Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குப் பின்பு உணவு கொடுப்பது எவ்வாறு ?

உங்கள் வீட்டில் 6 மாதத்தினை.அடையும் குழந்தை உள்ளதா? அவ்வாறாயின் நீங்கள் இக்கட்டுரையைக் கவனத்துடன் வாசியுங்கள். உங்கள் குழந்தைக்கான தாய்ப்பாலுடன் கூடிய உணவூட்டலுக்குத்தயாராவதற்கு இதுதுணைபுரியும்.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதுவரை கற்கண்டு நீர், கொதித்தாறிய நீர், கொத்தமல்லி, பனங்கட்டி, குளுக்கோசு நீர் என்பன கொடுக்கத் தேவையில்லை. தாயப்பாலிலுள்ள ஊட்டச்சத்தும் நீரும் குழந்தையின் வளர்ச்சிக்கும்,அதன் பசியை ஆற்றவும் போதுமானது.

ஆறுமாத முடிவில், மேலதிக ஊட்டச்சத்துக்களைப் பெறவும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பசியைப் போக்கவும், குழந்தை முழுமையான குடும்ப உணவுக்குப் பழக்கப்படவும் புதிய ஆகாரங் களைப்பழக்குவது கட்டாயமாகின்றது. அவ்வாறு உணவொன்றைக் கொடுத்த பின்பு ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும்.
முதலில் சோற்றைக் கரையச் சமைத்து (அல்லது மிக்சியில் அடித்து) அதனுடன் தாய்ப்பாலைச் சேர்த்து, நீராக்கிய பின்பு நீராகாரமாக இரண்டு, மூன்று தேக்கரண்டியளவு ஒரு தடவை கொடுக்கவும். இரண்டாம்நாளில் வேண்டியளவுக்கு ஒரு தடவையும், மூன்றாம் நாளில் நாளென்றுக்கு இரண்டு தடவையும் கொடுக்கவும்புதிய உணவுவகைகளை மிகச் சிறியளவில் ஆரம்பிப்பதே சிறந்தது.

சமிபாடு அடைகிறதா? எனக் கவனித்த பின்பே உணவின் அளவைக் கூட்டலாம். உணவூட்டலின்பின் ஓங்காளம், வயிற்றுப் பொருமல் விடாது முறுகி அழுதல் , வாந்தி, மலத்தின் தன்மை வேறுபட்டுள்ளதா? என்பவற்றை அவதானிக்கவேண்டும்.
நான்காம் நாளிலிருந்து சோற்றுடன் பருப்பையும்சேர்த்து அவித்து அரைத்து, முன்புகூறியதுபோல் தாய்ப்பால் சேர்த்துக்களித்தன்மையாக்கி 3-4 தேக்கரண்டியளவில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் கொடுக்கவும். இவ்வாறு மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும். 8ஆம் நாளிலிருந்து மீன், கோழி, ஈரல் என்பனவற்றைப் பசைபோல அரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு மாஐரீன், சமையல் எண்ணெய் அரைத்தேக்கரண்டியளவில் சேர்க்கலாம்.

இதைவிட நன்றாகப் பழுத்த பப்பாசிஅல்லது வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டுதேக்கரண்டி கொடுக்கவேண்டும். பதினோராம் நாளிலிருந்து சோற்றுடன் பூசணி, கரட், மீன், கோழி இறைச்சி என்பனவற்றைச் சேர்த்து அரைத் தேக்கரண்டிளவில் மாஐரீன் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கவும். நாளொன்றுக்கு இரு தடவை கொடுக்கலாம். பழத்தையும் மேற்குறிப்பிட்டளவில் கொடுக்கவும்.

பதினாறாம் நாளிலிருந்து முட்டை மஞ்சட்கரு அரைத் தேக்கரண்டி, இலை வகை (கீரை வல்லாரை, பொன்னாங்காணி, கங்குல்) என்பவற்றை மேற்கூறிய உணவுடன் சேர்க்கமுடியும்.

பழங்களில் மேற்கூறியவற்றுக்குப்பதிலாக மாம்பழம் அல்லது தேசிப்பழச்சாற்றின் சில துளிகள் என்பவற்றைப் பயன்படுத்தலாம். மாதுளம்பழம் கொடுப்பதானால் அதன் சாற்றை மட்டுமே கொடுக்க வேண்டும். 7மாதம் முடிவு வரை இவ்வாறாக உணவூட்டவேண்டும். 7 மாதம் முடிவடைந்த பின்பு சோறு, மரக்கறி, பருப்பு, மீன் அல்லது இறைச்சி அல்லது முட்டை மஞ்சள்கரு என்பனவற்றை அரைத்து எண்ணெய் அல்லது மாஐரீன் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இவற்றை அரை கப் அல்லது குழந்தைக்குத் தேவைப்படின் மேலதிகமாகவும் கொடுக்கலாம். பழங்களை மசித்து முக்கால் வாசி தேக்கரண்டி அளவி லும், யோகட் அல்லது தயிர் 2 அல்லது 3 தேக்கரண்டியளவிலும் கொடுக்க முடியும்.

ஒருவாரம் கழிந்த பின்பு முளைவிட்ட தானியம், நெத்தலி மீன் என்பவற்றைச் சோறும் மற்றும் பதார்த்தங்களுடன் சேர்த்துக் கொள்ளமுடியும்.

இவற்றைத் தேங்காய்ப்பால் அல்லது சமையல் எண்ணெய் விட்டுச் சமைக்கலாம். இவ்வுணவுச் சிறுதுணிக்கைகள் உள்ளதாக மசித்துக் கொடுக்கவேண்டும். இவ்வாறு நாளொன்றுக்கு 2 அல்லது 3தடவைகள் கொடுக்கலாம். சிற்றுண்டியாக உருளைக்கிழங்கு ,இராசவள்ளி, முட்டை மஞ்சள்கரு இவற்றுடன் பாதி மீன் என்பவற்றுள் ஏதாவது ஒன்றை அவித்து மசித்துக் கொடுக்கவும். சிற்றுண்டியாக இருவாரங்களின்பின் இலைக்கஞ்சி அரைக்கோப்பை கொடுக்கலாம். இதனுள் அரிசிமா பயிற்றம்மா என்பன சேர்க்கலாம்.

எட்டாம் மாத முடிவை அடையும்வேளை உங்கள் குழந்தை மேற்கூறப்பட்ட உணவை அரைக் கப் அல்லது கூட நாளொன்றுக்கு 2 அல்லது 3தடவைகள் உண்ணுகின்றாரா? என்பதை உறுதி செய்யுங்கள். மசித்த பழம் கால் கப் கொடுக்கலாம். யோகட் 6 தேக்கரண்டிவரை உண்ணலாம். பட்டர் சேர்த்த பிஸ்கட் 2 உண்ணமுடியும். வெட்டுப் பாணில் அரைத்துண்டு, அப்பத்தின் நடுப்பகுதி என்பன உண்ணலாம். குழந்தையின் கையில் கொடுத்து உண்ணப்பழக்கவும்.

ஒன்பதாம் மாத ஆரம்பித்திலிருந்து முட்டை வெள்ளைக்கருவை உணவுடன் சேர்க்கலாம். கெளபி, சோளம் என்பவற்றை நன்றாக அவித்தபின்பு உண்ணக் கொடுக்கலாம். சொட்டுக்களற்ற தேங்காய்ப் பூவினை இதனுடன் சேர்க்கலாம். வீட்டிலே தயார் செய்யப்பட்ட இடியப்பம், தோசை, அப்பம், இட்டலி, ரொட்டி பாற்கஞ்சி, பாற்சோறு என்பவற்றைக்கொடுக்கலாம்.

முழுச் சோறு, துண்டாக வெட்டிச் சமைத்த மரக்கறி என்பவற்றைக் கரண்டியால் மசித்த பின்பு கொடுத்துப்பழக்கவும் 3 வேளைகள் இதனைப் பிரதான உணவாகக் கொடுக்கவேண்டும். மரக்கறியின் பெயர் நிறம் என்பவற்றைக் கூறி குழந்தைகளுக்கு உணவின்மேல் ஆசையை ஊட்டவேண்டும். அவித்த உருளைக்கிழங்கு கரட் என்பவற்றை குழந்தையின் கையில் கொடுத்து உண்ணப் பழக்கவும், உப்பு, இனிப்பு. காரம் என்பவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும், பன்னிரண்டாம் மாத்திலிருந்து பெற்றோருடனும், உறவினருடனும், வீட்டிலும், விழாக்களிலும் குடும்ப உணவைச் சரிசமனாக இருந்து உண்ணக்கூடியதாகப் பழக்கவும்.

திருமதி சறோஜினிதேவி பாலசுந்தரம்
தாதிய சகோதரி,
நீரிழிவு சிகிக்சை நிலையம்,
யாழ். போதனா வைத்தியசாலை.

Posted in கட்டுரைகள்
« சுவாச நோய்களைத் தடுப்போம்
வயிற்றோட்டம் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com