Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலைபடைத்திடுவோம்.

குழந்தைப்பருவம் ஆபத்தை அறியாதது. ஆழமறியாது காலை விட்டுமாட்டிக்கொள்ளும் பருவம். பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால்,விபத்துக்களில் சிக்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைத விர்க்க முடியாததே. ஓவ்வொரு வருடமும் நம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். கிட்டத்தட்ட 270000 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாககாப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்கவீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களை தவிர்த்து வளரும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதானால், விபத்துக்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் நிகழலாம் என்பது பற்றி அடிப்படை அறிவு அவசியமாகும்.

அதுபற்றி இனிப்பார்ப்போம்.

குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் சிறிய பொருட்களை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் இயல்பு கொண்டவை. இதன் விளைவாக வயிற்றோட்டம் வாந்திபேதி போன்ற தொற்றுக்கள் ஏற்படலாம். மிகவும் சிறியவிதைகள், குன்றிமணி, பட்டன் (Button),மாபிள், முத்து பொன்றவற்றை மூக்கினுள் செலுத்தும் அபாயமும் உண்டு. இது மூச்சுக்குழாயில் சிக்குண்டு மூச்சுவிடக்கஷ்டம் ஏற்பட்டு, போதிய உடனடிக்கவனம் செலுத்தாதபோது, இறப்புக் கூடசம்பவிக்கலாம். எனவே இவற்றை சிறுவர்களுக்கு எட்டாத வகையில் பேணுவதுடன், நிலத்தில் சிறுபொருட்கள் சிந்தி இல்லாதவாறு நிலத்தை கூட்டிதுப்பரவாக பேணுதல் வேண்டும்.

அண்மையில் கூட சமையல் அறையினுள் தவழ்ந்து சென்ற குழந்தை வெங்காயத்தை வாயினுள் செலுத்தி மூச்சுத்திணறலுக்குள்ளாகி பரிதாபகரமாக இறந்தசம்பவம் எல்லோர் மனங்களிலும் சோகத்தை ஏற்படுத்தயது.

அதேபோல்,வீட்டிலுள்ள வயது முதிர்ந்தவர்கள் தம் நோய்களுக்காகபாவிக்கும் கிளினிக் மருந்துமாத்திரைகளையும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தல் வேண்டும்.

குழந்தைகளைசமையல் அறையினுள் அழைத்து வருவதனைதவிர்த்தல் நன்று. சுடுகஞ்சி, சுடுநீர் கொட்டுதல், சுடு எண்ணெய் கொட்டுதல்,நெருப்புசுடுதல் போன்றஎரிகாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.அதிலும் நிலத்தில் அடுப்புவைத்துசமைக்கும் இடங்களில் மிகமிககவனமாக இருத்தல் வேண்டும். மண்ணெய்,பெற்றோல் போன்ற எரிபொருட்களை சோடாபோத்தல்களில் சேமித்தல் கூடாது. அல்லது குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைத்தல் கூடாது. சோடா எனதவறாக நினைத்து எரிபொருளை பருகும் நிலை ஏற்பட்டு உயிராபத்துக்கள் ஏற்படலாம்.
கிணற்றின் மேல் பாதகாப்புக் கம்பி வலைஅற்ற கிணறுகளின் அருகில் குழந்தைகள் செல்வதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.

இயலுமானவரை பாதுகாப்பற்ற கிணறுகளுக்கோ, மலக்குழிகளுக்கோ தடுப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் நன்று. மழைகாலங்களில், ஏற்கனவே வெட்டப்பட்டகுழிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரினுள் வீழ்ந்து, மூச்சுதிணறி இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

மோட்டார் கார்களில் பயணிக்கும் போதுமுன் சீட்டில் குழந்தையைமடியில் வைத்து பயணித்தல் கூடாது. பாதுகாப்பு இருக்கையில் குழந்தையை இருத்திபயணிப்பதே சிறந்தது. மோட்டார் சைக்கிள்களில் கைகுந்தைகளுடன் பயணிப்பதும் ஆபத்தானதே.

குழந்தைகள் தண்ணீருடன் விளையாடுவதற்கு அதிகம் பிரியப்படுவர். எனவே இது விடயத்திலும் எங்கள் கவனம் இருத்தல் வேண்டும். தம் கைக்கெட்டும் குழாயை (Tap) திறந்தும் வாளிகளில் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் தட்டியும் விளையாடுதல் குழந்தைகளின் வழக்கம். இதன் காரணமாக அடிக்கடி நெஞ்சுத் தொற்றுக்கு உள்ளாவார்கள். இதனால் வயதிற்கு ஏற்றநிறைஅதிகரிப்புஏற்படாததன்மைஏற்படலாம். எனவே தேவையற்ற குழாய்களை (Tap) நன்கு இறுக்கி மூடிவிடுவதும், தேவை முடிந்த பின் நீரை கொட்டிவிடுவதும் நன்று.

சிலசமயம் பொரியபாத்திரங்களில் உள்ளநீரில் விளையாடமுனைந்து நீரில் மூழ்கும் ஆபத்தும் நிகழலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இவ்வாறான பாத்திரங்களை மூடி கொண்டு மூடிவிடலாம்.

ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகளை நீராட்டும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியுடன் ஆலோசனையுடனும் கவனமாக நீராட்டவும்.

இரண்டு, மூன்று வயதுடைய குழந்தைகள் கதிரைகளிலோ சிறிய மேசைகளிலோ, அடிக்கடி ஏறி இறங்கி விளையாடும் தன்மைகொண்டவர்கள், பாரம் குறைந்த பிளாஸ்ரிக் கதிரையில் ஏறி இறங்கும் போதுசமனிலை தப்பி விழுந்து – தலை அடிபடும் நிலைஏற்படலாம். எனவே பிளாஸ்ரிக் கதிரைகள், சிறியமேசைகள் மற்றும் கால் உடைந்த, சமனிலை அற்ற கால்களுள்ள கதிரைகளை அவர்கள் விளையாடும் இடங்களிலிருந்துஅகற்றுதல் நன்று.

இவ் வயதொத்தவர்கள், மேசை மீதுள்ள பொருட்களை எடுப்பதற்காக மேசை விரிப்புக்களை இழுத்து கீழே வீழ்த்தும் குணம் கொண்டவர்கள். எனவேவ மேசைக்கோ, மற்றும் மேசைகளுக்கோ மேசை விரிப்புக்கள் போடாதிருத்தலே நல்லது. அல்லாது விட்டால் மேசை மீதுள்ள பொருட்கள் அவர்கள் மீது விழுங்து காயங்களையும் முறிவுகளையும் ஏற்படுத்திவிடலாம்.

மின்அழுத்தியை (iron box) பாவனையின் பின்பு வைக்கும் போதும் கூடியகவனம் செலுத்தவும். தரையில் வைத்து மின் அழுத்தியை பாவிப்பதனை தவிர்க்கவும். கண்ணாடி அலுமாரிகளை சுவர் பக்கமாக திருப்பி வைப்பதனால் வெட்டுக்காயங்களையும் அங்க இழப்புக்களையும் தவிர்த்திடலாம்.

மின்னிணைப்பு பொருத்திகளை(pulg points) அவர்களின் கைக்கெட்டாத உயரத்தில் பொருத்திக் கொள்ளுதல் அல்லது பாதுகாப்பான மூடியுள்ள Pulg Points ஜ பொருத்திக் கொள்வதன் மூலம் மின்னொழுக்கு அபாயத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மாடிப்படிகளில் தடக்கிவிழுந்து ஏற்படும் காயங்களை தவிர்த்திட பாதுகாப்புக் கதவினை மாடிப்படிகளுக்கு பொருத்திக்கொள்ளுதல் வேண்டும்.

துவிச்சக்கரவண்டியில் (சைக்கிளில்) குழந்தைகளை கொண்டுசெல்லும் போது அதற்கான ஆசனத்தை பொருத்தி, அதில் அவர்களை இருத்திக்கொண்டு செல்லலாம். மாறாக ஒருகையால் குழந்தையை தாங்கிப்பிடித்துக் கொண்டு ஒருகையால் சைக்கிளை செலுத்துவதனை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளவும்.

குழந்தைகளைபின் கரியரில் ஏற்றிச் செல்வதும் சரியான முறையன்று, ஓரளவு வளர்ந்த குழந்தைகளைபின் கரியரில் ஏற்றிச் செல்லும் போதுகால் பாதம் சில்லினுள் அகப்படும் அபாயம் எப்போதும் உள்ளது. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் பாதத்தை மூடிய சப்பாத்து அணியாது சைக்கிள் பின் கரியரில் பிள்ளைகளை ஏற்றக் கூடவே கூடாது.

வீட்டின் முன் படலையை (gate)எப்போதும் மூடி வைத்திருக்கவும். குழந்தை விளையாடும்போது பந்து தெருவுக்கு உருண்டோடுவதனாலோ அல்லது பிள்ளை தானே சுயமாகவோ வீதிக்கு ஓடிச்சென்று எதிர்பாராத வாகன விபத்துக்கள் ஏற்படலாம். இதனை தவிர்த்திட, பிள்ளைவிளையாட பாதுகாப்பான இடம் ஒன்றை தெரிவு செய்து கொடுத்திடல் வேண்டும்.

பிள்ளைகள் சேர்ந்துவிளையாடும் போதும் உங்கள் கண்காணிப்பு இருத்தல் அவசியம். அவர்களிடம் ஏற்படும் முரண்பாடுகளும் காயங்களை ஏற்படுத்தலாம்.

வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடும் போதும் அவதானம் வேண்டும். அவை உணவு உண்ணும் போதோ, நித்திரைசெய்யும் போதோ குட்டி ஈன்று இருக்கும் போதோ குழந்தைகள் அவற்றிற்கு கிட்ட செல்வதை அனுமதிக்காதீர்கள். அல்லாத விடத்து அவர்கள் அவ்விலங்குக்கடிக்கு உள்ளாக நேரிடும்.

முன்பள்ளிக்கோ, கடைத்தெருவுக்கோ நடத்திக் கூட்டிச்செல்லும் போது, போக்குவரத்து இல்லாத பக்கமாக பிள்ளையை வலுவாகபிடித்துக் கொள்ளுங்கள். இது அனாவசிய விபத்துக்களைதவிர்த்திடும்.

வீட்டில் தரித்து நின்ற வாகனத்தை பின்னோக்கி செலுத்தும் (Reverce) போது மிகமிக கவனமாக இருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை வாகனத்தின் பின்புறமாகவோ அண்மையாகவோ செல்ல அனுமதிக்காதீர்கள்.

பிள்ளைகள் தனியாகவோ அல்லது அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்தோ, அனுபவமுள்ள ஒருவரின் மேற்பார்வையின்றி நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது நீந்துவதற்கோ அனுமதிக்காதீர்கள். எம்பிரதேசத்தில் நீர்ச்சுழியில் அள்ளுண்டுமரணம் அடைந்தபலசம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.

வழுக்கும் மாபிள் தரையில் வோக்கரில் (Walker) நடைபயின்ற குழந்தை வேகக்கட்டுப்பாட்டை இழந்து திறந்திருந்தகதவின் வழி பாய்ந்து இறந்ததைத் தொடர்ந்து மேலைநாடுகள் வோக்கரை பாவிப்பதை தடைசெய்துள்ளன. நாமும் அதனை பாவிப்பதனை நிறுத்தி மூன்று சில்லு நடை வண்டிலைப யன்படுத்தலாம்.

மேலும் சிறுவர்களுக்கு வயதிற்கு பொருத்தமான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதனை கருத்தில் கொள்ளவும் விளையாட்டுப்பொருட்களின் பைகளில் இது எந்தவயதினருக்கு உகந்தது என குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை பார்த்து வாங்கிக் கொடுக்கவும். இரண்டு வயதிற்கு குறைந்தவர்களுக்கு தகரம், கம்பியினால் உருவாக்கப்பட்டவையும் கூரான விளிம்புகளை கொண்டவையுமான விளையாட்டுப்பொருட்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

சிறுவர்களின் மனத்தில் பழிவாங்கும் உணர்வு, சண்டைவெறி, மனவிகாரங்களை ஏற்படுத்தும் யுத்தவாகனங்கள், சுடுகலன் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தராதிருப்பதே சிறந்தது.

ஏவ்வளவு விலைமதிப்பான விளையாட்டுப்பொருட்களை வாங்கினாலும, அவற்றை காட்சி அலுமாரியில் (show case) வைக்காது பிள்ளைகள் விளையாடி உடைக்க கொடுப்பதே சிறந்தது. இது அவர்களின் மூளைவிருத்தி, கற்பனாசக்தியை அதிகரிக்கும் என்கிறனர் அறிஞர்கள்.

சிறுவர்கள் உள்ள வீடுகள், படிக்கும் பாடசாலைகள், சிறுவர்களுக்கு நட்புச் சூழலை வழங்குகின்றதா என்பதுடன் அவர்களுக்கு காயங்கள் ஏற்படுத்தாத, பாதுகாப்பான சூழலாக அமைந்திட பொறுப்பானவர்கள் மற்றையோருடனிணைந்து முயற்சிகள் எடுப்போம்.

எம் எதிர்காலசெல்வங்களை காப்போம். சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள் காயங்கள் என்பவை பற்றிமற்றவர்களையும் விழிப்படையசெய்வோம்.

Dr.P.ஜெசிதரன்

Posted in கட்டுரைகள்
« உணவு தயாரித்தல் போட்டி
மறைந்திருக்கும் ஆபத்து – AIDS »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com