வாழ்வை இலகுவாக்க அறிமுகமாகிய பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையானது இன்று மனிதவாழ்வின் இருப்பையேகேள் வியாக்கி நகரின் அழகையும் சுற்றுச் சூழல் சுகாதாரத் தையும் பாதிக்கும் பொருளாக மாறியுள்ளது.
இலகுவில் உக்கும் தன்மையற்ற அதன் இயல்பு காரணமாக படிப் படியாக சூழலில் சேர்ந்து சூழலின் இயல்பைக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது இதன் நேரடி மற்றும் மறைமுகத்தாக்கங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயநிலை இன்றுமனிதகுலத்திற்கு எழுந்துள்ளது.
குளப்படுக்கைகளிலும் வெள்ளநீர் ஓடும் வடிகால்களிலும் சேரும் இப்பிளாஸ்ரிக் பொருள்கள் மண்ணினுள் ஒரு படையாக உருப்பெறுவதால் வெள்ளநீர் புவியீர்ப் பின் காரணமாக மண்ணினுள் வடிந்து செல்ல முடியாத தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக நிலக்கீழ்நீர்வளம் குறைவதாகவும் வடிந்து செல்ல முடியாத நீர் மேற்பரப்பில் தங்கி வெள்ளப் பெருக்குகள் ஏற்பட வழிவகுப்பதாகவும் அறியப்பட்டுள்ளன. சென்ற வருடம் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஏற் பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இதுவும் ஒரு காரணமாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் வயல் நிலங்களின் உயிர்த் தன்மையும் உயிர் வகைகளின் பல்வகைத் தன்மையும் ஆபத்துக்குள்ளாக்கப் படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கால் நடைகளினால் உண்ணப்படும்பொலித்தீன்கள் குறிப்பாக சொப்பின் பைகள் அவற்றின் குடலினுள் சிக்குண்டு குடல் அடைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் அவை சடுதியாக இறக்கக் காரணமாக அமைகின்றன.
சுடு உணவுப்பொருள்களை பரிமாறுவதற்கு இவற்றை பயன்படுத்தும்போது இவற்றிலுள்ள இரசாயனங்கள் கரைந்து உணவுடன் கலந்து உடலினுள் சேர்ந்து உடல் கலங்களின் கட்டுப்பாடற்ற பெருக்கத்திற்கு வழி வகுத்து. நாளடைவில் அதிகளவில் புற்றுநோய் (கான்சர்) கட்டி களை உருவாக்குவதாகவும் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பிறப்புக் குறைபாடுகள் நோய்எதிர்ப்பு சக்திகுறைதல்நாளமில்லாசுரப்பிகளின் சீர்குலைவு வளர்ச்சி மற்றும் இழையங்களின் மீளுரு வாக்கம் என்பவற்றிலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன. எவர் எதைக்கூறியபோதும் இவற்றின் பாவனைகுறைந்து செல்வதாக இல்லை.
எமது சோம்பல் மனப்பான்மையும் சுற்றுச் சூழல் மீதான அக்கறையின்மையும் இயற்கை நேயமின்மையும் இதற்கு காரணம். நாளாந்தம் எம் நாட்டில் 400 தொடக்கம் 500 தொன் பொலித்தீன்கள் கழிவுகளாக உருவாக்கப்படுவதாகவும் நாளொன்றுக்கு உணவு பொதியிடலுக்காக மட்டும் பத்துமில்லியன் லஞ் சீற்கள் பாவிக்கப்படுவதாக அரசதகவல்கள்கூறுகின்றன.
பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை எரியூட்டுவது நல்ல கழிவகற்றல் முறையல்ல. இவற்றை எரியூட்டும்போது உருவாகும் டயயொக்சீன் மற்றும் யூரான் எனும் உட லுக்கு தீங்கு செய்யும் வாயுக்கள் வெளியேற்றப்படு கின்றன. இவை சுவாசம், தோல் சம்பந்தமான பலநோய் களை ஏற்படுத்துகின்றன. எந்தப் பைகளையும் எடுத்துச் செல்லாது சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அடுத்த நொடியிலேயே எத்தனை சொப்பிங் பைகள் கழிவுகளாக எங்கள் வீடு களில் உருவாகின்றன என்பது எம் அனைவருக்கும் அனுபவத்தில் உணர்ந்த உண்மையாகும்.
பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையைக் குறைத்துநடை முறை வாழ்வில்எந்தெந்தவழிகளைகடைப்பிடிக்கலாம்?
- பாடசாலைகளுக்கோ, அலுவலகங்களுக்கோ வைத்தியசாலைகளுக்கோ உணவை எடுத்துச் செல்வதற்கு லஞ்சீற் பாவிப்பதை தவிர்த்து சாப்பாட்டுப் பெட்டிகளைப் பயன்படுத்துதல்.
- வைத்தியசாலை மற்றும் பொது இடங்களுக்கு வருகை தரும் மக்களும் மற்றும் பணிபுரியும் ஊழி யர்களும் அவ்வளாகத்தினுள் பொலித்தீன் பாவனை யைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்குதல்.
- ஆன்மிக நிகழ்வுகளில் பிளாஸ்ரிக் பொலித்தீன் அலங்கார சோடனைகளைத் தவிர்த்து பாரம்பரிய அலங்கார சோடனைகளைப் பயன்படுத்துதல்.
- அரசியல் கூட்டங்களில் ரெஜிபோம், பிளாஸ்ரிக், பொலித்தீன், அலங்காரவளைவுகள், சோடனைகள் மற்றும் பதாகைகளைத் தவிர்த்து அவற்றுக்குப் பதி லாக பருத்தித்துணியாலானவற்றைப் பயன் படுத்துதல்.
- விதிகளில் கட்டப்படும் மரண நிகழ்வை அறிவிக்கும் பிளாஸ்ரிக் பனர்களைத் தவிர்த்து துணிபனர்களை பயன்படுத்தல் .
- அரச, தனியார் நிறுவனங்களில் நிகழும் ஒன்று கூடல்கள், ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் பிளாஸ்ரிக் கப் (One day Cup) பானையை நிறுத்துதல், தவிர்த்தல்.
- திருமண மண்டபங்களிலும் பிளாஸ்ரிக் கப் பாவனையை நிறுத்துதல்வி
- விழாக்களின்போது விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்கு சந்தன பூமாலைகளை ஒழுங் குபடுத்துதல் அல்லது பெருந் தன்மையுடன்மாலைகளைத் தவிர்த்தல்.
- பொதுஇடங்களிலும் வைத் தியசாலை போன்ற இடங் களிலும் இவ்வகை கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகளை மக்களுக்கு இலகுவில் தெரியும் வண் ணம் அமைத்தல் மற்றும் சேகரிக்கப் படும் இக் கழிவுகளை முறையாக அகற்றல். வைத்திய சாலையில் குடிதண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தல், பிளாரிக் தண்ணீர்ப் போத்தல்களை முடியுமானவரை வைத்தியசாலைக்குள் கொண்டு வருவதைத் தவிர்த்தல்.
- மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகளின்போது பிளாஸ்ரிக் போத்தல் குடிபானங்கள், பிளாஸ்ரிக்கப் குடிபானக் குழாய்களை (Staw) முடியுமானவரை தவிர்த்து கண்ணாடிப் பாத்திரங்களையோ, சில்வர். செரமிக் கோப்பைகளையோ பாவித்தல்.
- விழாக்களின்போது உணவுப் பொதி செய்வதற்கு ரெஜிபோம் பெட்டிகளையோ லஞ்சீற்களையோ பாவிப்பதனைத் தவிர்த்தல்.
- சுற்றுச்சூழலுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத துணியிலான, மட்டையிலான, பைகளைப்பாவிக்க அறிவுறுத்துதல்,
- சிற்றுண்டிச் சாலைகளில் பிளாஸ்ரிக் கோப்பை, பிளாஸ்ரிக் தட்டுக்களில் உணவு வழங்குவதை தவிர்த்தல்.
- தென்னம் நார் தயாரிப்பிலான துளிகைகள் துடைப் பங்களை சுத்தப்படுத்துவதற்கு பாவித்தல். இதனைக் குறைந்தது அரச அலுவலகங்களிலாவது நடை முறைப்படுத்துதல் அவசியமாகும்.
- பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளை பிளாஸ்ரிக் மீள் சுழற்சி ஆலைகளுக்கோ சேகரிப்பாளர்களுக்கோ வழங்குதல். யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய்ப் பகுதியில் இயங்கி வரும் யாழ்.மாநகரசபையின் வீரியம் மீள்சுழற்சியகத்திடமும் கையளிக்க முடியும்.
- அரசு,தனியார்வைத்தியசாலைவிடுதிகளில் கழிவுகளாக சேரும் சேலைன் (Saloi) போத்தல்கள், வயர்கள் (V Sets) என்பவற்றைதனியாகச் சேகரித்து மீள்சுழற்சிக்கு வழங்குதல்.
இவற்றை எம்வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சிப்பதுடன் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலமே இதன் தாக்கத்திலிருந்து நாம் மீளமுடியும். பிளாஸ்ரிக், பொலித் தீன் எம்பிரதேசத்தில் அறிமுகமாகிய அன்றையதினத்திலிருந்து இன்றுவரை எம் சூழலை ஆக்கிரமித்துள்ள அவற்றை அகற்றிட மீள்சுழற்சி ஆலைகளை உருவாக் கிடும் இத்தருணத்தில் அவற்றின் அபரிமித பாவனை யைக் குறைத்திடவும் முயற்சி எடுத்தால் தான் அவற்றினால் ஏற்படவுள்ள நீண்டகால தாக்கங்களிலிருந்து எம் எதிர்கால சந்ததியை காப்பாற்றிட முடியும்.
எம் அடுத்த சந்ததிக்கு நல்ல சுற்றுச் சூழலைக் கையளித்திட முடியும். அல்லாது விட்டால் பலவர்ண பிளாஸ்ரிக் அரக்கனின் இரசாயனக் கரங்களினுள் எமது எதிர்காலச் சந்ததியின் வர்ணக் கனவுகள் அனைத்தும் சிக்கி சின்னா பின்னமாகிவிடும். சிந்திப்போம் ஆக்கபூர்வமாகச் செயற்படுவோம்!
மருத்துவர் பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி,
மாநகர சபை, யாழ்ப்பாணம்.