Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



எய்ட்ஸ்

எய்ட்ஸ் தொற்றுக்கிலக்கானவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் அதேவேளை ஏனையவர்கள் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பு பெறு தலை ஊக்கப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் முதலாம் திக தியை பன்னாட்டு எய்ட்ஸ் நோய் தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொருவருடமும் வெவ்வேறு நோக் கங்களைக் கொண்ட மகுட வாசகங்கள் ஐ.நா சபையால் அறிவிக்கப்படும். அந்த வகையில் 30ஆவது உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு எய்ட்ஸ் தினம் மகுட வாசகமாக “உங்களுடைய ஏச்ஐ.வி தொற்று நிலையை அறிந்துகொள்ளுங்கள்’ என்பதன்மூலம் அனைவரையும் பரிசோதனைக்கு உட் படுத்துவதை ஊக்கப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

இருந்த போதும் எமது இலங்கைத்திரு நாட்டின் சுகாதார அமைச்சு சற்று வித்தியாசமானதும் ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முடிவுகளின் பிரகா ரமும் 2019ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தின மகுடவாசகமாக “சமூகங்கள் மாற்றத்தை உருவாக்கலாம்” என்பதாக அறி வித்துள்ளது. இது உண்மையில் எமது நாட்டில் ஏச்.ஐ.வி தொற்றுத் தடுப்புத் தொடர்பாக முன்னேற்றகரமான சமூ கமாற்றங்களை ஊக்குவிப்பதை கருப்பொருளாகக் கொண்டு இந்த மகுட வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஏச்.ஐ.வி தொற்றுக்கிலக் கானவர்கள் தொடர்பாக எமது சமூகமனப்பாங்கானது ஆரோக்கியமனதாக இல்லை என்பதன் அடிப்படையிலேயே மேற்படி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது.

1980களின் நடுப்பகுதியிலே அமெரிக்க நாட்டிலே புதிய நோயாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நோய் இன்று உலகம் முழுவதும் 38 மில்லியன் மக்களின் வாழ்க்கையைப் பாதித்துள் ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதுமாக 1.8 மில்லி யன் மக்கள் புதிதாக தொற்றுக்கு இலக் காகி உள்ளனர். எமது நாட்டில் மொத்தமாக 3 ஆயிரத்து 600 பேர் வரையில்

இந்த நோய்த் தொற்றுக்கு இலக்காகி உள்ள போதும் இது 4 ஆயிரத்து 200 வரை நீண்டு செல்லாம். போதனா மருத்துவமனையில் உள்ள பாலியல் நோய்கள் சிகிச்சை நிலைய பதிவுகளின் படி வடமாகாணத்தைச் சேர்ந்த 45 பேர் 2014 இற்கும் 2019 இற்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக எய்ட்ஸ் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 35 பேர் வரையானவர்கள் எய்ட்ஸ் தொற்றுக்கான சிகிச்சையை இந்த சிகிச்சை நிலையத்தில் தொடர்கிறார்கள். இவர்களின் முக்கியமான பிரச்சினை சமூகத்தினருக்கு எமக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது தெரிந்தால் எமது வாழ்க்கை மிகவும் நரகமாகிவிடும் என்பதே.

பாகுபாடு காட்டுதல் தகாது
இந்த நோய்த் தொற்றுள்ளவர்களை சமூகத்தினர் ஒதுக்குவதாலும் பாகுபாடு காட்டுவதாலும் இந்த நோய் தொற்றுள்ளவர்கலும், தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிப்பவர்களிலும் தம்மைப் பரிசோதிப்பதற்கும் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கும் பின்னடிக்கிறார்கள். எமது நாட்டில் எய்ட்ஸ் தொற்றுக்கிலக்கானவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வொன்றில் முக்கியமான பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக சில விடயங்களைப் பார்ப்போமானால் எய்ட்ஸ் தொற்றுக்கிலக்கான வர்களில் 40 வீதமானவர்கள் தங்கள் பாலியல் துணைக்கு அல்லது வாழ்க் கைத்துணைக்கு தமது எய்ட்ஸ் தொற்றுப்பற்றித் தெரிவிக்க சம்மதம் தெரிவித்த போதும் 80 வீதமானவர்கள் இன்னொரு எய்ட்ஸ் தொற்றுள்ளவருக்கு தெரியப்படுத்தவே விரும்பியுள்ளனர். 13 சதவீதமானவர்கள் தமது தொற்று நிலை காரணமாக உறவினர்களின் வாய்ச் சொற்களால் பழக்கப்பட்டுள்ளதுடன் 5 வீதமானவர்கள் உடலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் தமது வார்த்தைகளாலும் உடலியல் ரீதியாகவும் இவர்களைத் துன்புறுத்தி உள்ளனர் என்பது கசப்பான உண்மை . எய்ட்ஸ் தொற்றுள்ள ஒருவர் தனது நிலையைக்கூறுகையில் “இன்றுவரை எனது எய்ட்ஸ் தொற்று நிலையை எவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து சாதார ணமாக வாழ்த்து வருகிறேன். எனது இந்நிலை சமூகத்தினருக்கு தெரிந்தால் எப்படி வாழ்வேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார். இன்னொருவர் “எனது இந்த நிலை ஊருக்குத் தெரிந்தால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளிலும் பார்க்க தற்கொலை செய்வதே மேல்” என்கிறார். இவ்வாறு எய்ட்ஸ் தொற்றுள்ளவர்கள் சமூகத்தால் ஏற்படும் ஒதுக்குதல் மற்றும் பாகுபாடு காட்டல் காரணமாக பாரிய பாதிப்புள்ளாகிறார்கள் என்பதே உண்மை .

காசநோய், தொழுநோய் மற்றும் எயிட்ஸ் போன்ற நோய்களுக்கு சமூகத்தினரின் ஒதுக்கல் மற்றும் பாகுபாடு காட்டல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற் கான முக்கியமான காரணம் இந்த நோய்கள் பற்றிய தெளிவான அறி வின்மையும் தேவையற்ற பயமும் மக்கள் மத்தியில் காணப்படுவதே யாகும். இவ்வகையான நிலைமை காரணமாக சமூகத்தின் ஆரோக்கி யம் பொருளாதாரம் என்பவற்றுக்கும் பாதிப்பேற்படுகிறது. இந்த நிலை காரணமாக தொற்றுள்ளவர்கள் மருத்துவசிகிச்சையை நாடுவதற்க்கு பயந்து மறைந்து கொள்வதால் இன்னும் அதிகளவானோர் இந்தத் தொற்றுக்கு உள்ளாக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதைவிட உளவியர் ரீதியாக மனநெருக்கீட்டு நிலைக்கு தள்ளப்பட்டு தமது வாழ்க்கையின் எதிர்காலம் எதிர்பாப்பு அற்றவர்களாகவும் விரக்தியும் தற்கொலை செய்யும் எண்ணத்துக்கும் ஆளாகிறார்கள்.

அறிவூட்டல் அவசியம்
மேற்படி பிரச்சினையை இல்லா தொழிக்க அரச அலுவலர்களுக்கு குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு இந்த நோய் தொடர்பான முழுமையான தெளிவான விளக்கத்தைப் பரப்புதல், அதே போன்று சமூகத்தின் அனைத்து மட்ட உறுப்பினர்களும் இந்த நோய் தொடர்பான சரியான தெளிவான தகவல்களை வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட உளக் கவனிப்பும் உளச்சிகிச்சையின் மூலமும் அவர்களிடம் காணப்படும் குற்ற உணர்வு தாழ்வு மனப்பாங்கு, உளநெருக்கீடு மனச்சோர்வு ஆகியவற்றைக் களைதல், குறிப்பாக எமது நாட்டின் அரச கொள்கைகள் மற்றும் சட்டங் களை குறிப்பாக இந்த நோய் தொடர்பாக மறுசீரமைத்தல் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சமூகத்தின்கண் உள்ள இந்தப் பிரச்சினையை குறைக்க முடியும். 

கட்டுரையாளர் – சுகாதாரப் பரிசோதகர்,
போதனா மருத்துவமனை.



Posted in சிந்தனைக்கு
« நீரிழிவை வெற்றி கொள்வோம்
டெங்கின் அறிகுறிகளும் அதைத் தடுக்கும் வழியும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com