நீரிழிவு நோயாளர்களும் பாதப் பராமரிப்பும்
- நீரிழிவுநோயாளர்களுக்கு விசேட பாத பராமரிப்பின் தேவைப்பாடு
- நீரிழிவு நோயாளர்களின் பாதங்களுக்கான குருதியோட்டம் குறைவாக இடம்பெறுவதால் சிறுகாயம் ஏற்பட்டாலும் கூட அவை மாறாத நிலமை ஏற்ப்படலாம்.
- நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் பாதங்கள் மரத்துப் போகின்றன. பாதங்களில் ஏற்படும் காயங்கள் தொடர்பில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
- பாதங்களின் உணர்திறன் குறைவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள்
- காலில் வெட்டுக் காயங்களும் கீறல் காயங்களும் ஏற்படுதல்
- கொப்புளம்
- சேற்றுப்புண்
- எரிகாயம், பாதங்களின் தேவையற்றதான இடங்களிலும் காயங்கள் ஏற்படுதல்
- நகம் வெட்டும் போது தோலில் வெட்டுக்காயம், கீறல் ஏற்படுதல்.
- நீரிழிவுநோயாளர் ஒருவரின் பாதங்களில் காயம் ஏற்படுத்தும் பாதக நிலமைகள்
- காயம் ஏற்பட்ட பகுதிக்கான குருதி விநியோகம் முற்றாக இடம்பெறாமையினால் காயம் ஏற்பட்டுள்ள பகுதியில் திசுக்கள் உயிரிழக்க ஆரம்பிக்கும்.
- உயிரிழந்த திசுக்களை மீளச் செயற்பட வைக்க முடியாது என்பதால் அவை சீரடையக் காலதாமதமாகும்.
- உயிரிழந்த தி சுக் கள் காணப்படும் பகுதியை வெட்டி நீக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
- நீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாத்தல்
- இரு பாதங்களையும் தினமும் பரிசோதிக்கவும். விரல் இடைவெளிகள், பாதங்களின் அடிப்பகுதி ஆகியவற்றைப்பரிசோதிக்கவும். அவை தென்படாவிட்டால் கண்ணாடி முன்பாக வைத்து அல்லது மற்றுமொரு வரின் உதவியுடன் பரிசோதிக்கவும்.
- சருமத்தில் நிறமாற்றம், வீக்கம், பாதங்களில் ஆணி உண்டாதல், கொப்புளம், தழும்பு காயம் அல்லது காயம் ஏற்படும் அறிகுறி (சிவந்து காணப்படுதல்) காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவும்,
- சிறு காயமாயினும் நன்றாகக் கழுவித்துப்புரவு செய்து வைத்தியரிடம் காட்டும் வரை சுத்தமான கோஸ் துணியால் அல்லது துணியால் மூடி விடவும். ஒரு போதும் இறுக்கமாகத் துணியை சுற்றவோ அல்லது பண்டேஜ் செய்யவோ கூடாது. அத்துடன் இறுக்கமாக பிளாஸ்டர் ஒட்டுவதையும் தவிர்க்கவும்.
- பாதங்களைத்துப்புரவான இளஞ்சுடுநீரில் அன்றாடம் கழுவவும். அதன் பின்னர் உலர விடவும். விரல் இடைவெளிகளில் நீர் தங்கியிருக்க இடமளிக்காதீர்கள்.
- பாதங்கள் காய்ந்து விடுவதை தடுப்பதற்காக தடவும் ஈரப்பதத்திலான தைலங்களை விரல் இடைவெளிகளில் தடவக்கூடாது. வெளிப்புறமாக மாத்திரம் பூசிக் கொள்ளலாம்.
- நகங்களை நீளமாக வளர விடக் கூடாது. நகங்களை குறுக்காக விரல்களுக்கு பாதுகாப்பாக வெட்டி நீக்கவும். நகங்களின் இரு முனைகளிலும் சதை உட்புறமாக அழுத்தப்படும் வகையில் நகம் வெட்டாதீர்கள்
- காலணிகள் அல்லது செருப்பு இன்றி திறந்த வெளியில் நடப்பதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் காலுறை அணிகின்றவர் எனில் துப்புரவான பருத்தியினாலான காலுறைகள் அணிவதை பழக்கமாகக் கொள்ளவும்.
- நீங்கள் அன்றாடம் காலணி, காலுறை அணிகின்றவராக இருப்பின் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையேனும் அவற்றைக் கழற்றி பாதங்களை வெறுமனே வைத்திருப்பதற்கும் பழகிக் கொள்ளுங்கள்.
- அதிக சூடான மற்றும் அதிக குளிரான திறந்தவெளிகளில்காலணிகளின்றி நடப்பதை தவிர்க்கவும்.
- அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களின் பாதங்கள் இரண்டையும் முகத்தைப் போன்று பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Posted in சிந்தனைக்கு