You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Author Archive
தைரொயிட் பிரச்சினையுள்ள நோயாளருக்குக் குறிப்பாக கர்ப்பவதிகள் தெரிந்திருக்கவேண்டிய நடை முறைகள் முதன்மையாக நோக்கப்பட வேண்டியவை. தைரொயிட் நோயின் தன்மை, அதற்கான குளிசை மருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொயிட் ஓமோன்) செய்யும் கால இடைவெளி போன்றன கர்ப்பக்காலத்தில் சாதாரண நோயாளரைப் போன்றல்லாது வேறுபடுகின்றன. மருத்துவர் பரிந்துரை செய்து வழங்குகின்ற மருந்தைச் சரியான முறையில் கிராமமாக உள்ளெடுத்தல் வேண்டும் கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்கள் மிக முக்கிமானகால கட்டம் இந்தக் காலப்பகுதியின் போதே பிறக்கபோகும் குழந்தையின் மூளை […]
நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? கால் நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல். கால்களுக்கான குருதி ஓட்டம் நலிவடைதல். நீரிழிவு கட்டுப்பாடு குறைவடைதலும் குருதியில் சீனியின் அளவு அதிகரித்தலும். கிருமித் தொற்றுக்கள் ஏற்படல். பாதம் மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்புத் தன்மை, தொப்புளங்கள் மற்றும் கண்டல் காயங்கள். கால் விரல்களுக்கிடையில் ஏற்படும் கிருமித் தாக்கம். கால் விரல் நகக்கணுக்களில் ஏற்படும் கிருமித்தாக்கம். […]
ஒருகருவும் ஒருவிந்தும் மேற்கொள்ளும் கருக்கட்டலைத் தொடர்ந்து, தாயிடமிருந்து பெறப்பட்ட 23 நிறமூர்த்தங்களும் தந்தையிடமிருந்து கடத்தப்பட்ட 23 நிறமூர்த்தங்களும் ஒன்று சேர்ந்து 23 சோடிகள், அதாவது 46 நிறமூர்த்தங்களாக விளைவாக்கப்பட வேண்டும். இந்த தன்மையில் இருந்து மாறுபட்டு 21ஆவது சோடி நிறமூர்த்தத்துடன் மேலதிகமான ஒரு நிறமூர்த்தம் சோடி சேர்ந்து கொள்வதால் 47 நிறமூர்த்தங்கள்விளைவாக உருவாக்கப்படும். நிலையே “மங்கோலிஸ’ தன்மைக்குரிய காரணமாக கொள்ளப்படுகிறது. உலக மங்கோலிஸ விழிப்புணர்வு தினம் அந்தவகையிலே ‘மங்கோலிஸ’ நிலமை தொடர்பில் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்தும் […]
நோய் நொடியற்ற ஆரோக் கியமான சுகவாழ்விற்கு உடற்பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. நேரமின்றி தொழில் புரியும் மனிதன் உடற்பயிற்சியின் பயன்கள் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ அக்கறை கொள்வதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதனாலேயே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பாடசாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. உடற்பயிற்சியினை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டு வருவதற்காக பாடசாலைகளில் சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வேறுபல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் இதில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் […]
உலகில் அறியப்பட்ட உடற் பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்கிறது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலில் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி சிறந்த நிவாரணி. நீரிழிவு நோயாளிகள் தொகை ஆசியாவில் மிகவும் அதிகம் இன்றைய நிலையில், வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற நிலை […]
“அரிது அரிது மானிட ராய் பிறத்தல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகைய பெறுதற்கரிய பிறவியிலே கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு காலப்பகுதியும் சுவாரசியமானது. அதிலும் முதுமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பட்டாம்பூச்சியாய்சிற கடித்த பள்ளிப்பருவம், சுற்றித்திரிந்த கட்டிளமைப் பருவம், ஓடி ஓடி உழைத்த இளமைப்பருவம் ஆகியவற்றின் வரிசையில் உழைத்து இளைத்துப் போய் ஓய்வெடுக்கும் காலமே இந்தமுதுமைக்காலம் ஆகும். நோய்களின் இருப்பிடமாகும் முதுமை மனிதன் முதுமை அடையும் போது என்புகள் தசைகள் வலு இழத்தல், நரம்புகளின் […]
நீரிழிவு நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் மருத்துவருக்கும் நோயாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கதையாடல்போன்று இந்தக் கட்டுரை நகர்கிறது. மெற்போமின் மருத்து தொடர்பில் மருத்துவ ஆலோசனை அவசியம் கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500மி.கி.) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவு நோய்க் கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் […]
விந்தை மிகு விஞ்ஞானம் விண்ணைத் தொடும் தொழில்நுட்பம் என மிக வேகமாக முன்னேறி வரும் உலகில் மனிதனை ஆட்டிப்படைக்கும் தீவிரமான நோய்களும் பற்பல வடிவங்களில் மிக வீரியம் கொண்டு உருவெடுக்கின்றன. இருப்பினும் மருத்துவத் துறையானது புதிய பல கண்டுபிடிப்புக்களின் மூலம் இந்த நோய்களை வெற்றிகொள்ளும் வழிகளை வகுத்து மனிதனது ஆயுட் காலத்தை நீடித்து ஆரோக்கியமாக வாழ அளப்பரிய சேவை ஆற்றுகின்றது. இருப்பினும் இன்று எம்மில் சிலர் பல உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகி அதனை வென்று மீண்டெழுவது எவ்வாறு […]
தரம் 8 வகுப்பறை. காலை 8.00 மணி. ஏனைய மாணவர்கள் எல்லோரும் உடற்பயிற்சிக்காக மைதானம் சென்று விட்டார்கள். றொசானும், சுரேசும் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். றொசான் தான் அந்த வகுப்பில் மிகவும் குண்டான பையன். தசைகள் தொங்கும்படியும் கழுத்து, கை மடிப்புக்களில் தோல்தடித்து கறுத்தும் எப்பொழுதும் மனச்சோர்வுடனும் காணப்படுவான். வகுப்பறையில் கடைசி மூலை தான் அவனது இடம். மற்றவர்களால் “குண்டா“ எனஅழைக்கப்படும் அவனை, முன்வரிசையில் இருந்தால் கரும்பலகை மறைக்கிறது என சக மாணவர்கள் சண்டைக்கு இழுப்பார்கள். இதை […]
அகஞ்சுரக்கும் தொகுதியியல் வரையறை எமது உடலில் பல வகையான ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அந்த வகையிலே இவை அனைத்தையும் ஒருசேர இணைத்து ஒட்டு மொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதியென வரவிலக்கணப்படுத்துகிறோம். இந்த அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் நோய்கள் தொடர்பில் ஆராயும் பிரிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrnology) என அழைக்கப்படுகிறது. இது பொது மருத்துவத்தின் (General medicine) முதன்மைப்பிரிவாக கருதப்படுகின்றது. தவிர, இன்றைய காலச்சுழற்சியின் வேகத்தில் பொது மருத்துவத்துறையானது மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டு சிறந்த முறையில் […]