பட்ட நிலைகளில் பஞ்சின் மேல் நடப்பது போல் உணர்வார்கள் கால்களோ கைகளைவிட அதிகம் பாதிப்படையும். உணர்சிகள் குறைவடைவதால் சிறுசிறு காயங்களும் கவனிக்கப்கடாமல் கொப்புளங்களாகவோ அல்லது புண்களாகவோ காணப்படும்.

சடுதியான நோவுடன் கூடிய நரம்புப் பாதிப்பு:

நோயாளிகள் கால்கள் பாதங்கள் போன்றவற்றில் எரிவு நோ போன்றவற்றை கொண்டிருப்பர்.இரவுகளில வலி கூடுதலாக இருக்கும்.படக்கை விரிப்பவரின் அழுத்தமே தாங்க

முடியாமல் அவதியுறுவர் இது நீரிழிவைக் கண்டுபிடிக்கும் போதே காணப்படலாம். அத்துடன் குருதிக்குளுக்கோஸை திடீரென கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போதும் இது ஏற்படுகின்றது.

நீரிழிவை நல்ல கட்டுபாட்டில் வைத்திருந்தால் இது தானகவே 3-12 மாதங்களில் மாறும். இதில் ஒரு வகையானது நாள்பட்ட நோவுடனான பாதிப்பு நீண்ட கால நோயாளிகளிலே இது எற்படுகிறது. சிகிச்சை பயன் அளிப்பதும் கடினம்.

தனித்தனி நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு:

இந்த வகையான பாதிப்பு உடலில் எந்த நரம்பையும் பாதிக்கலாம். கண் தசை நரம்புகள் கூடுதலாக பாதிக்கப்படும். தானகவே 3-6 மாதங்களில் முழுமையாக குணமடையும்.

நீரிழிவால் ஏற்படம் தசை மெலிவு:

வயதான ஆண் நீரிழிவு நோயாளர்களிலே இது கூடுதலாக ஏற்படும்.

நோவுடன் கூடிய தசை மெலிவு ஏற்படும். தொடைகள் மற்றும் தோள்களோபாதிக்கப்படுகின்றன. தொடவே மடியாத வாறு நோவாக இருக்கும். இது சரியாக குருதிக்குளுக்கோஸை கட்டுப்படுத்தாதவர்களிலேயே காணப்படுகிறது. இது குருதியில் குளுக்கோஸை கட்டுப்படுத்த சுகமாகிவிடும்.

தன்னியக்க நரம்பு நோய்கள்:

நீரிழிவு நோயாளர்களில் இந்தப் பாதிப்பு கூடுதலாக குணங்குறிகள் வெளிக்காட்டப்படாமலே இருக்கும். அரிதாகவே குணங்குறிகள் வெளிக்காட்டப்படும். படுக்கையிலிருந்த எழம்பும் போது எற்படும் தலைச்சுற்று ,ஓய்வு நிலையிலும் அதிகரித்த இதய ஓட்டம் ,தொடர்சியான வாந்தி, இரவில் வயிற்றோட்டம் போன்றவை இதனால் ஏற்படுகின்றது.

ஆண்மைக்குறைவும் இதனாலயே ஏற்படுகின்றது. நீரிழிவு நோயாளர்கள் நரம்பு பாதிப்பை தவிர்க குளுக்கோஸை சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கால்களை கிரமமாக அவதானித்து காயங்கள், புண்கள் ஏற்படுவதை உடனுக்குடன் கண்டு சிகிச்சை பெற வேண்டும்.நீரிழிவை வெற்றி கொண்டு பாதிப்புகள் ஏற்படாமல் வாழ்வோமாக.

வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ்

நரம்பியல் நிபுணர்

யாழ் போதனா மருத்துவமனை

வைத்திய கலாநிதி சிவதி.பிரதீபன்

நரம்பியல் பிரிவு

யாழ் போதனா மருத்துவமனை

Posted in கட்டுரைகள்
« நம் கைக்கு எட்டியவை வாய்க்கும் எட்ட வேண்டும்
நீரிழிவு நோயாளிகளின் பாதங்களைக் குறிவைத்து மறக்காமல் தாக்கும் மாறாப்புண்கள்!! »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com